வேகமாக வளர்ந்து வரும் ஏகத்துவ பள்ளியின் கட்டிடப் பணிகள்!
அல்லாஹ்வின் பேரருளால் இறைவன் நாடினால் கூடிய விரைவில் உதயமாக இருக்கும் ஏகத்துவப் பள்ளியின் கட்டுமானப் பணிகள் மிகச் சிறப்பாகவும்,விரைவாகவும் நடைபெற்று வருகிறது!
தற்போது டாய்லெட்,உள்பக்கம் ஒயரிங்,வெளிப் (முகப்புப்)பக்கம் சுவர் வேலை முடிவடைந்துள்ளது! அல்ஹம்து லில்லாஹ்!
தற்போது டாய்லெட்,உள்பக்கம் ஒயரிங்,வெளிப் (முகப்புப்)பக்கம் சுவர் வேலை முடிவடைந்துள்ளது! அல்ஹம்து லில்லாஹ்!
2011 ஆம் ஆண்டு கூட்டுக்குர்பானி!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் பொதக்குடி கிளையில் சார்பில் கூட்டுக்குர்பானி திட்டத்தின் கீழ் இன்று (07-11-2011,திங்கள் கிழமை) 4 (நான்கு) ஆடுகள் அறுக்கப்பட்டு அதன் இறைச்சிகள் ஏழைகளுக்கு வழங்கப்படுகிறது! (08-11-2011) தினம் 7 ( ஏழு )மாடுகள் கூட்டுக் குர்பானி திட்டத்தின் கீழ் அறுக்கப்பட்டு,அதன் இறைச்சிகள் ஏழைகளுக்கு வழங்கப்படுகிறது!
2011 ஆம் ஆண்டு ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!
"தியாகப் பெருநாள் தொழுகை" சேகரை NMK மஹால் வளாகத்தில் இன்று (07-11-2011,திங்கள் கிழமை) காலை 7:30 மணியளவில் நடைபெற்றது. சகோ அப்துல் ஹமீத் மஹ்ளரி அவர்கள் "தியாகிகளை நினைவு கூறுவோம்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்!
இதில் அதிகமான ஆண்களும்,பெண்களும் கலந்து கொண்டு பெருநாள் தொழுகையை சிறப்பாக நிறைவேற்றினர்,அல்ஹம்துலில்லாஹ்!
இதில் அதிகமான ஆண்களும்,பெண்களும் கலந்து கொண்டு பெருநாள் தொழுகையை சிறப்பாக நிறைவேற்றினர்,அல்ஹம்துலில்லாஹ்!
இறை இல்ல கட்டுமான தொடர்ச்சி
அல்லாஹ்வின் பேரருளால் இன்ஷா அல்லாஹ் பொதக்குடியில் உதயமாக இருக்கும் புதிய பள்ளியின் கட்டுமானப் பணிகளில் இன்று (23-10-2011) மேல் காங்கிரட்டுக்காக போடப்பட்டிருந்த முட்டுகள் நீக்கப்பட்டுள்ளது! அல்ஹம்துலில்லாஹ்!!
பெண்கள் பயான்
அல்லாஹ்வின் பேரருளால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் பொதக்குடி கிளையின் சார்பில் ..கடந்த 22-10-2011 சனிக்கிழமை அன்று மாலை 5:00 மணியளவில் பொதக்குடி சேகரை நாடார் தெரு சகோ அப்துல்லாஹ் அவர்களின் வீட்டில் பெண்கள் பயான் நடைபெற்றது.சகோ அப்துல் ஹமீது அவர்கள் "நாவைப் பேணுவோம்""என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்
பெண்கள் பயான்சேகரை யில் பெண்கள் பயான் 8-10-2011 சனிக்கிழமை மாலை நடைபெற்றது! சகோ: அப்துல் ஹமீத் அவர்கள் "இஸ்லாத்தில் முழுமையாக நுழைவோம்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்! அல்ஹம்து லில்லாஹ்!
|
பொதக்குடி கிளையில் மருத்துவ உதவி!தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் பொதக்குடி கிளையின் சார்பில் 04-10-2011 அன்று விபத்தினால் ஒரு கை முழுவதும் பாதிக்கப்பட்ட ஒரு ஏழைச் சிறுவனின் மருத்துவச் செலவிற்காக ரூபாய் 3,100 (மூன்றாயிரத்து நூறு) வழங்கப்பட்டது! அல்ஹம்துலில்லாஹ்!--
எல்லா புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே ! |
2011 நோன்புப் பெருநாள் தொழுகை
அல்லாஹ்வின் பேரருளால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் பொதக்குடி கிளையின் சார்பில் பெருநாள் தொழுகை,பொதக்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக் கூடம் வளாகத்தில் (காந்தி தெரு முனை)இன்று (31-08-2011)காலை 7:45 மணியளவில் நடைபெற்றது.அல்லாஹ்வின் பேரருளால் 600 க்கும் மேற்பட்ட ஆண்கள்,பெண்கள்
பெருநாள் தொழுகையில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்! அல்லாஹு அக்பர்!!அல்ஹம்து லில்லாஹ்!!!
பெருநாள் தொழுகையில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்! அல்லாஹு அக்பர்!!அல்ஹம்து லில்லாஹ்!!!
2011 ஃ பித்ரா விநியோகம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் பொதக்குடி கிளையின் சார்பில் ,கிளையில் வசூலிக்கப்பட்ட ரூபாய் 15,500,(பதினைந்தாயிரத்து ஐநூறு )மாநில தலைமையின் மூலம் வழங்கப்பட்ட ரூபாய் 11,000 (பதினோன்றாயிரம்) ஆக மொத்தம் 26,500 ரூபாயில் 250 ரூபாய் மதிப்பில் (அரிசி,மற்றும் மளிகைப் பொருட்கள்)ஃபித்ரா பெற தகுதியான 106 நபர்களுக்கு ஃ பித்ரா வழங்கப்பட்டது! அல்ஹம்து லில்லாஹ்!
2011 ரமலானின் கடைசி பத்து நாட்களும் அந்த இரவுகளில் அமல்கள்
ரமலானின் கடைசி பத்து நாட்களும் அந்த இரவுகளில் அமல்கள் செய்து,பின்னிரவு தொழுகை (இரவு 11:00 மணி முதல் 3:30 மணிவரை)மடைபெர்று வருகிறது,தொடர் சொற்பொழிவும்,கேள்வி பதில் நிகழ்ச்சி,செய்முறை விளக்கங்கள் இந்த அமல்கள் தொடராக ரமலானின் இறுதி பத்தில் நடைபெற்று வருகிறது!நேற்றைய (27-08-2011) தினம் "ஜனாஸாவின் சட்டங்கள் குறித்து செய்முறை விளக்கம் அளிக்கப்பட்டது! அல்ஹம்துலில்லாஹ்!
புதிய பள்ளியின் கட்டுமானப் பணிகள் : 26-07-2011
அல்லாஹ்வின் பேரருளால் இன்ஷா அல்லாஹ் அதி விரைவில் பொதக்குடியில் உதயமாக இருக்கும் ஏகத்துவப் பள்ளியின் கட்டுமானப்பணிகளில் இன்றைய (26-07-2011) தினம், கீழ் தளத்தில் காங்கிரட் போடப்பட்டுள்ளதைத்தான் தற்போது தாங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்! அல்லாஹ்வின் பேரருளால் கட்டுமானப் பணிகள் விரைவில் முடிவடைய தங்களின் மேலான துஆ வையும்,அத்துடன் தாங்கள் வாக்களித்துள்ள பொருளாதார உதவியையும் விரைந்து வழங்கும்படியும் அன்புடன் எதிர் பார்க்கிறோம்!
இப்படிக்கு....
கட்டிடக் கமிட்டி நிர்வாகம் ,பொதக்குடி.
இப்படிக்கு....
கட்டிடக் கமிட்டி நிர்வாகம் ,பொதக்குடி.
கல்வி உதவி
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் பொதக்குடி கிளையின் சார்பில் பொதக்குடியைச்சேர்ந்த ஏழை மாணவன் மேற்படிப்பு கல்வியைத் தொடர ரூபாய் 5000 (ஐந்தாயிரம்)கல்வி உதவியாக இன்று 12-06-2011 வழங்கப்பட்டது..!
கோடைகால பயிற்சி முகாம் பரிசளிப்பு
கடந்த 14-05-2011 முதல் 24-05-2011 வரை நமது மர்கசில்(பொதக்குடி TNTJ) மாணவ,மாணவிகளுக்கு கோடைகால பயிற்சி முகாம் நடைபெற்றதை தாங்கள் அனைவரும் அறிந்ததே! அதில் கலந்து கொண்ட அனைத்து மாணவ,மாணவிகளுக்கும் 02-06-2011 அன்று மாலை பரிசுகளும்,சான்றிதழும் வழங்கப்பட்டது!
புதிய பள்ளியின் கட்டுமானப் பணிகள் தொடர்ச்சி
இன்ஷா அல்லாஹ் பொதக்குடியில் உருவாக இருக்கும் புதிய பள்ளியின் கட்டுமானப் பணிகள் இன்றும் (17-04-2011அன்று) நடைபெற்றது. அன்றைய தினம் பெல்ட்( டை பீம்)4 யூனிட் 80 மூட்டை சிமென்ட் போடப்பட்டது
பெண்கள் பயான்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் பொதக்குடி கிளையின் சார்பில் பொதக்குடி ரஹ்மானியா தெருவில், சகோ ஜகபர்தீன் அவர்களின் வீட்டில் 17-04-2011 ஞாயிற்றுக்கிழமை மாலை 5:00 மணியளவில் பெண்கள் பயான் நடைபெற்றது.சகோ அப்துல் ஹமீத் அவர்கள் ,"அல்லாஹ்வை அஞ்சி வாழ்வோம்!!" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.
புதிய பள்ளியின் கட்டுமானப் பணிகள் !!!
அல்லாஹ்வின் பேரருளால் பதுரியா தெருவில் அமையவிருக்கும் ஏகத்துவ புதிய பள்ளியின் கட்டுமானப் பணிகள் தொய்வின்றி நடைபெற்று வருகிறது. பெல்ட் போடுவதற்காக கம்பிகள் முருக்கப்பட்டுள்ளது.அத்துடன் காங்கிரட் போடுவதற்காக பலகைகளும் வந்துள்ளது.இன்ஷா அல்லாஹ் நாளைய தினம் பலகைகள் அடிக்கப்படும்!
அல்லாஹ்வின் பேரருளால் பதுரியா தெருவில் அமையவிருக்கும் ஏகத்துவ புதிய பள்ளியின் கட்டுமானப் பணிகள் தொய்வின்றி நடைபெற்று வருகிறது. பெல்ட் போடுவதற்காக கம்பிகள் முருக்கப்பட்டுள்ளது.அத்துடன் காங்கிரட் போடுவதற்காக பலகைகளும் வந்துள்ளது.இன்ஷா அல்லாஹ் நாளைய தினம் பலகைகள் அடிக்கப்படும்!
பெண்கள் பயான்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் பொதக்குடி கிளையின் சார்பில் பொதக்குடி நாடார் தெருவில் சகோ சாதிக் பாட்சா அவர்களின் வீட்டில் மாலை( 10-04-2011 ஞாயிற்றுக்கிழமை)5:00 மணியளவில் பெண்கள் பயான் நடைபெற்றது. பொதக்குடி ஆயிஷா பள்ளியின் (TNTJ) இமாம் சகோ அப்துல் ஹமீத் அவர்கள்" இணைவைத்தல் ஒரு கொடிய பாவம்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்!!
அவசர இரத்த உதவி
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பொதக்குடி கிளையின் சார்பில் இதய நோயால் பாதிக்கப்பட்ட பொதக்குடியைச் சேர்ந்த சகோதரிக்கு அவசர கால இரத்தம்( A1+ve )15-03-2011 அன்று இரண்டு யூனிட் வழங்கப்பட்டது.
புதிய மர்கசின் கட்டுமானப் பணிகள் ஆரம்பம்!
அல்லாஹ்வின் பேரருளால் பொதக்குடியில் ஏகத்துவத்தை உறுதியாக நிலைநாட்ட கேந்திரமாக திகழக்கூடிய புதிய மர்கசின் கட்டுமானப் பணிகள் இன்ஷா அல்லாஹ் இன்றிலிருந்து (14-03-2011 ) ஆரம்பமாகிறது. கும்பகோணத்தைச் சேர்ந்த பொறியாளர் சகோ அஸ்கர் அலி,(இவர்தான் நம் பள்ளியைக் கட்ட நியமிக்கப்பட்டிருக்கும் பொறியாளர்) மேஸ்திரி சிவானந்தம் (நம் பள்ளியைக் கட்ட இருக்கிற மேஸ்திரி) கம்பி பிட்டர் செல்லத்துரை மற்றும் புரோக்கர் பிச்சை ஆகியோரை நமது நிர்வாகம் ஆலோசித்து அந்தந்த துறைக்கு நியமித்திருக்கிறது. அல்லாஹ்வின் உதவியால் கொட்டகை போடப்பட்டு,இன்று குழி வெட்டப்படுவதற்காக நூல் கட்டப்படுகிறது.
அன்பிற்கினிய கொள்கைச் சகோதரர்களே! அல்லாஹ்வின் உதவியால் தொய்வின்றி இந்தப் பணி தொடர்ந்திடவும், எதிரிகளின் சூழ்ச்சியை வென்று, சிறப்பாக இந்தப்பணி முடிந்திடவும் நாம் கேட்கும் துஆ உடன் இதையும் சேர்க்கும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்! அத்துடன் உங்களின் நிதியுதவிகளை மிக மிக உயர்ந்த இந்த காரியத்திற்கு தாரளமாக வழங்கிடவும் அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்!
இப்படிக்கு
கட்டிடக் கமிட்டி நிர்வாகம்
அன்பிற்கினிய கொள்கைச் சகோதரர்களே! அல்லாஹ்வின் உதவியால் தொய்வின்றி இந்தப் பணி தொடர்ந்திடவும், எதிரிகளின் சூழ்ச்சியை வென்று, சிறப்பாக இந்தப்பணி முடிந்திடவும் நாம் கேட்கும் துஆ உடன் இதையும் சேர்க்கும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்! அத்துடன் உங்களின் நிதியுதவிகளை மிக மிக உயர்ந்த இந்த காரியத்திற்கு தாரளமாக வழங்கிடவும் அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்!
இப்படிக்கு
கட்டிடக் கமிட்டி நிர்வாகம்
அல்லாஹ்வின் பேரருளால் புதிய மர்கசின் கட்டுமானப் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.
03-03-2011 வியாழக்கிழமை அன்று பொதக்குடியில் நடந்த மார்க்க விளக்கப் பொதுக்கூட்டம்!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் பொதக்குடி கிளையின் சார்பில் 03-03-2011 வியாழக்கிழமை அன்று ,பொதக்குடி மேலத்தெரு வடக்குத்தெரு சந்திப்பில் மார்க்க விளக்கப் பொதுக்கூட்டம் மாலை மக்ரிப் தொழுகைக்குப் பின்பு TNTJ கிளைத் துணைத் தலைவர் K.முஹம்மத் இஸ்மாயில் தலைமையில் நடைபெற்றது. இப்பொதுக் கூட்டத்தில், சகோ முஹம்மத் ஜாபர் ஜமாலி அவர்கள்.தரிக்காவும்,இஸ்லாமும் என்ற தலைப்பிலும்,சகோ அப்துர் ரஹ்மான் பிர்தவ்ஸி அவர்கள் "மவ்லீது ஒரு வணக்கமா..? என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்தினார்கள்.இப்பொதுக்கூட்டத்தில் பெரும் திரளான மக்கள் கலந்து கொண்டார்கள்!
இறைஇல்லம் (மர்கஸ்) கட்டுவதற்காக இரண்டாம் கட்டபணி துவக்கம்
இறைஇல்லம் (மர்கஸ்) கட்டுவதற்காக இரண்டாம் கட்ட பணியான தண்ணீர் வசதி செய்வதற்காக போர் போடும் பணிகள் ஆரம்பித்து தொடர்ந்து நடந்துகொண்டு இருக்க்கிறது.
பொதக்குடியில் ... மார்க்க விளக்கப் பொதுக்கூட்டம்!
அன்பிற்கினிய கொள்கைச் சொந்தங்களுக்கு!! இன்ஷா அல்லாஹ் பதுரியா தெருவில் உதயமாக இருக்கும் புதிய பள்ளியின் செய்திகள் அனைத்தும் தங்களின் மேலான கவனத்திற்கு வந்ததே!! புதிய பள்ளியின் கட்டிட பணியின் ஆயத்தப் பணிகள் தற்போது தவங்கி விட்டது. அதன் ஒரு ஒரு பகுதியாக கட்டிட கமிட்டியின் மேற்பார்வையில் இன்று 18-02-2011 காலை இடம் சுத்தம் செய்யப்படுகிறது. பிளாக் லைன் முழுவதும் சுத்தம் செய்யப்படுகிறது. (அதாவது நம் மனைக்கு ஒட்டி இருக்கக்கூடிய பிளாக் லைன் முழுவதும்( சவுக்கத் அலி தெருவிலிருந்து ஜாவியா தெரு வரை சுத்தம் செய்யப்படுகிறது.
மருத்துவ உதவி
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் பொதக்குடி கிளையின் சார்பில் பொதக்குடி ஜலால் தெருவைச் சேர்ந்த ஒரு சகோதரியின் மகன் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருப்பதால் அவருக்கு மருத்துவம் செய்ய வேண்டி மருத்துவ உதவியாக ரூபாய் 2000 (இரண்டாயிரம்) 15-02-2011 செவ்வாய்கிழமை அன்று வழங்கப்பட்டது !
பொதக்குடியில்... பித்அத்தைக் கண்டித்து தெருமுனைப்பிரச்சாரம்!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் பொதக்குடி கிளையின் சார்பில் பித்அத்தைக் கண்டித்து தெருமுனைப் பிரச்சாரம் பொதக்குடி தபால் அலுவலகம் முன்பு, இன்று (15-02-2011 ) மாலையில் நடைபெற்றது. சகோ அப்துல் ஹமீத் (மன்னார்குடி) அவர்கள்." நபியை அவமதிக்கும் மீலாது விழாக்கள்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்!
பொதக்குடியில்... காதலர் தின எதிர்ப்பு பிரச்சாரம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் பொதக்குடி கிளையின் சார்பில்
13-02-2011 அன்று மாலை 5:00 மணியளவில் பொதக்குடி 'c " பஜாரில் சமூக
சீர்கேடுகளைக் கண்டித்து பிரச்சாரம் நடந்தது. சகோ அப்துல் ரஹ்மான்
(கொடிக்கால் பாளையம் ) அவர்கள். " காமத்தின் மறுமுகம் காதலர் தினம்" என்ற
தலைப்பிலும், சகோ அப்துல் ஹமீத் (பொதக்குடி ) அவர்கள் "இணைவைத்தல் கொடிய
பாவம் " என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்தினார்கள் !
திருவாரூர் மாவட்டம் சார்பில் தாயிகளுக்கான பயிற்சி வகுப்பு
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் சார்பில்
இன்ஷாஅல்லாஹ்! எதிர்வரும் மார்ச் 26,27 ஆகிய இரு தினங்கள். தமிழகத்தில்
பெருகி வரும் TNTJ மர்கஸில் பணிபுரிய தாயிகளின் பற்றாக்குறையை நிவர்த்தி
செய்ய வேண்டி, தாயிகள் தேர்வு தமிழகத்தின் மிக முக்கியமான நான்கு
நகரங்களில் மாநில தலைமையின் மூலம் நடைபெற இருக்கிறது.திருவாரூர்
மாவட்டத்தின் மூலம் தேர்வில் பங்கு பெற இருக்கிற தாயிகளுக்கு, தேர்வு
வழிகாட்டுதல் நிகழ்ச்சி மாவட்டத்தின் சார்பில் 13-02-2011 ஞாயிற்றுக்கிழமை
காலை 10:00 மணி முதல், மாலை 4:00 மணிவரை (ஒருநாள் நிகழ்ச்சி)ஏற்பாடு
செய்யப்பட்டது. மாவட்டத்தின் பல்வேறு கிளைகளிலிருந்து 26
சகோதரர்கள் கலந்துகொண்டு பயிற்சி எடுத்தார்கள். சகோ அல்தாப் ஹுசைன்
(முத்துப்பேட்டை) அவர்கள். மாநில தலைமையின் வழிகாட்டுதலின் படி மிகச்
சிறந்த முறையில் பயிற்சி கொடுத்தார்கள்!
ரபியுல் மாத பித்அத்தை கண்டித்து தெரு முனை பிரச்சாரம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் பொதக்குடி கிளையின் சார்பில்
ரபீயுல் அவ்வல் மாதம் பிறை 1 முதல் பிறை 12 வரை மவ்லீது, மற்றும்
முரீதைக் கண்டித்து தொடர் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்று வருகிறது.
அதனடிப்படையில் 11-02-2011 வெள்ளிக்கிழமை மாலை 5:00 மணியளவில் மேலத்தெரு
வடக்குத்தெரு சந்திப்பில் நடைபெற்றது. சகோ ஜாபர் ஜமாலி (அடவங்குடி )
அவர்கள்" பைஅத் ஓர் ஆய்வு " என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்!
முஸ்லிம்கள் ஒட்டு யாருக்கு..? திருவாரூர் மாவட்டம்
த த ஜ மாநில தலைமையக வழிகாட்டுதளின்படி த த ஜ திருவாரூர் மாவட்டம் சார்பாக (மாவட்டம் முழுவதும்) ஒட்டப்பட்டுள்ள "முஸ்லிம்களின் ஓட்டு யாருக்கு" சுவர் போஸ்டர்.
கிளை நிர்வாகிகள் கூட்டம்
அல்லாஹ்வின் பேரருளால் 03-02-2011 அன்று காலை 10:30 மணியளவில் பொதக்குடி கிளையின் நிர்வாகக் கூட்டம் கரீமியா தெருவில் சகோ இமாம் ஹுசைன் அவர்கள் வீட்டில் கிளை தலைவர் சகோ அக்பர் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. அதில் கிளை வளர்சியைக்குறித்தும், மதுரையில் நடைபெற்ற பேரணி மாநாட்டில் ஏற்பட்ட குறை நிறைகளைக் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது. அத்துடன் தலைவர்,துணைத்தலைவர் (அக்பர்,இஸ்மாயில் ) ஆகியோர் தத்தமது வேலைப்பளுவின் காரணமாக ராஜினாமா கடிதம் கொடுத்தபோது சூழ்நிலைகளின் அவசியத்தை இருவருக்கும் உணர்த்தியபோது ராஜினாமா கடிதத்தை வாபஸ் பெற்று தத்தமது பொறுப்புகளில் இருந்துகொண்டு பணிகளை தொடர்வதென உறுதியளித்தனர்.
ஜனவரி 27 போராட்டத்திற்கான நேரடி அழைப்பிதல்
" ஜனவரி 27 " ஐ விளக்கி வீடு வீடாகச் சென்று அழைப்புக் கொடுத்தல் !
பாபரி மஸ்ஜித் விவகாரத்தில் அக்கிரமமாக தீர்ப்பு வழங்கிய அலஹாபாத் உயர்நீதி மன்றத்தின் தீர்ப்பைக்கண்டித்தும் ,உச்ச நீதி மன்றம் இவ்வழக்கை தானாக முன்னெடுக்க வலியுறுத்தியும்,சென்னை மற்றும் மதுரையில் நடைபெற இருக்கும் பேரணி& ஆர்ப்பாட்டத்தை விளக்கி திருவாரூர் மாவட்டம் பொதக்குடி கிளையின் சார்பில்14-01-2011 முதல் ஊரின் அனைத்துப் பகுதிகளுக்கும் வீடு வீடாகச்சென்று ஒரு வீடு தவறாமல் நோட்டிஸ் விநியோகிக்கப்பட்டு வருகிறது. மக்கள் தாரளமாக மனமுவந்து நிதியளிப்பதுடன் ஆர்ப்பாட்டத்தில் அவசியம் கலந்துகொள்வோம் என்றும் தெரிவித்தனர் !
பாபரி மஸ்ஜித் விவகாரத்தில் அக்கிரமமாக தீர்ப்பு வழங்கிய அலஹாபாத் உயர்நீதி மன்றத்தின் தீர்ப்பைக்கண்டித்தும் ,உச்ச நீதி மன்றம் இவ்வழக்கை தானாக முன்னெடுக்க வலியுறுத்தியும்,சென்னை மற்றும் மதுரையில் நடைபெற இருக்கும் பேரணி& ஆர்ப்பாட்டத்தை விளக்கி திருவாரூர் மாவட்டம் பொதக்குடி கிளையின் சார்பில்14-01-2011 முதல் ஊரின் அனைத்துப் பகுதிகளுக்கும் வீடு வீடாகச்சென்று ஒரு வீடு தவறாமல் நோட்டிஸ் விநியோகிக்கப்பட்டு வருகிறது. மக்கள் தாரளமாக மனமுவந்து நிதியளிப்பதுடன் ஆர்ப்பாட்டத்தில் அவசியம் கலந்துகொள்வோம் என்றும் தெரிவித்தனர் !
மருத்துவ உதவி
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் பொதக்குடி கிளையின் சார்பில் 14-1-2011 (வெள்ளிக்கிழமை ) அன்று விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த சகோதரர் ஒருவருக்கு இரத்தப்புற்று நோயின் சிகிச்சைக்காக ரூபாய் 5000 (ஐந்தாயிரம் ) வழங்கப்பட்டது! அன்னாரின் நோய் குணமடைய அல்லாஹ்விடம் பிரார்த்திப்போமாக!
வாழ்வாதார உதவி
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் பொதக்குடி கிளையின் சார்பில் பொதக்குடி ஜலால் தெருவில் வசித்து வரும். சகோ தீன் ஒலி அவர்களின் வாழ்வாதார உதவிக்காக ரூபாய் 1500 (ஆயிரத்து ஐநூறு)18-02-2011 வெள்ளிக்கிழமை அன்று வழங்கப்பட்டது.
த.த.ஜ. தலைமையகத்தில் நிர்வாகிகளுடன் நம் கிளை நிர்வாகிகள் நேரடி சந்திப்பு
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பொதக்குடி கிளையின் புதிய மர்கஸ் கட்டிட கமிட்டியின் சார்பில் 31-12-2010 ஜூம்மா தொழுகைக்குப் பின்பு சென்னையில் மேல்மட்ட நிர்வாகிகளை (சகோ. PJ, மற்றும் சகோ.அப்துல் ஹமீத் ( TNTJ மாநில பொதுச்செயலாளர் ) சந்தித்து பொதக்குடி கிளைக்கு புதிய மர்கஸ் சம்பந்தமான ஆலோசனைகள் கேட்கப்பட்டது.
ஜனவரி 27-ல் (2010) சென்னை மற்றும் மதுரையில் நடைப்பெற்ற போராட்ட சுவர் விளம்பரம்
தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் பொதக்குடி கிளையின் சார்பில் இன்ஷா அல்லாஹ் " ஜனவரி 27 ' அன்று சென்னை & மதுரையில் நடைபெற இருக்கும் தமிழகம் தழுவிய மாபெரும் பேரணி& ஆர்ப்பாட்டம் சம்பந்தமான சுவர் விளம்பரம் பொதக்குடியின் பல்வேறு பகுதிகளில் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது!
வாழ்வாதார உதவி
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் பொதக்குடி கிளையின் சார்பில் பொதக்குடி மேலத்தெருவைச் சேர்ந்த சதாம் ஹுசைன் என்ற சகோதரருக்கு வாழ்வாதார உதவியாக ரூபாய் 2000 / (இரண்டாயிரம் ) 6-1-2011 வியாழக்கிழமை அன்று வழங்கப்பட்டது!
தமிநாடு தவ்ஹீத் ஜமாஅத் நிறுவனர் சகோ.பி.ஜெ அவர்களை
பொதக்குடி த த ஜ கிளை நிர்வாகிகள் நேரில் சந்தித்த நிகழ்வு
பொதக்குடி த த ஜ கிளை நிர்வாகிகள் நேரில் சந்தித்த நிகழ்வு
12-12-2010 அன்று திருவாரூர் மாநகரில் நடந்த சமுதாய விழிப்புணர்வு மாநாட்டிற்கு வருகை தந்த சகோ பி.ஜெ. அவர்களை நம் ஜமாஅத் கிளை நிர்வாக சகோதரர்கள் நேரில் சந்தித்து உரையாடினார்கள்.
பொதக்குடி த.த.ஜ. கிளையில் ரூபாய் 15,000 வாழ்வாதார உதவி
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் பொதக்குடி கிளையின் சார்பில்.. கடன் சுமையால் பாதிக்கப்பட்ட பொதக்குடியைச்சேர்ந்த சகோதரி ஒருவருக்கு மாநிலத்தலைமையின் மூலம் வழங்கப்பட்ட ரூபாய் 10,000, மாவட்டத்தின் மூலம் வழங்கப்பட்ட ரூபாய் 3,000, கிளையின் மூலம் ரூபாய் 2,000, ஆக மொத்தம் ரூபாய் 15,000 (பதினைந்தாயிரம் ) 8-12-2010 அன்று சகோ AM குத்புத்தீன் அவர்களால் வழங்கப்பட்டது!
இணையதள மூலமாக நேரடி (Online) கலந்துரையாடல்
05-12-2010 அன்று காலை 11:00 மணியளவில் சகோ அமீர் பாட்சா அவர்களின் வீட்டில், நம் ஜமாஅத் சார்பில் புதிதாக பள்ளிவாசல் கட்ட (அப்பள்ளிவாசல்) கட்டிட கமிட்டி நிர்வாகிகளும், கிளை நிர்வாகிகளும் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் புதிதாக கட்டப்பட இருக்கும் பள்ளிவாசல் கமிட்டியின் துபாய் பொறுப்பாளர் சகோ அமீர் பாட்சா அவர்கள் கான்பரன்ஸ் (ஆன்லைன்) மூலம் ஆலோசனை வழங்கினார்.
கிளை செயற்குழு
அல்லாஹுவின் பேரருளால் தமிழ்நாடு தஹ்வீத் ஜமாஅத் பொதக்குடி கிளையின் செயற்குழு 20-11-2010 அன்று மஹ்ரிப் தொழுகைக்கு பின்பு ஆய்ஷா பள்ளியில் நடைப்பெற்றது, இன்சா அல்லா மிகவிரைவில் நம் ஜமாத்தின் சார்பில் அல்லாஹுவின் ஆலயம் (பள்ளிவாசல்) கட்டுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற தீர்மானம் எடுக்கப்பட்டது.
அல்லாஹுவின் பேரருளால் தமிழ்நாடு தஹ்வீத் ஜமாஅத் பொதக்குடி கிளையின் செயற்குழு 20-11-2010 அன்று மஹ்ரிப் தொழுகைக்கு பின்பு ஆய்ஷா பள்ளியில் நடைப்பெற்றது, இன்சா அல்லா மிகவிரைவில் நம் ஜமாத்தின் சார்பில் அல்லாஹுவின் ஆலயம் (பள்ளிவாசல்) கட்டுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற தீர்மானம் எடுக்கப்பட்டது.
வாழ்வாதார உதவி
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் பொதக்குடி கிளையின் சார்பில் 4-12-2010 அன்று ஷேக் அப்துல் காதர் என்ற சகோதருக்கு வாழ்வாதார உதவியாக ரூபாய் 2000 ( இரண்டாயிரத்தை) சகோதரர் பதுருத்தீன் அவர்கள் வழங்கினார்கள்!
கிளை செயல்வீரர்கள் கூட்டம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பொதக்குடி கிளையில் 19-11-2010 வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகைக்குப் பின்பு கிளை செயல்வீரர்கள் கூட்டம். கிளை செயலாளர் சகோ ஜகபர்தீன் (9750030296 ) அவர்களின் தலைமையில் நடைபெற்றது. கிளை வளர்ச்சியைக்குறித்தும், செயல்பாடுகளைக் குறித்தும் பேசியதுடன் கிளை பொதுக்குழுவை (20-11-2010) மக்ரிபுக்குப் பிறகு கூட்டுவதென முடிவெடுக்கப்பட்டது!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பொதக்குடி கிளையில் 19-11-2010 வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகைக்குப் பின்பு கிளை செயல்வீரர்கள் கூட்டம். கிளை செயலாளர் சகோ ஜகபர்தீன் (9750030296 ) அவர்களின் தலைமையில் நடைபெற்றது. கிளை வளர்ச்சியைக்குறித்தும், செயல்பாடுகளைக் குறித்தும் பேசியதுடன் கிளை பொதுக்குழுவை (20-11-2010) மக்ரிபுக்குப் பிறகு கூட்டுவதென முடிவெடுக்கப்பட்டது!
நம் ஜமாத்தின் ஜும்மா உரை
(சுவர்க்கம்)
பாகம்-1 பாகம்-2
ஹஜ் பெருநாள் தொழுகை மற்றும் கூட்டு குர்பானி
வியாழக்கிழமை 18-11-2010 அன்று த த ஜ பொதக்குடி கிளை சார்பில் பெருநாள் தொழுகையும் நடத்தி ஆடு, மாடு, ஒட்டகம் கூட்டுக்குர்பானியும் (ஏழைகளுக்கு) விநியோகிக்கப்பட்டது.
*** எல்லா புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே ***
நம் ஜமாத்தின் செயல் பாடுகள்
ஜும்மா தொழுகை
தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் கீழ் இயங்கும் ஆயிஷா (ரலி) பள்ளி வாசலில் நடைபெற்ற ஜும்ஆ தொழுகையில் கலந்து கொண்ட ஆண்கள் மற்றும் பெண்கள்.( நாள் : 01-01-2010 வெள்ளிக்கிழமை ) இந்த காட்சியை பார்க்கக்கூடிய சகோதரர்கள் உங்களின் குடும்பப் பெண்களையும்,குடும்ப உறுப்பினர்களையும், ஆயிஷா பள்ளியில் தொழுகையில் கலந்து கொள்வதற்கும், நலவான விஷயங்களில் பங்கு பெறுவதற்கும் தூண்டலாமே! நம் ஜமாஅத்தின் வளர்ச்சிக்கு நாம் முயற்சி எடுக்க வில்லையென்றால் வேறு யார் முயற்சி எடுப்பார்..?
தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் கீழ் இயங்கும் ஆயிஷா (ரலி) பள்ளி வாசலில் நடைபெற்ற ஜும்ஆ தொழுகையில் கலந்து கொண்ட ஆண்கள் மற்றும் பெண்கள்.( நாள் : 01-01-2010 வெள்ளிக்கிழமை ) இந்த காட்சியை பார்க்கக்கூடிய சகோதரர்கள் உங்களின் குடும்பப் பெண்களையும்,குடும்ப உறுப்பினர்களையும், ஆயிஷா பள்ளியில் தொழுகையில் கலந்து கொள்வதற்கும், நலவான விஷயங்களில் பங்கு பெறுவதற்கும் தூண்டலாமே! நம் ஜமாஅத்தின் வளர்ச்சிக்கு நாம் முயற்சி எடுக்க வில்லையென்றால் வேறு யார் முயற்சி எடுப்பார்..?
மருத்துவ உதவி
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பொதக்குடி கிளையின் சார்பில் இதய வால்வு நோயால் பாதிக்கப்பட்ட சகோதரர் செய்யது அலி அவர்களுக்கு மருத்துவ உதவியாக ரூபாய் 1000(ஆயிரம்) கிளை செயலாளர் SS அப்துல்லாஹ் அவர்களால் வழங்கப்பட்டது.
நம் ஜமாத்தின் செயல் பாடுகள்
ஜும்மா தொழுகை
தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் கீழ் இயங்கும் ஆயிஷா (ரலி) பள்ளி வாசலில் நடைபெற்ற ஜும்ஆ தொழுகையில் கலந்து கொண்ட ஆண்கள் மற்றும் பெண்கள்.( நாள் : 01-01-2010 வெள்ளிக்கிழமை ) இந்த காட்சியை பார்க்கக்கூடிய சகோதரர்கள் உங்களின் குடும்பப் பெண்களையும்,குடும்ப உறுப்பினர்களையும், ஆயிஷா பள்ளியில் தொழுகையில் கலந்து கொள்வதற்கும், நலவான விஷயங்களில் பங்கு பெறுவதற்கும் தூண்டலாமே! நம் ஜமாஅத்தின் வளர்ச்சிக்கு நாம் முயற்சி எடுக்க வில்லையென்றால் வேறு யார் முயற்சி எடுப்பார்..?
தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் கீழ் இயங்கும் ஆயிஷா (ரலி) பள்ளி வாசலில் நடைபெற்ற ஜும்ஆ தொழுகையில் கலந்து கொண்ட ஆண்கள் மற்றும் பெண்கள்.( நாள் : 01-01-2010 வெள்ளிக்கிழமை ) இந்த காட்சியை பார்க்கக்கூடிய சகோதரர்கள் உங்களின் குடும்பப் பெண்களையும்,குடும்ப உறுப்பினர்களையும், ஆயிஷா பள்ளியில் தொழுகையில் கலந்து கொள்வதற்கும், நலவான விஷயங்களில் பங்கு பெறுவதற்கும் தூண்டலாமே! நம் ஜமாஅத்தின் வளர்ச்சிக்கு நாம் முயற்சி எடுக்க வில்லையென்றால் வேறு யார் முயற்சி எடுப்பார்..?
தெருமுனை பிரச்சாரம்
அல்லாஹ்வின் பேரருளால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பொதக்குடி கிளையின் சார்பில் 08-01-2010 வெள்ளிக்கிழமை அன்று மாலை 4 : 30 மணிமுதல் இரவு 9 : 00 மணிவரை பொதக்குடியில் A பஜார் புதுதெரு, நூரியாதெரு, B பஜார் மற்றும் சற்குரு தெரு சந்திப்பு ஆகிய மூன்று பகுதிகளில் விழிப்புணர்வு தெருமுனைப்பிரச்சாரம் பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் மிகச்சிறப்பாக அல்லாஹ்வின் உதவியால் நடைப்பெற்றது. சொல்ல வேண்டிய கருத்துக்கள் மக்களுக்கு மிகத்தெளிவாக தயவு தாச்சயமின்றி எடுத்து சொல்லப்பட்டது.
எல்லாப்புகழும் புகழ்ச்சியும் அல்லாஹ்ஒருவனுக்கே .
எல்லாப்புகழும் புகழ்ச்சியும் அல்லாஹ்ஒருவனுக்கே .
கல்வி வழி காட்டி முகாம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் பொதக்குடி கிளையின் மாணவரணி சார்பில் கல்வி வழிகாட்டி முகாம் ஆயிஷா ரலி பள்ளியில் 24-01-2010 ஞாயிற்றுக்கிழமை காலை 10:00 மணிமுதல் மதியம் 3:00 வரை நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் மாவட்ட மாணவரணியின் செயலாளர் சகோ m முஹம்மத் ஷம்சுத்தீன் B.E (lectur in M.I.E.T college trichy), மாவட்ட மாணவரணியின் கூடுதல் பொறுப்பாளர் சகோ M முஹம்மத் பாசித்B.COM,CA. ஆகியோர் மிகச்சிறப்பான முறையில் தேர்வுக்குத்தயாரகுவதைக்குரித்தும், தேர்வை எதிர்கொள்வதைக்குரித்தும் விளக்கம் கொடுத்தார்கள்.இந்த நிகழ்ச்சியில் 9,10,11,12. ஆகிய வகுப்புகளைசேர்ந்த 153 மாணவ மாணவிகள் கலந்து கொண்டார்கள். நிகழ்ச்சிக்கு வருகை தந்திருந்த அணைத்து மாணவ, மாணவிகளுக்கும் மிகச்சிறந்த வழிக்காட்டுதல் தங்களுக்கு காட்டப்பட்டிருக்கிறது என்ற முழு திருப்தியையும் காண முடிந்தது. அல்ஹம்துலில்லாஹ்.