அல்லாஹ்வின் திருப்பெயரால்...
அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி, வ பரக்காத்துஹு அன்பிற்குரியவர்களே! கடந்த சில வருஷங்களாக நமதூரில் நமது ஜமாஅத் சார்பாக கோடை காலங்களில் மாணவ,மாணவியருக்கு நல்லொழுக்க பயிற்சி முகாம் ஐ தொடர்ந்து நாம் நடத்தி வருகிறோம், இந்தக் குறுகிய கால பயிற்சி முகாமில் பலன் அடைந்தவர்கள் ஏராளம், அப்படிப்பட்ட பயிற்சி முகாம் இன்ஷா அல்லாஹ் இந்த வருடமும் மிகுந்த பொருளாதார சிரமத்திற்கு இடையில் எப்படியும் நடத்தி விட வேண்டும் என்று நாம் முயற்சித்து வருகிறோம், மே மாதம் 1-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை நடைபெற இருக்கும் இந்தப் பயிற்சி முகாமில் மாணவர்கள் 8 வயதிலிருந்து 13 வயதிற்குள்ளும், மாணவிகள் (மாணவிகளுக்கு ஆலிமா பாடம் எடுப்பார்) 8 வயதிலிருந்து பெரியோர்கள் வரை உள்ளவர்கள் இப்பயிற்சி முகாமில் கலந்து கொள்ளலாம், தினமும் காலை 9:30 மணி முதல் மதியம் 2:00 மணி வரை இப்பயிற்சி முகாம் 10 நாட்கள் நடைபெறும், உங்கள் பிள்ளைகளையும் இதில் கலந்து கொள்ள செய்யுங்கள்.. இப்பயிற்சி முகாம் நல்ல முறையும் நடைபெற உங்களின் துஆவும், பொருளாதாரமும் தாராளமா வழங்கி உதவும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.. இப்படிக்கு.. ஆயிஷா பள்ளி நிர்வாகம்! சூனியமும் ஜோசியமும்தெருமுனைப் பிரச்சாரம்! 26-04-2013 வெள்ளிக்கிழமை அன்று அசர் தொழுகைக்குப் பின்பு பொதக்குடி கரீமிய லைனில் நடைபெற்றது, சகோ அப்துல் ஹமீது மஹ்ளரி அவர்கள் சூனியமும் ஜோசியமும்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்!
"இஸ்லாமும் முஸ்லிம்களும் "
22-04-2013 அன்று மாலை அசர் தொழுகைக்குப் பின்பு பொதக்குடி ஜாவியா தெருவில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது , சகோ அப்துல் ஹமீத் மஹ்ளரி அவர்கள் "இஸ்லாமும் முஸ்லிம்களும் "என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்!
சந்தனகூட்டை கண்டித்து அன்றைய மக்கத்து காபிர்களும், இன்றைய முஸ்லிம்களும் நோட்டீஸ் வினியோகம்
பொதக்குடியில்...சந்தனக் கூட்டைக்கண்டித்து அன்றைய மக்கத்து காபிர்களும்,இன்றைய முஸ்லிம்களும் "என்ற தலைப்பில் 1000 நோட்டிஸ் பொதக்குடி முழுவதும் 27-03-2013 முதல் 29-03-2013 ஆகிய தினங்கள் வரை வீடுகளிலும், கடை வீதிகளிலும் விநியோகம் செய்யப்பட்டது!
நோட்டீஸ் வினியோகம் சைத்தான் கலாச்சாரத்தை எதிர்த்து
தெருமுனை பிரச்சாரம்
நம் கிளையில் சந்தனக் கூடைக்கண்டித்து தெருமுனைப் பிரச்சாரம் 27-03-2013 அன்று மக்ரிப் தொழுகைக்குப் பின்பு சற்குரு தெருவில் நடந்தது, சகோ அப்துல் ஹமீத் மஹ்ளரி அவர்கள் "இறுதி மூச்சு வரை ஈமானுடன்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினா சைத்தான் கலாச்சாரமான சந்தன கூடை எதிர்த்து
|
மாமனிதர் நபிகள் நாயகம் புக் வழங்கி
தாவா செய்யப்பட்டது பொதக்குடி அருகாமையில் உள்ள ஆய்க்குடி மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியரை சந்தித்து .4-1-2013 மாமனிதர் நபிகள் நாயகம் புக் வழங்கி தாவா..செய்யப்பட்டது.
|
சாபத்தை பெற்றுத் தரும் சுப்ஹான மவ்லீது-நோட்டீஸ் விநியோகம்
சாபத்தை பெற்றுத் தரும் சுப்ஹான மவ்லீது நோட்டிஸ் 100 ,12-1-2013 சனிக்கிழமை அன்று விநியோகிக்கப்பட்டு தாவா செய்யப்பட்டது.
|
ஆயிஷா பள்ளிவாசலில் தற்போது நடைபெற்று வரும் பள்ளிவாசலின்
கட்டிடப் பணிகள்
முதல் மாடியில், பின் பகுதியில்..பள்ளிவாசலின் இமாமுக்கு வீடும், முன்பகுதியில்..மாடிப்படியை மூடும் பணியும் மினாரா வுக்கான கட்டிடப் பணியும் தற்போது துரிதமாக நடைபெற்று வருகிறது .
தாவா செய்யப்பட்டது பொதக்குடி அருகாமையில் உள்ள ஆய்க்குடி பஞ்சாயத்து தலைவர் பிச்சை அவர்களுக்கு 4-1-2013 அன்று இஸ்லாமிய புக் கள் கொடுத்து தாவா செய்யப்பட்டது.
|
தெருமுனைப் பிரச்சாரம் 11-1-2013
11-1-2013 வெள்ளிக்கிழமை மாலை 5 மணியளவில் பொதக்குடி, தெற்குத் தெரு சந்திப்பில், "மூடப்பழக்கங்களில் மூழ்கிய முஸ்லிம்கள் " என்ற தலைப்பில் சகோ அப்துல் ஹமீத் மஹ்ளரி அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்
|
தெருமுனைப் பிரச்சாரம்
28-12-2012 வெள்ளிக்கிழமை மாலை பொதக்குடி கீழத்தெருவில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது, சகோ அப்துல் ஹமீது மஹ்ளரி அவர்கள் "ஸஃபர் பீடை மாதமா..?" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்!
|
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பொதக்குடி கிளையின் சார்பில் 21-12-2012 வெள்ளிக்கிழமை மாலை பொதக்குடி சற்குரு தெருவில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது..இதில் அப்துல் ஹமீத் ,மஹ்ளரி அவர்கள் "இஸ்லாமும் முஸ்லிம்களும்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்!
|
4-1-2013 அன்று பொதக்குடி மேலத்தெரு,வடக்குத்தெரு சந்திப்பில் தெருமுனைப் பிரச்சாரம் நடந்தது..சகோ அப்துல் ஹமீத் மஹ்ளரி அவர்கள் "எகத்துவமும், இணைவைப்பும்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்
|
மாமனிதர் நபி (ஸல்) புக்
உலகத்தையே திரும்பிப் பார்க்க வைத்த மாமனிதர் நபிகள் நாயகம் (ஸல்்) அவர்கள் வாழ்க்கை வரலாறை .இரத்தினச் சுருக்கமாக தொகுக்கப்பட்ட . மாமனிதர் நபிகள் நாயகம் .(ஆசிரியர் பீ ஜைனுல் ஆபிதீன் ) என்ற புக்கை .மாற்றுக் கொள்கையுடைய அறிவு ஜீவிகளுக்கு வழங்கி அவர்களின் மூலம் பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு சென்றடைய தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் முடிவெடுத்தது
அந்த அடிப்படையில TNTJ பொதக்குடி கிளையின் சார்பில் ஊராடசி ஒன்றிய துவக்கப்பள்ளி.தலைமை ஆசிரியர் பைந்தமிழ் செல்வி (பொதக்குடி ).அவர்களுக்கு 17-12-2012 அன்று காலை புக் வழங்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்.
அந்த அடிப்படையில TNTJ பொதக்குடி கிளையின் சார்பில் ஊராடசி ஒன்றிய துவக்கப்பள்ளி.தலைமை ஆசிரியர் பைந்தமிழ் செல்வி (பொதக்குடி ).அவர்களுக்கு 17-12-2012 அன்று காலை புக் வழங்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்.
வாழ்வாதார உதவி
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பொதக்குடி கிளையின் சார்பில் பொதக்குடி சேகரை பகுதியைச் சேர்ந்த ஒரு ஏழை சகோதரிக்கு வாழ்வாதார உதவியாக ரூபாய் நான்காயிரம் (4000) 12-12-2012 புதன்கிழமை அன்று பொதக்குடி மர்கஸ் ல் வைத்து வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.
இறைமறுப்பாளர்கள் கடலில் மூழ்கடிக்கப்பட்டனர்.
ஏகஇறைவனின் திருப்பெயரால்...
فَالْيَوْمَ نُنَجِّيكَ بِبَدَنِكَ لِتَكُونَ لِمَنْ خَلْفَكَ آيَةً وَإِنَّ كَثِيرًا مِّنَ النَّاسِ عَنْ آيَاتِنَا لَغَافِلُونَ
உனக்குப் பின் வருவோருக்கு நீ சான்றாக இருப்பதற்காக உன் உடலை இன்று பாதுகாப்போம்.217 (என்று கூறினோம்.) மனிதர்களில் அதிகமானோர் நமது சான்றுகளை அலட்சியம் செய்வோராகவே உள்ளனர்.10:92.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
உலகின் அதிபதியாகிய அல்லாஹ் ரப்புல்ஆலமீன் குழந்தையின் தாயாருக்கு வாக்குறுதி அளித்தப் பிரகாரம்குழந்தையை ஒப்படைத்து விடுகிறான். அவரது தாயார் கவலைப்படாமல் மனம் குளிரவும், அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மை என்பதை அவர் அறிவதற்காகவும் அவரிடம் அவரைத் திரும்பச் சேர்த்தோம். எனினும் அவர்களில் அதிகமானோர் (இதை) அறிய மாட்டார்கள். திருக்குர்ஆன். 28:13.
குழந்தை தனது தாயிடம் பாலருந்தி ஃபிர்அவ்னின் மாளிகையில் வளர்ந்து வாலிபடைகிறது. அவர்களே மூஸா (அலைஹிஸ்ஸலாம்) எனும் இறைத் தூதராவ%
فَالْيَوْمَ نُنَجِّيكَ بِبَدَنِكَ لِتَكُونَ لِمَنْ خَلْفَكَ آيَةً وَإِنَّ كَثِيرًا مِّنَ النَّاسِ عَنْ آيَاتِنَا لَغَافِلُونَ
உனக்குப் பின் வருவோருக்கு நீ சான்றாக இருப்பதற்காக உன் உடலை இன்று பாதுகாப்போம்.217 (என்று கூறினோம்.) மனிதர்களில் அதிகமானோர் நமது சான்றுகளை அலட்சியம் செய்வோராகவே உள்ளனர்.10:92.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
உலகின் அதிபதியாகிய அல்லாஹ் ரப்புல்ஆலமீன் குழந்தையின் தாயாருக்கு வாக்குறுதி அளித்தப் பிரகாரம்குழந்தையை ஒப்படைத்து விடுகிறான். அவரது தாயார் கவலைப்படாமல் மனம் குளிரவும், அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மை என்பதை அவர் அறிவதற்காகவும் அவரிடம் அவரைத் திரும்பச் சேர்த்தோம். எனினும் அவர்களில் அதிகமானோர் (இதை) அறிய மாட்டார்கள். திருக்குர்ஆன். 28:13.
குழந்தை தனது தாயிடம் பாலருந்தி ஃபிர்அவ்னின் மாளிகையில் வளர்ந்து வாலிபடைகிறது. அவர்களே மூஸா (அலைஹிஸ்ஸலாம்) எனும் இறைத் தூதராவ%
கல்வி உதவி
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பொதக்குடி கிளையின் சார்பில் பொதக்குடி சேகரை பகுதியைச் சேர்ந்த ஒரு ஏழை சகோதரிக்கு , மேற்படிப்புத் தொடர 4-10-2012 அன்று,கிளையின் சார்பில் ரூபாய் 2500 (இரண்டாயிரத்து ஐநூறு) கல்வி உதவி வழங்கப்பட்டது
யூடூபிற்கு பதிலடி கொடுக்க உதவிகள்: பி.ஜே யின் முக்கிய அறிவிப்பு!
யூ டியூப் என்ற அயோக்கிய நிறுவனம் மதங்களை நிந்தனை செய்யக் கூடாது என்ற விதியின் கீழ் செயல்படுவதாக சொல்லிக் கொண்டு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறித்த கீழ்த்தரமான வீடியோவை நீக்க முடியாது. எங்கள் விதிமுறைக்கு உட்பட்டே அது உள்ளது என்று திமிராக பதில் சொல்கிறது. இதன் தயாரிப்பில் யூ டிய்ய்புக்கும் பங்கு உண்டு என்ற சந்தேகம் இதனால் வலுப்படுகிறது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை உயிரினும் மேலாக நேசிக்கும் ஒவ்வொருவரும் அடுத்தவரை எதிர்பார்த்து காத்துக் கொண்டிராமல் தன்னால் இயன்ற அளவுக்கு யூடியூபுக்கு நட்டத்தை ஏற்படுத்த வேண்டும். இது போன்ற விஷமத்தனமான ஒரு தளம் உலகில் இருப்பதே மிகவும் ஆபத்தானது என்ற அச்சம் இதனால் ஏற்படுகிறது. இன்னும் பல ஆபாசங்களையும் அவதூறுகளையும் அள்ளித் தெளிக்க யூ டியூப் தயாராக இருப்பதை நாம் உணர முடிகின்றது.
எனவே இதன் முதல் கட்டமாக அனைத்து கொள்கைச் சகோதர்ர்களுக்கும் முக்கிய வேண்டுகோளை முன்வைக்கிறேன்.
எனது உரைகள் கேள்வி பதில்கள் இஸ்லாம் இனிய மார்க்கம் போன்ற அனைத்தையும் பல்வேறு சகோதர்ர்கள் யூடியூபில் பதிந்துள்ளனர். யாரெல்லாம் எனது உரைகளை யு டியூபில் பதிந்துள்ளார்களோ அவர்கள் அனைவரும் பதிந்துள்ள எனது அனைத்து ஆக்கங்களையும் உடனே நீக்கி விடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
எனது உரையைத் தேடி இந்தக் கேடு கெட்ட தளத்துக்குச் செல்பவர்கள் நபிகள் நாயகத்துக்கு எதிரான் நச்சுக்கருத்துக்களையும் பார்க்க நான் காரணமாக ஆக விரும்பவில்லை. இதனால் மிகச் சில அளவுக்கு யூ டியூபின் பார்வையாளர்கள் குறைவார்கள். இதை மற்றவர்களும் கடைப்பிடித்து இது உலக முஸ்லிம்களை சென்றடையும் என்று நம்ப்வுகிறேன். அப்போது யூடியூபுக்கு தக்க பாடமாக அமையும் என்று நான் கருதுகிறேன்.
மீண்டும் சொல்கிறேன். எனது கேள்வி பதில்கள் எனது உரைகள் எனது எழுத்துக்கள் எனது தளத்துக்கான லிங்குகள் உள்ளிட்ட எதுவும் யூடியூபில் இருக்க வேண்டாம். பதிவு செய்துள்ள அனைவரும் தாமதமின்றி அவற்றை நீக்கி உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
கூகுளுக்கும் ஜி மெயிலுக்கும் எதிராக நாம் எத்தகைய பதிலடி கொடுக்கலாம் என்பதை ஆலோசித்து தலைமை மூலம் விரைவில் தக்க முடிவை அறிவுக்குமாறு மாநில நிர்வாகிகளுக்கு கோரிக்கை வைத்துளேன். இன்ஷா அல்லாஹ்
ஆர்ப்பாட்டங்களால் அளிக்கும் பதிலடியை விட பார்வையாளர்களைக் குறைத்து விளம்பர வருவாயைக் குறைப்பது இந்தக் கயவர்களுக்கு மிகப் பெரிய பதிலடியாக அமையும்.
பீஜே அல்லது ஜைனுல் ஆபிதீன் என்று தேடினால் யூடியூபில் எதுவும் இல்லாமல் இருக்க அனைவரும் உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
அன்புடன்
பீ.ஜைனுல் ஆபிதீன்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை உயிரினும் மேலாக நேசிக்கும் ஒவ்வொருவரும் அடுத்தவரை எதிர்பார்த்து காத்துக் கொண்டிராமல் தன்னால் இயன்ற அளவுக்கு யூடியூபுக்கு நட்டத்தை ஏற்படுத்த வேண்டும். இது போன்ற விஷமத்தனமான ஒரு தளம் உலகில் இருப்பதே மிகவும் ஆபத்தானது என்ற அச்சம் இதனால் ஏற்படுகிறது. இன்னும் பல ஆபாசங்களையும் அவதூறுகளையும் அள்ளித் தெளிக்க யூ டியூப் தயாராக இருப்பதை நாம் உணர முடிகின்றது.
எனவே இதன் முதல் கட்டமாக அனைத்து கொள்கைச் சகோதர்ர்களுக்கும் முக்கிய வேண்டுகோளை முன்வைக்கிறேன்.
எனது உரைகள் கேள்வி பதில்கள் இஸ்லாம் இனிய மார்க்கம் போன்ற அனைத்தையும் பல்வேறு சகோதர்ர்கள் யூடியூபில் பதிந்துள்ளனர். யாரெல்லாம் எனது உரைகளை யு டியூபில் பதிந்துள்ளார்களோ அவர்கள் அனைவரும் பதிந்துள்ள எனது அனைத்து ஆக்கங்களையும் உடனே நீக்கி விடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
எனது உரையைத் தேடி இந்தக் கேடு கெட்ட தளத்துக்குச் செல்பவர்கள் நபிகள் நாயகத்துக்கு எதிரான் நச்சுக்கருத்துக்களையும் பார்க்க நான் காரணமாக ஆக விரும்பவில்லை. இதனால் மிகச் சில அளவுக்கு யூ டியூபின் பார்வையாளர்கள் குறைவார்கள். இதை மற்றவர்களும் கடைப்பிடித்து இது உலக முஸ்லிம்களை சென்றடையும் என்று நம்ப்வுகிறேன். அப்போது யூடியூபுக்கு தக்க பாடமாக அமையும் என்று நான் கருதுகிறேன்.
மீண்டும் சொல்கிறேன். எனது கேள்வி பதில்கள் எனது உரைகள் எனது எழுத்துக்கள் எனது தளத்துக்கான லிங்குகள் உள்ளிட்ட எதுவும் யூடியூபில் இருக்க வேண்டாம். பதிவு செய்துள்ள அனைவரும் தாமதமின்றி அவற்றை நீக்கி உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
கூகுளுக்கும் ஜி மெயிலுக்கும் எதிராக நாம் எத்தகைய பதிலடி கொடுக்கலாம் என்பதை ஆலோசித்து தலைமை மூலம் விரைவில் தக்க முடிவை அறிவுக்குமாறு மாநில நிர்வாகிகளுக்கு கோரிக்கை வைத்துளேன். இன்ஷா அல்லாஹ்
ஆர்ப்பாட்டங்களால் அளிக்கும் பதிலடியை விட பார்வையாளர்களைக் குறைத்து விளம்பர வருவாயைக் குறைப்பது இந்தக் கயவர்களுக்கு மிகப் பெரிய பதிலடியாக அமையும்.
பீஜே அல்லது ஜைனுல் ஆபிதீன் என்று தேடினால் யூடியூபில் எதுவும் இல்லாமல் இருக்க அனைவரும் உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
அன்புடன்
பீ.ஜைனுல் ஆபிதீன்
இஸ்லாமியப் பார்வையில் பெண் சிசுக் கொலைகள்!
பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் என்பது காலங்காலமாக இருந்து வருகின்றது என்பதை நாம் வரலாறுகளின் மூலம் அறிகிறோம். அந்தக் கொடுமைகளின் உச்சக்கட்டமாக பெண் குழந்தைகளைப் பெற்றெடுப்பதையே கேவலமாகக் கருதி பிறந்த குழந்தைப் பெண்ணாகயிருப்பின் அதற்கு உயிருடனே சமாதிகட்டும் கொடுமைகள் நடந்திருக்கின்றது; ஏன் இன்றும் நடந்துக் கொண்டு தான் இருக்கின்றன. அதனால் தான் இன்றளவும் தொட்டில் குழந்தைகள் போன்ற திட்டம் போன்றவற்றை செயல்படுத்தி பெண் குழந்தைகள் காப்பகங்களை அரசாங்கமே நடத்த வேண்டிய இழி நிலைக்கு நாம் ஆளாகியிருக்கிறோம்.
அரசாங்கம் மற்றும் சமூக சேவகர்களால் நடத்தப்படும் குழந்தைகள் காப்பகம் பல இருந்தாலும் அவ்வப்போது ‘பச்சிளம் பெண் குழந்தை கிணற்றில் மிதந்தது’, ‘குப்பைத் தொட்டியில் கிடந்த பெண் சிசுவின் உடலை தெரு நாய்கள் குதறி தின்றன’ போன்ற செய்திகளை அன்றாடம் நாம் நாள் இதழ்களில் கான்கிறோம்.
இவைகள் அனைத்துதும், உலகம் எவ்வளவு தான் விஞ்ஞானத்தில் முன்னேறியிருந்தாலும் பெண்களுக்கான வன்கொடுமைகள் முற்றுப் பெறவில்லையென்பதையும் இன்னும் தொடர்ந்துக் கொண்டுதான் இருக்கின்றன என்பதையும் நமக்கு தெளிவாக உணர்த்துகிறது.
கல்வியறிவில்லாத கிரமத்திலிலுள்ள மூடர்கள் தான் பெண் குழந்தைகளைப் பளுவாகக் கருதி அவர்களை பிறந்த உடனேயே கொன்று விடுகின்றார்கள் எனில் பட்டணத்திலுள்ள படித்த மேதைகளோ அந்தப் பெண் சிசுக்கள் இந்த உலகைப் பார்ப்பதற்கு முன்னரே பெண் குழந்தை என்பதையறிந்து கருவிலேயே அதை கொலை செய்து விடுவதைப் பார்க்கிறோம். கருவிலேயே செய்யப்படும் கொலைக்கு புதிய பெயர் சூட்டி ‘கருக் கலைப்பு’ என்று என்று வேறு அழைக்கின்றனர்.
பெண் குழந்தைகளை அற்பமாகக் கருதி அதைக் கொலை செய்பவர்களை இஸ்லாம் மிக வன்மையாகக் கண்டிக்கின்றது. அறியாமைக் காலத்தில் வாழ்ந்த மக்கள் பெண் குழந்தைகள் பிறந்ததும் அதைக் கேவலமாகக் கருதி முகம் சுளித்தவர்களாக மக்களின் முகத்தில் கூடி விழிக்க திராணியற்றவர்களாக இருந்தனர்.மேலும் அந்தக் குழந்தைகளை கொன்றுவிடலாமா அல்லது இழிவுடன் இந்தக் குழந்தையை வளர்க்கலாமா என்றும் குழம்பி வந்தனர்.இதைக் கண்டிக்கும் விதமாக அகில உலக மனிதர்களுக்கும் சத்திய நேர்வழி காட்ட தன் இறுதி தீர்க்கதரிசி மூலம் இறைவன் அனுப்பிய திருவேதத்தில் கூறுகிறான்: -
“அவர்களில் ஒருவனுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது என்று நன்மாராயங் கூறப்பட்டால் அவன் முகம் கறுத்து விடுகிறது – அவன் கோபமுடையவனாகிறான். எதைக் கொண்டு நன்மாராயங் கூறப்பட்டானோ, (அதைத் தீயதாகக் கருதி) அந்தக் கெடுதிக்காக(த் தம்) சமூகத்தாரை விட்டும் ஒளிந்து கொள்கிறான் – அதை இழிவோடு வைத்துக் கொள்வதா? அல்லது அதை (உயிரோடு) மண்ணில் புதைத்து விடுவதா? (என்று குழம்புகிறான்); அவர்கள் (இவ்வாறெல்லாம்) தீர்மானிப்பது மிகவும் கெட்டதல்லவா?” (அல்-குர்ஆன் 16:58-59)
வேறு சில மூடர்களோ ஈவு இரக்கம் என்பது சிறிதுமின்றி பெண்ணாகப் பிறந்த ஒரே காரணத்துக்காக அந்தப் பச்சிளம் குழந்தையை துடிதுடிக்க உயிரோடு புதைத்து வந்தனர். நமதூர்களில் கள்ளிப்பால், அரளிவிதை, நெல் மணிகள் கொடுத்து பெண் குழந்தைகளைக் கொல்வது போல! இஸ்லாம் இவற்றை வன்மையாக கண்டிப்பதுடன், இவ்வாறு கொலை செய்யப்பட்ட அந்த பெண் சிசுக்கள், நியாயத் தீர்ப்பு நாளில் அவைகள் எதற்காக கொலை செய்யப்பட்டது என்று விசாரணை செய்யப்பட்டு கொலை செய்தவர்களுக்கு கடுமையான தண்டணையளிக்கப்படும் என்று கூறுகிறது.
நியாயத் தீர்ப்பு நாளின் ஒரே அதிபதியாகிய ஏக இறைவன் கூறுகிறான்: -
‘உயிருடன் புதைக்கப்பட்ட பெண் (குழந்தை) வினவப்படும் போது- எந்தக் குற்றத்திற்காக அது கொல்லப்பட்டது?’ என்று- (அல்-குர்ஆன் 81:8-9)
இன்னும் சிலர் எங்கே நிறைய குழந்தைகள் பெற்றால் அவர்களை வளர்த்து ஆளாக்குவதற்கு நிறைய செல்வம் தேவைப்படுமே! அதனால் நம் செல்வம் எல்லாம் தீர்ந்து நாம் ஏழையாகி விடுவோமே என்று வறுமைக்கு பயந்து ஓரிரு குழந்தைகளுக்கு மேல் கருவுற்றால் அதைக் கருகலைப்பு என்ற பெயரில் கருவில் வைத்தே கொலை செய்கின்றனர். ஆனால் இஸ்லாமோ இதையும் கண்டிப்பதுடன் உங்களுக்கும் உங்கள் குழந்தைகளுக்கும் இறைவனே உணவளிக்கிறான்! அதனால் வறுமைக்கு பயந்து உங்கள் குழந்தைகளை கொலை செய்யாதீர்கள் என்று ஆணையிடுகிறது.
‘நீங்கள் வறுமைக்குப் பயந்து உங்களுடைய குழந்தைகளைக் கொலை செய்யாதீர்கள்; அவர்களுக்கும் உங்களுக்கும் நாமே உணவை (வாழ்க்கை வசதிகளையும்) அளிக்கின்றோம் – அவர்களைக் கொல்லுதல் நிச்சயமாகப் பெரும் பிழையாகும்’ (அல்-குர்ஆன் 17:31)
‘வாருங்கள்! உங்கள் இறைவன் உங்கள் மீது விலக்கியிருப்பவற்றையும் (ஏவியிருப்பவற்றையும்) நான் ஓதிக் காண்பிக்கிறேன்; எப்பொருளையும் அவனுக்கு இணையாக வைக்காதீர்கள்; பெற்றோர்களுக்கு நன்மை செய்யுங்கள்; வறுமைக்குப் பயந்து ;உங்கள் குழந்தைகளைக் கொல்லாதீர்கள் – ஏனெனில் உங்களுக்கும், அவர்களுக்கும் நாமே உணவளிக்கின்றோம்; வெளிப்படையான இரகசியமான மானக்கேடான காரியங்களை நீங்கள் நெருங்காதீர்கள்; அல்லாஹ் தடுத்துள்ள எந்த ஓர் ஆத்மாவையும் நியாயமானதற்கு அல்லாமல் – கொலை செய்யாதீர்கள் – இவற்றை நீங்கள் உணர்ந்து கொள்வதற்காக (இறைவன்) உங்களுக்கு (இவ்வாறு) போதிக்கின்றான்’ (அல்-குர்ஆன் 6:151)
இஸ்லாம் ஒரு மதமல்ல! மாறாக அகில உலக மாந்தர்களுக்கும் ஏற்ற இறைவனால் அங்கீகரிக்கப்பட்ட ஓர் உன்னத வாழ்வியல் நெறிமுறையாகும். இது ஒரு மனிதன் பிறந்தது முதல் இறக்கும் வரையிலான அவனது அனைத்து வாழ்வியல் அம்சங்கங்களையும் உள்ளடக்கிய வாழ்க்கைத் தத்துவமாகும். இதை முறையாகப் பின்பற்றுபவர்கள் இத்தகைய சிசுக்கொலைகளை ஒருபோதும் செய்யமாட்டார்கள். இதைச் செய்பவர்கள் எல்லாம் இஸ்லாம் என்னும் அழகிய வாழ்க்கை முறையை விட்டுவிட்டு ஒரே இறைவனல்லாத பிற இணை தெய்வங்களை வணங்குபவர்களும் இஸ்லாம் என்னும் நேரிய வழிமுறையை விட்டும் தவறியவர்களும் தான் என்று இஸ்லாம் கூறுகிறது.
இறைவன் கூறுகிறான்: -
‘இவ்வாறே இணை வைப்போரில் பெரும்பாலோருக்கு, அவர்களுடைய குழந்தைகளையே கொலை செய்வதை அவர்களுடைய தெய்வங்கள் அழகாக்கி வைத்துள்ளன; அவர்களை நாசப்படுத்தி, அவர்களுடைய மார்க்கத்தையும் குழப்பத்திலாக்கிவிட்டன’ (அல்-குர்ஆன் 6:137)
‘எவர்கள் அறிவில்லாமல் மூடத்தனமாக தம் குழந்தைகளைக் கொலை செய்தார்களோ; இன்னும் தங்களுக்கு அல்லாஹ் உண்ண அனுமதித்திருந்ததை அல்லாஹ்வின் மீது பொய் கூறி (ஆகாதென்று) தடுத்துக் கொண்டார்களோ, அவர்கள் வழிகெட்டு விட்டனர், நேர்வழி பெற்றவர்களாக இல்லை’ (அல்-குர்ஆன் 6:140)
எனவே, என தருமை சகோதர, சகோதரிகளே! நாம் சிந்தித்து செயலபட்டு சிசுக்கொலைகள் எந்த வகையில் நடைபெற்றாலும் அவற்றைத் தடுத்து நிறுத்தப் பாடுபடுவோமாக! இறைவன் காட்டும் நேர்வழியில் நடந்திட முயற்சிப்போமாக!
பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் என்பது காலங்காலமாக இருந்து வருகின்றது என்பதை நாம் வரலாறுகளின் மூலம் அறிகிறோம். அந்தக் கொடுமைகளின் உச்சக்கட்டமாக பெண் குழந்தைகளைப் பெற்றெடுப்பதையே கேவலமாகக் கருதி பிறந்த குழந்தைப் பெண்ணாகயிருப்பின் அதற்கு உயிருடனே சமாதிகட்டும் கொடுமைகள் நடந்திருக்கின்றது; ஏன் இன்றும் நடந்துக் கொண்டு தான் இருக்கின்றன. அதனால் தான் இன்றளவும் தொட்டில் குழந்தைகள் போன்ற திட்டம் போன்றவற்றை செயல்படுத்தி பெண் குழந்தைகள் காப்பகங்களை அரசாங்கமே நடத்த வேண்டிய இழி நிலைக்கு நாம் ஆளாகியிருக்கிறோம்.
அரசாங்கம் மற்றும் சமூக சேவகர்களால் நடத்தப்படும் குழந்தைகள் காப்பகம் பல இருந்தாலும் அவ்வப்போது ‘பச்சிளம் பெண் குழந்தை கிணற்றில் மிதந்தது’, ‘குப்பைத் தொட்டியில் கிடந்த பெண் சிசுவின் உடலை தெரு நாய்கள் குதறி தின்றன’ போன்ற செய்திகளை அன்றாடம் நாம் நாள் இதழ்களில் கான்கிறோம்.
இவைகள் அனைத்துதும், உலகம் எவ்வளவு தான் விஞ்ஞானத்தில் முன்னேறியிருந்தாலும் பெண்களுக்கான வன்கொடுமைகள் முற்றுப் பெறவில்லையென்பதையும் இன்னும் தொடர்ந்துக் கொண்டுதான் இருக்கின்றன என்பதையும் நமக்கு தெளிவாக உணர்த்துகிறது.
கல்வியறிவில்லாத கிரமத்திலிலுள்ள மூடர்கள் தான் பெண் குழந்தைகளைப் பளுவாகக் கருதி அவர்களை பிறந்த உடனேயே கொன்று விடுகின்றார்கள் எனில் பட்டணத்திலுள்ள படித்த மேதைகளோ அந்தப் பெண் சிசுக்கள் இந்த உலகைப் பார்ப்பதற்கு முன்னரே பெண் குழந்தை என்பதையறிந்து கருவிலேயே அதை கொலை செய்து விடுவதைப் பார்க்கிறோம். கருவிலேயே செய்யப்படும் கொலைக்கு புதிய பெயர் சூட்டி ‘கருக் கலைப்பு’ என்று என்று வேறு அழைக்கின்றனர்.
பெண் குழந்தைகளை அற்பமாகக் கருதி அதைக் கொலை செய்பவர்களை இஸ்லாம் மிக வன்மையாகக் கண்டிக்கின்றது. அறியாமைக் காலத்தில் வாழ்ந்த மக்கள் பெண் குழந்தைகள் பிறந்ததும் அதைக் கேவலமாகக் கருதி முகம் சுளித்தவர்களாக மக்களின் முகத்தில் கூடி விழிக்க திராணியற்றவர்களாக இருந்தனர்.மேலும் அந்தக் குழந்தைகளை கொன்றுவிடலாமா அல்லது இழிவுடன் இந்தக் குழந்தையை வளர்க்கலாமா என்றும் குழம்பி வந்தனர்.இதைக் கண்டிக்கும் விதமாக அகில உலக மனிதர்களுக்கும் சத்திய நேர்வழி காட்ட தன் இறுதி தீர்க்கதரிசி மூலம் இறைவன் அனுப்பிய திருவேதத்தில் கூறுகிறான்: -
“அவர்களில் ஒருவனுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது என்று நன்மாராயங் கூறப்பட்டால் அவன் முகம் கறுத்து விடுகிறது – அவன் கோபமுடையவனாகிறான். எதைக் கொண்டு நன்மாராயங் கூறப்பட்டானோ, (அதைத் தீயதாகக் கருதி) அந்தக் கெடுதிக்காக(த் தம்) சமூகத்தாரை விட்டும் ஒளிந்து கொள்கிறான் – அதை இழிவோடு வைத்துக் கொள்வதா? அல்லது அதை (உயிரோடு) மண்ணில் புதைத்து விடுவதா? (என்று குழம்புகிறான்); அவர்கள் (இவ்வாறெல்லாம்) தீர்மானிப்பது மிகவும் கெட்டதல்லவா?” (அல்-குர்ஆன் 16:58-59)
வேறு சில மூடர்களோ ஈவு இரக்கம் என்பது சிறிதுமின்றி பெண்ணாகப் பிறந்த ஒரே காரணத்துக்காக அந்தப் பச்சிளம் குழந்தையை துடிதுடிக்க உயிரோடு புதைத்து வந்தனர். நமதூர்களில் கள்ளிப்பால், அரளிவிதை, நெல் மணிகள் கொடுத்து பெண் குழந்தைகளைக் கொல்வது போல! இஸ்லாம் இவற்றை வன்மையாக கண்டிப்பதுடன், இவ்வாறு கொலை செய்யப்பட்ட அந்த பெண் சிசுக்கள், நியாயத் தீர்ப்பு நாளில் அவைகள் எதற்காக கொலை செய்யப்பட்டது என்று விசாரணை செய்யப்பட்டு கொலை செய்தவர்களுக்கு கடுமையான தண்டணையளிக்கப்படும் என்று கூறுகிறது.
நியாயத் தீர்ப்பு நாளின் ஒரே அதிபதியாகிய ஏக இறைவன் கூறுகிறான்: -
‘உயிருடன் புதைக்கப்பட்ட பெண் (குழந்தை) வினவப்படும் போது- எந்தக் குற்றத்திற்காக அது கொல்லப்பட்டது?’ என்று- (அல்-குர்ஆன் 81:8-9)
இன்னும் சிலர் எங்கே நிறைய குழந்தைகள் பெற்றால் அவர்களை வளர்த்து ஆளாக்குவதற்கு நிறைய செல்வம் தேவைப்படுமே! அதனால் நம் செல்வம் எல்லாம் தீர்ந்து நாம் ஏழையாகி விடுவோமே என்று வறுமைக்கு பயந்து ஓரிரு குழந்தைகளுக்கு மேல் கருவுற்றால் அதைக் கருகலைப்பு என்ற பெயரில் கருவில் வைத்தே கொலை செய்கின்றனர். ஆனால் இஸ்லாமோ இதையும் கண்டிப்பதுடன் உங்களுக்கும் உங்கள் குழந்தைகளுக்கும் இறைவனே உணவளிக்கிறான்! அதனால் வறுமைக்கு பயந்து உங்கள் குழந்தைகளை கொலை செய்யாதீர்கள் என்று ஆணையிடுகிறது.
‘நீங்கள் வறுமைக்குப் பயந்து உங்களுடைய குழந்தைகளைக் கொலை செய்யாதீர்கள்; அவர்களுக்கும் உங்களுக்கும் நாமே உணவை (வாழ்க்கை வசதிகளையும்) அளிக்கின்றோம் – அவர்களைக் கொல்லுதல் நிச்சயமாகப் பெரும் பிழையாகும்’ (அல்-குர்ஆன் 17:31)
‘வாருங்கள்! உங்கள் இறைவன் உங்கள் மீது விலக்கியிருப்பவற்றையும் (ஏவியிருப்பவற்றையும்) நான் ஓதிக் காண்பிக்கிறேன்; எப்பொருளையும் அவனுக்கு இணையாக வைக்காதீர்கள்; பெற்றோர்களுக்கு நன்மை செய்யுங்கள்; வறுமைக்குப் பயந்து ;உங்கள் குழந்தைகளைக் கொல்லாதீர்கள் – ஏனெனில் உங்களுக்கும், அவர்களுக்கும் நாமே உணவளிக்கின்றோம்; வெளிப்படையான இரகசியமான மானக்கேடான காரியங்களை நீங்கள் நெருங்காதீர்கள்; அல்லாஹ் தடுத்துள்ள எந்த ஓர் ஆத்மாவையும் நியாயமானதற்கு அல்லாமல் – கொலை செய்யாதீர்கள் – இவற்றை நீங்கள் உணர்ந்து கொள்வதற்காக (இறைவன்) உங்களுக்கு (இவ்வாறு) போதிக்கின்றான்’ (அல்-குர்ஆன் 6:151)
இஸ்லாம் ஒரு மதமல்ல! மாறாக அகில உலக மாந்தர்களுக்கும் ஏற்ற இறைவனால் அங்கீகரிக்கப்பட்ட ஓர் உன்னத வாழ்வியல் நெறிமுறையாகும். இது ஒரு மனிதன் பிறந்தது முதல் இறக்கும் வரையிலான அவனது அனைத்து வாழ்வியல் அம்சங்கங்களையும் உள்ளடக்கிய வாழ்க்கைத் தத்துவமாகும். இதை முறையாகப் பின்பற்றுபவர்கள் இத்தகைய சிசுக்கொலைகளை ஒருபோதும் செய்யமாட்டார்கள். இதைச் செய்பவர்கள் எல்லாம் இஸ்லாம் என்னும் அழகிய வாழ்க்கை முறையை விட்டுவிட்டு ஒரே இறைவனல்லாத பிற இணை தெய்வங்களை வணங்குபவர்களும் இஸ்லாம் என்னும் நேரிய வழிமுறையை விட்டும் தவறியவர்களும் தான் என்று இஸ்லாம் கூறுகிறது.
இறைவன் கூறுகிறான்: -
‘இவ்வாறே இணை வைப்போரில் பெரும்பாலோருக்கு, அவர்களுடைய குழந்தைகளையே கொலை செய்வதை அவர்களுடைய தெய்வங்கள் அழகாக்கி வைத்துள்ளன; அவர்களை நாசப்படுத்தி, அவர்களுடைய மார்க்கத்தையும் குழப்பத்திலாக்கிவிட்டன’ (அல்-குர்ஆன் 6:137)
‘எவர்கள் அறிவில்லாமல் மூடத்தனமாக தம் குழந்தைகளைக் கொலை செய்தார்களோ; இன்னும் தங்களுக்கு அல்லாஹ் உண்ண அனுமதித்திருந்ததை அல்லாஹ்வின் மீது பொய் கூறி (ஆகாதென்று) தடுத்துக் கொண்டார்களோ, அவர்கள் வழிகெட்டு விட்டனர், நேர்வழி பெற்றவர்களாக இல்லை’ (அல்-குர்ஆன் 6:140)
எனவே, என தருமை சகோதர, சகோதரிகளே! நாம் சிந்தித்து செயலபட்டு சிசுக்கொலைகள் எந்த வகையில் நடைபெற்றாலும் அவற்றைத் தடுத்து நிறுத்தப் பாடுபடுவோமாக! இறைவன் காட்டும் நேர்வழியில் நடந்திட முயற்சிப்போமாக!
நோன்பு பெருநாள் திடல் தொழுகை
இந்த வருட நோன்பு பெருநாள் திடல் தொழுகை நம் ஜமாத்தின் சார்பாக இறைவன் உதவியால் நல்லவிதமாக நடந்து முடிந்தது அல்ஹம்துலில்லாஹ், ஏராளமானோர் கலந்து கொண்டு பெருநாள் தொழுகையை சிறப்பித்தனர்.
ஃபித்ரா விநியோகம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பொதக்குடி கிளையின் சார்பில்...மாநில தலைமையின் சார்பில் மாவட்டத் தலைமை கொடுத்த 13,000 ரூபாயும்,கிளையின் மூலம் வசூலான 17,000 ஆக மொத்தம் (30,000) முப்பது ஆயிரத்திற்கு, பெருநாள் உணவிற்குத் தேவையான அனைத்துப் பொருட்களும் (ஒரு பொட்டலம் 250 ரூபாய் )120 ஏழைக குடும்பங்களுக்கு பெருநாள் முதல் நாள் ஃபித்ரா விநியோகம் செய்யப்பட்டது !
நமது கிளையில் நடைப்பெற்ற ரமலான் நிகழ்வுகள்
சென்ற வருஷங்களைப் போல நோன்புக் கஞ்சி காய்ச்சி,அதை நோன்பாளிகளுக்கு வழங்குதல்,பள்ளியில் பெண்களுக்கும், ஆண்களுக்கும் இரவுத் தொழுகை ஏற்பாடு செய்தல்,நோன்பாளிகளுக்கு "இஃப்தார்" உணவு ஏற்பாடு செய்தல்,போன்றவை அல்லாஹ்வின் அருளால் இந்த வருஷமும் மிகச் சிறப்பாக செயல் படுத்தப்பட்டு வருகிறது!
தவ்ஹீத் பள்ளி தற்போதைய நிலவரம்
குர்ஆன் வசனம்
தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் பொதக்குடி கிளையின் சார்பில் பொதக்குடி பதுரியா தெரு முனையில்..பஸ் ஸ்டாப் யில் குர்ஆன் வசனம் சுவர் விளம்பரம்! 7-07-2012 அன்று செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்!
தஃவா
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பொதக்குடி கிளையில் 9-07-2012 அன்று பொதக்குடி அருகாமையில் உள்ள பாலாக்குடி என்ற ஊரைச் சேர்ந்த சகோ...துரைராஜ் என்பவருக்கு திருக்குர்ஆன் வழங்கி தஃவா செய்யப்பட்டது! அல்ஹம்துலில்லாஹ்!
மாணவரணி தேர்வு
பொதக்குடி கிளையில் 3-07-2012 ஞாயிற்றுக் கிழமை அன்று கிளை தலைவர் முஹம்மது இஸ்மாயில் அவர்களின் தலைமையில் காலை 10:00 மணியளவில் மாணவரணி தேர்வு நடைபெற்றது
மாணவரணி செயலாளர்புர்ஹான் 9788035367.
துணை செயலாளர்கள் : ரஸூல் முஹம்மது 9865540796.
முஹம்மது ஆஷிக் 9788771599
ஹாமித் 8973152212
ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு, மாணவர்களை எவ்வாறெல்லாம் பண்படுத்த முயற்சி செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
மாணவரணி செயலாளர்புர்ஹான் 9788035367.
துணை செயலாளர்கள் : ரஸூல் முஹம்மது 9865540796.
முஹம்மது ஆஷிக் 9788771599
ஹாமித் 8973152212
ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு, மாணவர்களை எவ்வாறெல்லாம் பண்படுத்த முயற்சி செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இரு இடங்களில் தெருமுனை பிரச்சாரம்
14-06-2012 அன்று மக்ரிப் தொழுகைக்குப் பின்பு பொதக்குடி கிளையின் சார்பில் "மைதீன் தெருவில் தெருமுனைப் பிரச்சாரம் நடைப்பெற்றது "மறுமைக்காக வாழ்வோம்!" என்ற தலைப்பில் சகோ..அப்துல் ஹமீது அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.
13-06-2012 அன்று மக்ரிப் தொழுகைக்குப் பின்பு பொதக்குடி கிளையின் சார்பில் "ஜலால் தெருவில் தெருமுனைப் பிரச்சாரம் நடைப்பெற்றது "வீட்டைச் சீர் திருத்துவோம்!" என்ற தலைப்பில் சகோ..அப்துல் ஹமீது அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.
கோடைக்கால பயிற்சி முகாம் முடிவுக்குப்பின்
பர்சளிப்பு மற்றும் சான்றிதழ் வழங்கிய நிகழ்வு
மே 10-05-2012 முதல் மே 24-05-2012 வரை மாணவ,மாணவிகளுக்காக கோடைகால பயிற்சி முகாம் நடைபெற்றது பயிற்சியின் நிறைவு நாள் அன்று மாணவ,மாணவிகளுக்கு பரிசும்,சான்றிதழும் வழங்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ் !!
தெரு முனை பிரச்சாரம்
26-05-2012 அன்று பொதக்குடி நாடார் தெரிவில் தெருமுனைப் பிரச்சாரம் மக்ரிபிற்குப் பின்பு நடைபெற்றது... சகோ அப்துல் ஹமீத் அவர்கள் வீட்டை சீர் படுத்துவோம்! என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்! அல்ஹம்துலில்லாஹ்.
20-05-2012 கூத்தாநல்லூரில் வரதட்சனை ஒழிப்பு மாநாட்டிற்கு சகோ பீஜே அவர்கள் சிறப்புரையாற்ற வருகை தந்தார் அவரிடம் பொதக்குடியில் புதிதாக கட்டப்பட்டு வரும் தவ்ஹீத் பள்ளியை பார்வையிட வருகை தரும்படி நமது நிர்வாகம் அவரிடம் கோரிக்கை வைத்தது,அந்தக் கோரிக்கையை சகோ பீஜே அவர்கள் ஏற்று 21-05-2012 அன்று காலை 8:00 மணியளவில் வருகை தந்தார் புதிய பள்ளியை பார்வையிட்டதுடன் தஃவா இன்னும் வீரியப்படுத்த சில ஆலோசனைகளையும் வழங்கினார்! அல்ஹம்துலில்லாஹ்!!
|
22-05-2012 அன்று மக்ரிப் தொழுகைக்குப் பின்பு பொதக்குடி 'A' பஜாரில் தெருமுனைப் பிரச்சாரம் நடைப்பெற்றது "உண்மையான தவ்ஹீத் எது..? என்ற தலைப்பில் சகோ..அப்துல் ஹமீது அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.
|
கூத்தாநல்லூரில் த த ஜ வின் புரட்சி (எதிரிகளின் சூழ்ச்சி படு வீழ்ச்சி)
கூத்தாநல்லூரில் நடந்து முடிந்த " வரதச்சனை மற்றும் மார்க்க விளக்க பொது கூட்டம் " எதிரிகளின் சூழ்ச்சியையும் மீறி மக்கள் ஆர்ப்பரித்த மாபெரும் மக்கள் கடல், தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத்திற்கு எதிராக அதன் எதிரிகள் என்னதான் காழ்ப்புணர்ச்சி என்னும் ஏவுகணையை ஏவினாலும் அதன் வளர்ச்சி ஒருபோதும் வீழ்ச்சி அடைந்தது இல்லை.....என்பதை காழ்புணர்ச்சி கயவர்கள் உணர்ந்து கொண்டால் போதும்.
பொதக்குடியில் பல்வேறு பகுதிகளில் சுவர் விளம்பரம்
இன்ஷா அல்லாஹ் கூத்தாநல்லூரில் நடைபெற இருக்கும் மார்க்க விளக்கப் பொதுக்கூட்டத்திற்கு பொதக்குடியில் பல்வேறு பகுதிகளில் 5-05-2012 அன்று சுவர் விளம்பரம் செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்.
கோடை கால பயிற்சி முகாம் ஆரம்பம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பொதக்குடி கிளையின் சார்பில்..மாணவ,மாணவியருக்கான கோடை காலப் பயிற்சி முகாம் 10-05-2012 to 19-05-2012 tntj மர்கசில் நடைபெற்று வருகிறது... ஆண்கள் 33 நபர்களும் , பெண்கள் 40 நபர்களும் இப்பயிற்சி முகாமில் கலந்து கொண்டு பயன் பெற்று வருகின்றனர் அல்ஹம்துலில்லாஹ்!
ஏகத்துவ இறை இல்லத்தின் தொடர் பணிகள்
பொதக்குடியில் ஏகத்துவப் பள்ளியின் கட்டுமானப் பணிகள் அல்லாஹ்வின் அருளால் மிகச்சிறப்பாக நடைபெற்று வருகிறது.
இஸ்லாத்தை அறிய முயலும் பொதக்குடி இல் ஒரு மருத்துவர்
(தாவா செய்து வைக்கும் பொதக்குடி TNTJ உறுப்பினர்கள்)
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பொதக்குடி கிளையில் சார்பில்...29-04-2012அன்று பொதக்குடி சற்குரு தெருவில் கிளினிக் நடத்தி வரும் முத்துச் சிதம்பரம் என்ற மருத்துவருக்கு tntj மாநில தலைமையின் மூலம் அனுப்பி வைக்கப்பட்ட புக்,குர்ஆன், cd ஆகியவைகள் வழங்கி தஃவா செய்யப்பட்டது...(இவர் ஏற்கனவே...இமயம்tv யில் ஒளிபரப்பட்ட tntj நிகழ்ச்சிகளை தொடர்ந்து பார்த்து வருபவர் ,இவராகவே மாநில தலைமைக்கு லட்டர் அனுப்பி "நான் இஸ்லாத்தைப் பற்றி அறிந்து கொள்ள ஆவலாக உள்ளேன் என்று லட்டர் அனுப்பியதால்..மாநில தலைமை இவரிடம் புக் கொடுத்து தஃவா செய்யுங்கள் என்று கேட்டுக் கொண்டதற்கு இணங்க இந்த தஃவா நடைபெற்றது இன்ஷா அல்லாஹ் வெகு விரைவில் இஸ்லாத்தை என் வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொள்வேன்...என்ரு வாக்குறுதி அளித்துள்ளார் அல்ஹம்துலில்லாஹ் !
பொதக்குடியில் நடைபெற்ற கந்தூரி விழாவைக் கண்டித்து
ஃபிளக்ஸ் போர்டு
பொதக்குடியில் நடைப்பெற்ற கந்தூரி விழாவைக் கண்டித்து பொதக்குடி த.த.ஜ. கிளையின் சார்பில் 7-04-2012 ஊரின் முக்கியப் பகுதிலும், கந்தூரி விழா நடைபெறும் தர்காவிற்கு நேரேதிரிலும் ஃபிளக்ஸ் போர்ட் வைக்கப்பட்டது, அத்துடன் தர்கா வழிபாடு வின் தீமையை விளக்கி ஒரு வீடு தவறாமல் நூடீஸ் விநியோகம் செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்.
சமாதி வழிபாடு எதிர்ப்பு தொடர் பயான் 25-03-2012
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பொதக்குடி கிளையின் சார்பில்..25-03-2012 முதல் மக்ரிப் தொழுகைக்குப் பின்பு tntj மர்கசில் பொதக்குடியில்..இன்னும் ஒரு சில நாட்களில் நடைபெற இருக்கும் கந்தூரி விழாவைக் கண்டித்து..தொடர் பயான் நடைபெற்று வருகிறது..பள்ளியின் இமாம் அப்துல் ஹமீது மஹ்ளரி அவர்கள்..."இணைவைத்தல் என்றால்.என்ன..?"என்ற தலைப்பில் உரை நிகழ்த்தி வருகிறார்! அல்ஹம்துலில்லாஹ்!
நிர்வாகிகள் மற்றும் மாணவரணி செயல்வீரர்கள் கூட்டம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் ம்வட்டம் பொதக்குடி கிளையில்...25-03-2012 ஞாயிற்றுக் கிழமை அன்று காலையில்..நிர்வாகிகள் மற்றும் மாணவரணி செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது, இதில் அழைப்புப் பணியை வீரியப்பைடுத்தும் விதமாகஆலோசிக்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்!!
வாழ்வாதார உதவி.....17-03-2012
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் பொதக்குடி கிளையின் சார்பில்...பொதக்குடியைச் சேர்ந்த ஒரு ஏழை சகோதரருக்கு வாழ்வாதார உதவியாக ...ரூபாய் 1,500 (ஆயிரத்து ஐநூறு ) 17-03-2012 அன்று வழங்கப்பட்டது ,. அல்ஹம்துலில்லாஹ் !!!
பொதக்குடியில் இஸ்லாத்தை தன் வாழ்வியலாக ஏற்றுக் கொண்ட
ராஜ முத்தையா....16-03-2012
பொதக்குடியைச் சேர்ந்த ராஜ முத்தையா என்ற சகோதரர் பொதக்குடி TNTJ மர்கசில் 16-03-2012 (வெள்ளிக்கிழமை ) ஜுமுஆ தொழுகைக்குப் பின்பு...இஸ்லாத்தை தன் வாழ்வியலாக tntj நிர்வாகிகள் முன்னிலையில் ஏற்றுக் கொண்டார், அவர் தனது பெயரை ராஜா முஹம்மது என மாற்றிக் கொண்டார், அவருக்கு இஸ்லாத்தைப் பற்றி அடிப்படை விஷயங்கள் சொல்லிக் கொடுக்கப்பட்டது, மேலும்..திருக்குர்ஆன் மொழிபெயர்ப்பும் அவருக்கு வழங்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்!!!
ஏகத்துவப் பள்ளியின் கட்டுமானப் பணி
அல்லாஹ்வின் அருளால் பொதக்குடியில் உதயமாகி வரும் ஏகத்துவப் பள்ளியின் கட்டுமானப் பணிகளில்...இன்று வரை முடிந்துள்ள பணிகள், பின்பகுதியில்..பெண்களுக்காக பாத்ரூம்,மற்றும் ஒளு செய்யும் பகுதி முழுமையடைந்து விட்டது, முன் பகுதியில்..ஆபிஸ் ரூம், மற்றும் ஆண்களுக்கான பாத்ரூம் முடிவடையும் தருவாயில் உள்ளது
மருத்துவ உதவி
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் பொதக்குடி கிளையின் சார்பில்...05-02-2012 அன்று பொதக்குடியைச் சேர்ந்த ஒரு ஏழை சகோதரிக்கு ,மருத்துவ உதவியாக ரூபாய் 2000 ( இரண்டாயிரம்) கிளை மர்கசில் வைத்து வழங்கப்பட்டது
புதிய தலைமுறை டிவியின் பீஜே அவர்களுடனான... by முதியோர் இல்லத்துக்காக "வீல் சேர்"
நம் கிளையின் சார்பில்
21-05-2012 அன்று TNTJ மாநில தலைவர் சகோ பீஜே அவர்களிடம்முதியோர் ஆதரவு இல்லத்துக்காக "வீல் சேர்" ஒன்றுபொதக்குடிTNTJ மர்கசில் வைத்து கிளை நிர்வாகிகள் வழங்கினார்கள் !அல்ஹம்துலில்லாஹ்!
எல்லா புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே !
21-05-2012 அன்று TNTJ மாநில தலைவர் சகோ பீஜே அவர்களிடம்முதியோர் ஆதரவு இல்லத்துக்காக "வீல் சேர்" ஒன்றுபொதக்குடிTNTJ மர்கசில் வைத்து கிளை நிர்வாகிகள் வழங்கினார்கள் !அல்ஹம்துலில்லாஹ்!
எல்லா புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே !
பெண்கள் பயான் "மறுமை வெற்றியே நம் இலக்கு "
நம் மர்கஸ் இல் பெண்களுக்கான பயான் நடைபெற்றது! பொதக்குடி மர்கஸ் இமாம் , அப்துல் ஹமீது அவர்கள் "மறுமை வெற்றியே நாம் இலக்கு" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்! இதில் அதிகமான பெண்கள் கலந்து கொண்டார்கள்!
அத்திக்கடை கிளையில் தெருமுனைப் பிரச்சாரம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் அத்திக்கடை கிளையின் சார்பில் 11-01-2012 புதன் அன்று, தெருமுனைப் பிரச்சாரம் மாலை 4:30 மணியளவில் "அத்திக்கடை வடக்குத் தெரு மேலத்தெரு சந்திப்பில்" நடைபெற்றது.மாவட்டப் பேச்சாளர் சகோ அப்துல் ஹமீது (பொதக்குடி) அவர்கள், "முன்மாதிரி முஸ்லிம் இல்லம் " என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்!
தையல் மிஷின் அன்பளிப்பு !
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் பொதக்குடி கிளையின் சார்பில்...18-01-2012 ஞாயிற்றுக் கிழமை அன்று பொதக்குடியைச் சேர்ந்த இரண்டு ஏழை சகோதரிகளின் வாழ்வாதாரத்திற்காக ரூபாய் 7000 மதிப்பில் இரண்டு (ஒரு தையல் மிஷின் விலை 3,500) மிஷின்கள் வழங்கப்பட்டது
பெண்கள் பயான்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் பொதக்குடி கிளையின் சார்பில் 08-01-2011 (ஞாயிற்றுக்கிழமை)அன்று கிளை மர்கசில் பெண்கள் பயான் நடைபெற்றது, பொதக்குடி மர்கஸ் இமாம் சகோ அப்துல் ஹமீது அவர்கள் "மறுமைக்காக வாழ்வோம்" வன்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்,
இறுதியில், பெண்கள் ஒருங்கிணைப்பு நிகழ்ச்சியும் கிளை நிர்வாகிகள் முன்னிலையில் நடைபெற்றது, (தஃவாவை மேன்படுத்துவது சம்பந்தமாக பெண்களிடம் ஆலோசனை பெறப்பட்டது!
இறுதியில், பெண்கள் ஒருங்கிணைப்பு நிகழ்ச்சியும் கிளை நிர்வாகிகள் முன்னிலையில் நடைபெற்றது, (தஃவாவை மேன்படுத்துவது சம்பந்தமாக பெண்களிடம் ஆலோசனை பெறப்பட்டது!
ரூபாய் 7200 மதிப்பில் வாழ்வாதார உதவி!
பொதக்குடி ஜலால் தெருவில் வசித்து வரும் ஒரு ஏழை முஸ்லிம் குடும்பம் ,தங்களின் வீட்டில் போடப்பட்டுள்ள "கீத்துக் கொட்டகை" முற்றிலும் சிதிலமடைந்த நிலையில் உள்ளது. மழை,மற்றும் வெயிலின்போது கடுமையான பாதிப்புக்குள்ளாகிறோம்! ஆகவே! TNTJ பொதக்குடி கிளையின் சார்பில் என் வீட்டை செப்பனிட்டுக் கொடுங்கள் என்று கேட்டுக் கொண்டதற்கு இணங்க,30-11-2011 வியாழக் கிழமை அன்று ,அந்த வீட்டிற்கு,ரூபாய் 7200 (ஏழாயிரத்து இருநூறு) ரூபாய் மதிப்பில் "கீத்துக் கொட்டகை" போட்டுக் கொடுக்கப்பட்டது!புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே!
கல்வி உதவி
TNTJ திருவாரூர் மாவட்டம் பொதக்குடி கிளையின் சார்பில்... பொதக்குடியைச் சேர்ந்த ஒரு ஏழை மாணவனின் மேற்படிப்பு கல்வியைத் தொடர ,ரூபாய் 7000 (ஏழாயிரம்) (22-11-2011,செவ்வாய் கிழமை) அன்று வழங்கப்பட்டது!
குறிப்பு: தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக இதே மாணவனுக்கு கல்வி உதவியை TNTJ பொதக்குடி கிளை வழங்கி வருகிறது! அல்ஹம்துலில்லாஹ்!
எல்லா புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே !
குறிப்பு: தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக இதே மாணவனுக்கு கல்வி உதவியை TNTJ பொதக்குடி கிளை வழங்கி வருகிறது! அல்ஹம்துலில்லாஹ்!
எல்லா புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே !
தினசரி,மற்றும் மாதாந்திர காலண்டர் ஒன்றின்
விலை: ரூபாய் 40
மாதந்திர காலண்டர்
வாழ்வாதார, உதவி
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருவாரூர் மாவட்டம் பொதக்குடி கிளையின் சார்பில், பொதக்குடி ஜலால் தெருவைச் சேர்ந்த ஒரு ஏழைச் சகோதரிக்கு வாழ்வாதார உதவியாக 26-12-2012 அன்று ரூபாய் 4000 (நான்காயிரம்) வழங்கப்பட்டது !
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருவாரூர் மாவட்டம் பொதக்குடி கிளையின் சார்பில், பொதக்குடி ஜலால் தெருவைச் சேர்ந்த ஒரு ஏழைச் சகோதரிக்கு வாழ்வாதார உதவியாக 26-12-2012 அன்று ரூபாய் 4000 (நான்காயிரம்) வழங்கப்பட்டது !
பொதக்குடி கிளையில்..பல்வேறு இடங்களில்
சுவர் விளம்பரம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் பொதக்குடி கிளையின் சார்பில் ... முஸ்லிம்களுக்கு தமிழக அரசு வழங்கியுள்ள இடஒதுக்கீட்டை அதிகரிக்க வலியுறுத்தியும்,, மத்திய அரசு முஸ்லிம்களுக்கு இந்திய அளவில் 10% இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்தியும் "தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் பிப்ரவரி '14' அன்று நடைபெறும் போராட்டத்தை வலியுறுத்தி பொதக்குடி கிளையில் பல்வேறு இடங்களில் சுவர் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது!
சுவர் விளம்பரம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் பொதக்குடி கிளையின் சார்பில் ... முஸ்லிம்களுக்கு தமிழக அரசு வழங்கியுள்ள இடஒதுக்கீட்டை அதிகரிக்க வலியுறுத்தியும்,, மத்திய அரசு முஸ்லிம்களுக்கு இந்திய அளவில் 10% இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்தியும் "தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் பிப்ரவரி '14' அன்று நடைபெறும் போராட்டத்தை வலியுறுத்தி பொதக்குடி கிளையில் பல்வேறு இடங்களில் சுவர் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது!
இறை இல்ல கட்டுமான தொடர்ச்சி
அல்லாவின் பேரருளால் பொதக்குடியில் உதயமாகும் ஏகத்துவப் பள்ளியின் கட்டுமானப் பணிகள்......அல்லாஹ்வின் உதவியால்.. நாளுக்கு நாள் கட்டிடம் வளர்ந்து வருகிறது!இன்றைய தேதிவரை நடந்துள்ள பணிகளை தற்போது பார்க்கிறீர்கள்!
மாற்று மத சகோதரருக்கு தாவா
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பொதக்குடி கிளையில்... கொரடாச்சேரியைச் சேர்ந்த செல்வம் என்பவருக்கு இஸ்லாம் சம்பந்தப்பட்ட அடிப்படை கொள்கை எடுத்துரைக்கப்பட்டது, அவர் அனைத்து விஷயங்களையும் முழுமையாக கேட்டறிந்து விட்டு "இப்படிப்பட்ட சிறப்பான கொள்கையை எடுத்துரைக்கும் "குர்ஆனை எனக்குத் தாருங்கள் என உரிமையுடன் கேட்டார். அத்துடன் ''''இந்தக் குர்ஆனை என் குடும்பத்துடன் சேர்ந்து படிக்கிறேன்.எனக்கும் என் குடும்பத்தினருக்கும் தெளிவு கிடைக்க இறைவனிடம் பிரார்த்தியுங்கள்" எனவும் கேட்டுக்கொண்டார்! அவரை நமது மர்கஸ்வுக்கு அழைத்து 16-12-2011 அன்று அவருக்கு குர்ஆனும்,இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம் புத்தகம் மற்றும் CD யும் வழங்கப்பட்டது அவரின் நேர்வழிக்காக இறைவனிடம் பிரார்த்திப்போம்!