தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் பொதக்குடி கிளை செயல்பாடுகளை 24.07.2015 வெள்ளிகிழமை மதியம் 5 மணியளவில் துபாய் அவுத் மேத்தா பகுதியில் உறுப்பினர் மற்றும் ஆதரவாளர்களுடன் சகோ. அமீர் பாட்சா தலைமையில் கலந்துரையாடல் நடத்தப்பட்டுள்ளது, அது சமயம் தற்போதைய மற்றும் எதிர்கால சமுதாய செயல் பாடுகளை மேலும் வீரியத்துடன் செயல் படுத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.
இரத்ததான முகாம் 09-11-201419-11-2014 அன்று நமது கிளையின் சார்பாக பொதக்குடி காந்தி தெரு அருகில் அமைந்துள்ள அரசினர் உயர் நிலை பள்ளி வளாகத்தில் இரத்த தான முகம் சிறப்பாக நடைப்பெற்றது இதில் ஆண்களும் பெண்களும் திரளாக கலந்து கொண்டு தங்களுடைய இரத்தத்தை தனமாக அளித்து சிறப்பித்தனர், எல்லா புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே.
தெருமுனை பிரச்சாரம்இரத்த தான முகாமை வலியுறுத்தி தெருமுனை பிரச்சாரம் பொதக்குடி பல பகுதிகளில் நடத்தப்பட்டது அதை கேட்டு பொது மக்கள் பயனடைந்தனர்.
ஏழை சகோதரிக்கு உதவிஏழை சகோதரிக்கு உதவி தொகையாக வழங்கப்பட்டது.
பொதக்குடி ஆய்ஷா (ரலி) ஜும்மா பள்ளிவாசலில் ஜும்மா உரை சகோ. செய்யது இப்ராகிம், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில துணை தலைவர்கடந்த வெள்ளி 17-10-2014 அன்று ஜும்மா உரை சகோ. செய்யது இப்ராகிம், (தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில துணை தலைவர்) சிறப்புரையாற்றினார், ஜும்மா தொழுகை முடிந்து மதியம் உணவிற்கு பின்பு கேள்வி பதில் நிகழ்ச்சியில் சகோ. செய்யது இப்ராகிம் சிறப்பான முறையில் சகோதர, சகோதரி கேள்விகளுக்கு பதில் அளித்தார், இந்நிகழ்ச்சி அசர் தொழுகை வரை நீடித்தது.
எல்லா புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே !!! ஹஜ்பெருநாள்-2015 திடல் தொழுகை மற்றும் கூட்டு குர்பானி06-10-2014 அன்று நடைப்பெற்ற ஹஜ் பெருநாள் திடல் தொழுகை மற்றும் கூட்டு குர்பானி நிகழ்வுகள்.
பொதக்குடி கிளையில் கோடை காலப் பயிற்சி முகாம்
|
கூடு என்ற பெயரில் கூத்து
|
இன்றைய இஸ்லாமிய பெண்கள்
பெண்கள் பயான் பொதக்குடி கிளையில் மர்கசில் வைத்து ,பெண்கள் பயான் 6-04-2013 சனிக்கிழமை மாலை அசர் தொழுகைக்குப் பின்பு நடைப் பெற்றது, சகோ அப்துல் ஹமீது மஹ்ளரி அவர்கள் "இன்றைய இஸ்லாமிய பெண்கள்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார், இதில் பெண்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்!
|
சந்தனகூட்டை கண்டித்து அன்றைய மக்கத்து காபிர்களும், இன்றைய முஸ்லிம்களும் நோட்டீஸ் வினியோகம்
பொதக்குடியில்...சந்தனக் கூட்டைக்கண்டித்து அன்றைய மக்கத்து காபிர்களும்,இன்றைய முஸ்லிம்களும் "என்ற தலைப்பில் 1000 நோட்டிஸ் பொதக்குடி முழுவதும் 27-03-2013 முதல் 29-03-2013 ஆகிய தினங்கள் வரை வீடுகளிலும், கடை வீதிகளிலும் விநியோகம் செய்யப்பட்டது!
நோட்டீஸ் வினியோகம் சைத்தான் கலாச்சாரத்தை எதிர்த்து
தெருமுனை பிரச்சாரம்
நம் கிளையில் சந்தனக் கூடைக்கண்டித்து தெருமுனைப் பிரச்சாரம் 27-03-2013 அன்று மக்ரிப் தொழுகைக்குப் பின்பு சற்குரு தெருவில் நடந்தது, சகோ அப்துல் ஹமீத் மஹ்ளரி அவர்கள் "இறுதி மூச்சு வரை ஈமானுடன்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினா
சைத்தான் கலாச்சாரமான சந்தன கூடை எதிர்த்து
தர்கா வழிபாடு புத்தகம் விநியோகம்
இன்னும் ஓரிரு நாளில் பொதக்குடி தர்காவில் "சந்தனக் கூடு"நடைபெறுகிறது..இந்த வருஷம் அனாச்சாரம் அதிகமாக நடைபெறுவதால்..இந்த அனாச்சாரன்களைக் கண்டித்து பொதக்குடி கிளை பல வழிகளில் மக்களுக்கு பிரச்சாரம் செய்து வருகிறது..அதில் ஒரு பகுதியாக சகோ பீஜே அவர்கள் எழுதியுள்ள, 16 ரூபாய் மதிப்புள்ள தர்கா வழிபாடு புத்தகம் பொதக்குடி பகுதியில் வீடுகளிலும்,கடைவீதிகளிலும் 500 எண்ணம் விநியோகம் செய்யப்பட்டது.20-03-2013 முதல் 27-03-2013 ஆகிய தேதிகள் வரை பொதக்குடி பகுதி முழுவதும் விநியோகிக்கப்பட்டது!
அல்ஹம்துலில்லாஹ்!
அல்ஹம்துலில்லாஹ்!
பொதக்குடியில் நடைப்பெறும் சந்தனக்கூடு எனும் சைத்தான் கலாசாரத்தை ஒழிக்க இதோ...
இன்ஷா அல்லாஹ் இது லித்தோஸ் மாடல், சந்தனக்கூடு எனும் சைத்தான் கலாச்சாரத்தை கண்டித்து பொதக்குடி முழுவதும் இந்த போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.
கூடு அநாச்சாரத்தை எப்படி அணுகலாம்
நமது கிளையில் கூடு அநாச்சாரத்தை எப்படி அணுகலாம் ..? என்பது குறித்து ஒருங்கிணைந்த கிளைகளின் ஆலோசனைக் கூட்டம்! 17-03-2013 அன்று நடைப்பெற்றது.
என்றும் இல்லாத அளவு இந்த வருஷம் பொதக்குடி தர்காவில் அநாச்சாரங்கள் கட்டவிழ்த்து விடப்பட்டதால்..அதை எந்த முறை பிரச்சாரத்தின் மூலம் வீரியம் இழக்கச் செய்யலாம் என்பது சம்பந்தமான ஆலோசனைக் கூட்டம் பொதக்குடி ஆயிஷா பள்ளிவாசலில் மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் 17-03-2013 அன்று இஷா தொழுகைக்குப் பின்பு நடைப் பெற்றது, துண்டுப் பிரசுரங்கள்,ஃபிளக்ஸ், போஸ்டர், பொதுக்கூட்டம் ஆகிய வழிகளில் பன்முனை தாக்குதல் வழியாக இந்த அநாச்சாரத்தை மக்கள் மன்றத்தில் கொண்டு செல்லலாம் என்று முடிவெடுக்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்!
என்றும் இல்லாத அளவு இந்த வருஷம் பொதக்குடி தர்காவில் அநாச்சாரங்கள் கட்டவிழ்த்து விடப்பட்டதால்..அதை எந்த முறை பிரச்சாரத்தின் மூலம் வீரியம் இழக்கச் செய்யலாம் என்பது சம்பந்தமான ஆலோசனைக் கூட்டம் பொதக்குடி ஆயிஷா பள்ளிவாசலில் மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் 17-03-2013 அன்று இஷா தொழுகைக்குப் பின்பு நடைப் பெற்றது, துண்டுப் பிரசுரங்கள்,ஃபிளக்ஸ், போஸ்டர், பொதுக்கூட்டம் ஆகிய வழிகளில் பன்முனை தாக்குதல் வழியாக இந்த அநாச்சாரத்தை மக்கள் மன்றத்தில் கொண்டு செல்லலாம் என்று முடிவெடுக்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்!
தர்காவுக்கு எதிரே தெருமுனைப் பிரச்சாரம் 9-03-2013
பொதக்குடியில் உள்ள பெரிய தர்காவுக்கு எதிரே 9-03-2013 வெள்ளிக்கிழமை அன்று...மாலை "நிரந்தர நரகத்தை தரும்.தர்கா வழிபாடு" என்ற தலைப்பில் சகோ அப்துல் ஹமீது மஹ்ளரி அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்...தர்காவுக்கு வந்த பலர் இந்த பிரச்சாரத்தைக் கேட்க தர்காவுக்கு வெளியே வந்து காது கொடுத்து கேட்டது, சத்தியத்திற்கு அல்லாஹ் கொடுத்த வெற்றி !அல்ஹம்துலில்லாஹ்!!
நம் கிளையின் பள்ளி கட்டுமான தொடர்ச்சி
மினாரா கட்டப்பட்டு வருகிறது, பெண்கள் பகுதி முழுவதும் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்து வருகிறது
இன்ஷா அல்லாஹ்!
அத்திக்கடை கிளையில் ஓர் இறைகொள்கைக்காக ஓர் இறை இல்லம்
திருவாரூர் மாவட்டம் அத்திக்கடையில் இன்ஷா அல்லாஹ், அல்லாஹ் ஒருவனை மட்டுமே வழிபட்டு அவனது தூதர் நபிகள் நாயகம் ரசுல் (ஸல்ல) அவர்களது வழிகாட்டுதளை மற்றும் நடைமுறை படுத்தக்கூடிய ஏகத்துவ இறை இல்லம் கட்டுமானப்பணி துவங்கப்பட்டுள்ளது.
சொர்கத்தில் இடம் வேண்டுமா? அறிய வாய்ப்பு :
யார் ஒருவர் அல்லாஹ்விற்காக பள்ளியை கட்டுகிறாரோ அவருக்காக அல்லாஹ் சுவற்கத்தில் ஓர் மாளிகையை எழப்புகிறான் நிந்தர தர்மம் (சதக்கத்துல் ஜாரியா) கிடைக்கப்பெறும்.
ஒரு மனிதன் மரணித்து விட்டால் மூன்று காரியங்கள் தவிர மற்ற செயல்பாடுகள் முடிந்து விடும். அவை நிலையான தர்மம், பிறர் பயன் பெறும் கல்வி , தனக்காகப் பிரார்த்தனை செய்யும் நல்லொழுக்கமுள்ள சந்ததி என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி) நூல் : முஸ்லிம் 3084
நீங்கள் செய்யும் இத்தகைய உதவி மூலம் சதக்கத்து ஜாரிய என்னும் நிறந்தர நன்மையை உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் அல்லாஹ் தந்தருள்வானாக.
அன்பு கொள்கை சொந்தங்களே ,
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யார் முறையான சம்பாத்தியத்தில் ஒரு பேரீச்சம் பழத்தின் மதிப்புக்குத் தர்மம் செய்தாரோ.. அல்லாஹ் பரிசுத்தமானவற்றைத் தவிர வேறெதையும் ஏற்றுக் கொள்வதில்லை - அதை நிச்சயமாக அல்லாஹ் தன்னுடைய வலது கரத்தால் ஏற்று, பிறகு நீங்கள் உங்களின் குதிரைக் குட்டியை வளர்ப்பது போன்று அதன் நன்மையை மலைபோல் உயரும் அளவுக்கு வளர்த்து விடுவான்."
அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார் புஹாரி : 1410
பொருளாதார நெருக்கடிக்கிடையில் கட்டுமானப் பணிகள் துவங்கி செம்மையாக நடைப்பெற்று வருகிறது. ஒரு சதுர அடியின் விளை 1500 ரூபாய் நிருனையிக்கப்பட்டுள்ளது. உங்களுடைய பொருளாதாரத்தை அல்லாஹ்விற்காக வாரிவழங்குவீராக.
மேலும் தொடர்புக்கு தலைவர் சபிர் அகமது கைபேசி எண் : 9578571683, இப்ராஹீம் செயலாளர் : 9750502678, துனை செயலாளர் ஃபய்சல் : 9965042642.
சொர்கத்தில் இடம் வேண்டுமா? அறிய வாய்ப்பு :
யார் ஒருவர் அல்லாஹ்விற்காக பள்ளியை கட்டுகிறாரோ அவருக்காக அல்லாஹ் சுவற்கத்தில் ஓர் மாளிகையை எழப்புகிறான் நிந்தர தர்மம் (சதக்கத்துல் ஜாரியா) கிடைக்கப்பெறும்.
ஒரு மனிதன் மரணித்து விட்டால் மூன்று காரியங்கள் தவிர மற்ற செயல்பாடுகள் முடிந்து விடும். அவை நிலையான தர்மம், பிறர் பயன் பெறும் கல்வி , தனக்காகப் பிரார்த்தனை செய்யும் நல்லொழுக்கமுள்ள சந்ததி என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி) நூல் : முஸ்லிம் 3084
நீங்கள் செய்யும் இத்தகைய உதவி மூலம் சதக்கத்து ஜாரிய என்னும் நிறந்தர நன்மையை உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் அல்லாஹ் தந்தருள்வானாக.
அன்பு கொள்கை சொந்தங்களே ,
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யார் முறையான சம்பாத்தியத்தில் ஒரு பேரீச்சம் பழத்தின் மதிப்புக்குத் தர்மம் செய்தாரோ.. அல்லாஹ் பரிசுத்தமானவற்றைத் தவிர வேறெதையும் ஏற்றுக் கொள்வதில்லை - அதை நிச்சயமாக அல்லாஹ் தன்னுடைய வலது கரத்தால் ஏற்று, பிறகு நீங்கள் உங்களின் குதிரைக் குட்டியை வளர்ப்பது போன்று அதன் நன்மையை மலைபோல் உயரும் அளவுக்கு வளர்த்து விடுவான்."
அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார் புஹாரி : 1410
பொருளாதார நெருக்கடிக்கிடையில் கட்டுமானப் பணிகள் துவங்கி செம்மையாக நடைப்பெற்று வருகிறது. ஒரு சதுர அடியின் விளை 1500 ரூபாய் நிருனையிக்கப்பட்டுள்ளது. உங்களுடைய பொருளாதாரத்தை அல்லாஹ்விற்காக வாரிவழங்குவீராக.
மேலும் தொடர்புக்கு தலைவர் சபிர் அகமது கைபேசி எண் : 9578571683, இப்ராஹீம் செயலாளர் : 9750502678, துனை செயலாளர் ஃபய்சல் : 9965042642.
இஸ்லாத்தை தன் வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்ட
(கொரடாச்சேரியை சேர்ந்த) தாய் மற்றும் மகள்.
நம் கிளையில் 26-02-2013 அன்று காலை 10.30 மணிக்கு ஆயிஷா (ரலி )பள்ளியில் கொரடாச்சேரியை சேர்ந்த அபூபக்கர் (இவர் கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்புதான் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்.இவர், தன் குடும்பத்தினருக்கு இஸ்லாத்தைக் குறித்து தஃவா செய்ததின் பலனாக )இவருடைய தாயும், சகோதரியும் இஸ்லாத்தை மனப் பூர்வமாக ஏற்றுக் கொள்ள முன்வந்தார்கள்முல்லையம்மாலின் பெயரை கதிஜா எனவும். தனலெட்சுமியின் பெயரை சுமையா எனவும் பெயர் மாற்றம் செய்துக் கொண்டனர். அவர்களுக்கு பொதக்குடி இமாம் அப்துல் ஹமிது மஹ்ளரி அவர்கள் கலிமாவை சொல்லிக் கொடுத்தார். அவருக்குதாஃவா செய்து, குர்ஆன் தமிழ் மொழிபெயர்ப்பு ஒன்றும் , புத்தகங்களும் வழங்கப்பட்டது. இந்த சமயத்தில் நிர்வாகிகளும், உறுப்பினர்களும் உடன் இருந்தனர்.
அல்ஹம்துலில்லாஹ் !
அல்ஹம்துலில்லாஹ் !
உடல் நலம் குன்றிய மூன்று முதியவர்கள்
27/02/2013 இன்று மரக்கடை லெட்சுமாங்குடி கிளையின் சார்பாகபொதக்குடியில் உடல் நலம் பாதிக்கப்பட்ட மூன்று சகோதரிகளை நமது கிளை நிருவாகிகள் சந்தித்து உடல் நலம் விசாரித்து துவா செய்தார்கள். மேலும் அவர்களுக்கு அன்பளிப்பாக பிஸ்கட், மற்றும் உணவு பொருட்கள் மரக்கடை லெட்சுமாங்குடி கிளையின் சார்பாக வழங்கப்பெற்றது.
பிப்ரவரி 14 – கற்பு கொள்ளையர் தினம்
பிரப்வரி 14 : காதலர் தினம் என்ற பெயரில் பெண்களின் கற்பை சூறையாடும் கற்பு கொள்ளையர் தினமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. மீடியாக்கள் கொடுக்கும் முக்கியதுவத்தால் இந்த கற்பு கொள்ளையர் தினம் இன்றைக்கு இந்திய சமூகத்தில் புற்று நோய்போல் பரவி வருகின்றது. மக்களின் உணர்வு களை தூண்டி அதை பணமாக்க துடிக்கும் மேற்கத்திய பண முதலைகளினால் உருவாக்கப்பட்ட இந்த தினம் இன்று இந்தியாவில் உள்ள இளம் வயதினரையும் தொற்றிக்கொண்டது
கிறிஸ்துவ போதகர் வேலன்டைன் என்பரின் நினைவாக ரோம பாரம்பரியத்தின் வாயிலாக உருவானது தான் இந்த வேலன்டைன்ஸ் தினம் (Valentine day) பிப்ரவரி 14 ஆம் தேதி கொண்டாடப்படும் இந்த நாளை வணிகமயமாக்குவதற்காகவே மேற்கத்திய நாடுகள் இதை காதலர் தினமாக அறிவித்தது.
எதற்காக பிப்ரவரி 14 தேர்வு செய்யப்பட்டது என்பதற்கு எந்த சரியான வரலாறும் இல்லாத இந்த நாள், இன்றைக்கு பல பெண்களின் கற்பு பறிபோகும் நாளாக மாறிவிட்டது.
இன்றைக்கு உள்ள மீடியாக்கள் காதலை (காமக்களியாட்டத்தை) ஊக்கப் படுத்தும் வண்ணம் தனியாக பல்வேறு நிகழ்ச்சிகளை தயாரித்து வழங்கி சமுதாயத்தை சீரழித்து கொண்டு இருக்கின்றன. மீடியாக்கள் காதல் என்ற பெயரில் காமக் களியாட்டங்களில் ஈடுபடுவதை சாதாரணமான விஷயமாக்கிவிட்டது.
கேள் ஃபிரண்ட் இல்லாதவர்களை கோமாளிகள் போல் சித்தரித்து, கேள் ஃபிரண்ட் இல்லாத நல்ல ஒழுக்கம் உள்ள இளைஞர்களை ‘அடப்பாவி உனக்கு கேல் ஃபிரண்ட் இல்லையா? அப்ப நீ வேஸ்ட் என்று கூறும் அளவிற்கு காதலை கவுரமான விஷயமாக மாற்றி விட்டது.
உங்கள் காதலிக்கு, காதலனுக்கு SMS அனுப்புங்கள் அதை டிவியில் போடுகின்றோம் விலை வெறும் ரூ.3, ரூ.6 தான் என இளஞர்களின் உணர்வுகளை காசாக்கி கொண்டிருக்கின்றனர் மீடியாக்கள். இதை அறியாத அப்பாவி இளைஞர்களும் இளம் பெண்களும், இந்த காதல் எனும் சமூக சீர்கேட்டில் மூழ்கி வருகின்றனர்.
காதலிப்போர் கவனத்திற்க்கு :
காதல் என்பது ஒரு மாயை, இளம்வயதியில் வரும் உணர்வுகளின் வெளிப்பாடு, இதை நாம் கவனமாக கட்டுப்பாடுடன் வைத்து கற்பை காத்து கொள்ள வேண்டும். கட்டுப்பாட்டில் கொஞ்சம் கவனம் தவறினாலும் கற்பை இழந்து சமுதாயத்தில் இழிபிறவிகளாக நடமாட வேண்டியது தான்.
பெரும்பாலான காதல்கள் திருமணத்தில் முடிவதில்லை, திருமணத்தில் முடிந்த பெரும்பாலான காதல் பிரச்சனையில் தான் முடிந்துள்ளது. காதலிக்கும் போது நம்முடைய நற்குணங்கள், மட்டுமே வெளிப்படும், காதலுக்காக எதையும் செய்ய துணிவார்கள், ஆனால் திருமணத்திற்க்கு பிறகு நிஜவாழ்க்கைக்கு வந்த பிறகு குடும்பத் தின் கஷ்டம்தான் கண் முன்னே இருக்குமே தவிர கற்பனை காதல் அல்ல,
ஆசை வார்தைகளை மட்டுமே கண்ட காதல் வாழ்க்கை முடிந்து ஒருவரை ஒருவர் திட்டிக்கொள்ளும் வார்த்தை தான் மிஞ்சி இருக்கும். ஏன் இவளை திருமணம் செய்தோம் நம் தாய் தந்தையர் பார்த்த பெண்ணையே திருமணம் செய்து இருக்கலாம் என எண்ணம் வரும் பின்பு வாழ்க்கை கசந்துவிடும், பெற்றோர்களின் ஆதரவு இல்லாததால் , தன்னை காதலித்து திருமணம் செய்து கொண்டவன் என்ன தவறு செய்தாலும் பெரியவர்களிடம் முறையிட முடியாமல் போய்விடும், (காதலன் ) கணவன் செய்யும் எல்லா கொடுமைகளையும் சகித்துகொண்டும் வாழ வேண்டிய அவல நிலைக்கு நீங்கள் தள்ளப்படுவீர்கள். இன்று காதலுக்கு துணை நிற்க்கின்றேன் என்று சொல்லும் நண்பர்கள் எல்லாம் நாளை காணமல் போய்விடுவார்கள், வாழ்வில் கஷ்டம் மட்டுமே மிஞ்சி இருக்கும்.
சினிமாக்கள் தான் உங்களுக்கு தவறான வழிகாட்டுகின்றன, சினிமாவில் பார்ப்பது போல் இல்லை காதல், காதல் எங்கு போய் முடியும் என்றால், ஒன்று கற்பை இழந்து இழி பிறவிகளாக சமுதாயத்தில் நடமாடுவது, அல்லது காதலனை திருமணம் செய்தாலும் அவன் செய்யும் அனைத்து கொடுமைகளையும் சகித்து கொண்டு உதவ ஆளில்லா மல் கஷ்ட்டப்பட்டு கொண்டே வாழ்வது.
காதல் செய்வதால் ஏற்படும் இழப்புகள் :
இளம் பெண்களே! பெரும்பாலும் காதலிக்கும் இளைஞர்கள் தங்களுடைய உணர்வுகளுக்கு தீனிபோடவே பெண்களிடம் ஆசை வார்த்தை கூறி காதல் என்னும் மாய வலை யில் விழ வைத்து தங்கள் இச்சைகளை தீர்த்துகொள்கின்றனர். இது அறியாத அப்பாவி இளம் பெண்கள் ஆண்களின் ஆசை வார்த்தையில் மயங்கி தங்களுடைய கற்பை தொலைத்து மானம் இழந்து, மரியாதை இழந்து பெற்றோர்களுக்கு அவப்பெயரை ஏற்படுத்திகொடுத்து சமுதாயத்தின் இழி சொல்லுக்கும் பழி சொல்லுக்கும் ஆழாகின்றனர். நீங்கள் காதலிப்பதாலோ, காதல் என்ற போர்வையில் ஆண்களுடன் தவறான நடவடிக்கையில் ஈடுபடுவதினாலோ ஆண்களுக்கு எந்த நஷ்ட்டமும் இல்லை, அனைத்து நஷ்டமும், கஷ்டமும் பெண்களுக்குதான்.
காதல் காதல் என்று உங்களுடன் சேர்ந்து எல்லா தவறுகளும் செய்துவிட்டு அவனால் சமுதாயத்தில் நன்றாக வாழமுடிகின்றது, ஆனால் பெண்களாகிய உங்கள் நிலையை எண்ணி பாருங்கள், திருமணம் கடினமாகின்றது, பிறகு நமக்கு பிறக்கும் பிள்ளைகளுக்கு இந்த விஷயம் தெரிந்தால் நம்மை மதிப்பார்களா? சிந்தித்து பாருங்கள் இளம் பெண்களே! ஆண்கள் தன் இச்சையை தீர்த்துகொள்ள உங்களை ஏமாற்றுகின்றான், நம்பாதீர்கள், பெற்றோர் சொல்லும் அறிவுறையை கேட்டு நல்ல ஒழுக்கமுள்ள, ஆற்றல் உள்ள பெண்களாக சமுதாயத்தில் கண்ணியத்துடன் வலம் வாருங்கள், உங்களை பெற்று வளர்த்த பெற்றோர்களுக்கு நற்பெயரை வாங்கி கொடுங்கள், உங்கள் பிள்ளைகள் உங்களை மதித்து நடக்கும் படி சமுதாயத்தில் மதிப்புள்ள மங்கையாக வாழுங்கள். உணர்வுகளை கட்டுபடுத்தி கட்டுபாட்டுடன் இருந்தால் கண்ணியமாக வாழலாம்
படிக்கும் இளைஞர்களே!
காதலிக்காக ஒதுக்கும் நேரத்தை நம் படிப்பிற்க்காக ஒதுக்கினால் அரியர் இல்லாமல் (பெயில் ஆகாமல்) தெர்வில் தேர்ச்சி பெற்று நல்ல வேலையில் அமரலாம். நம்மை கஷ்ட்டப்பட்டு படிக்க வைக்கும் பெற்றோர்களை காப்பாற்றலாம், தன் பிள்ளை தன்னை வயதான காலத்தில் காப்பாற்றுவான் என கணவுகளுடன் உங்களை படிக்கவைக்கும் பெற்றோர்களுக்கு செய்யும் துரோகம் தான் காதல் என்ற பெயரில் உங்கள் நேரத்தையும் வாழ்கையையும் வீணடிப்பது.
இளைஞர்களே!
உங்களுடைய பொருளாதாரத்தை வீணாக்கும் கருவியாகத்தான் காதலிகள் இருக்கின்றனர். காதலியின் சின்ன சிரிப்பிற்க்காக உங்கள் பெற்றோர்கள் கஷ்ட்டப்பட்டு சம்பாதிக்கும் பணத்தை வீண்விரயம் செய்ய வேண்டுமா? சிந்தித்து பாருங்கள். சினிமாவை பார்த்து காதல் என்னும் மாய வலையில் விழுந்து தான் விரும்பும் பெண் தன்னை விரும்ப வில்லை என வாழ்க்கையை தொலைத்தவர்கள் எத்தனை பேர். நீங்கள் ஒரு பெண்ணை விரும்பி அந்த பெண் உங்களை புறக்கணித்தால் நீங்கள் மிகுந்த மன உலைச்சலுக்கு ஆளாவீர்கள் அது எப்போதும் உங்களை சோகத்திலேயே வைத்திருக்கும், வாழ்வில் சந்தோஷம் என்பதே பிறகு இருக்காது. உங்கள் ஆற்றல் அறிவு , கல்வி அனைத்தையும் இழந்து மன நோயாளியாக உலகத்தில் உலாவர வேண்டி இருக்கும். இளைஞர்களே! இது உங்களுக்கு தேவையா? எனவே காதலிக்க வேண்டும் என கனவில் கூட நினைக்காதீர்கள். வாழ்கை இழந்து மன நோயாளியாகிவிடுவோம்.
காதலும் (காம களிய்யாட்டங்களும்) விபச்சாரம்தான்
காதல் என்ற பெயரில் நடைபெறும் அநாச்சாரங்கங்கள் மற்றும் அசிங்கங்கள் அதிகரிக்க இஸ்லாம் எந்த அளவிற்கு இதை தடை செய்துள்ளது என்ற விழிப்புணர்வு இல்லாததே காரணம் . காதலும் ஒரு விபச்சாரம் தான் என்ற அறிவு நம் பெற்றோர்களிடத்திலும் பிள்ளைகளிடத்திலும் இருந்திருந்தால் இந்த தீமைகளில் இருந்து விலகி இருக்க முடியும்.
இறைவனின் தூதர் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்
“விபச்சாரத்தில் ஆதமுடைய மகனுக்குள்ள பங்கை இறைவன் எழுதியுள்ளான். அதை அவன் அடைந்தே தீருவான். கண் செய்யும் விபச்சாரம் பார்வையாகும். நாவு செய்யும் விபச்சாரம் பேச்சாகும். மனம் ஏங்குகின்றது. இச்சை கொள்கின்றது. பிறப்பு உறுப்பு இவை அனைத்தையும் உண்மையாக்குகின்றது; அல்லது பொய்யாக்குகின்றது”
(நூல்: புகாரி 6243)
தவறான பார்வையையும், சிந்தனையையும், பாலியல் தொடர்பான பேச்சுக்களையும் விபச்சாரத்தின் ஒரு பகுதி என்று இறைவனின் தூதர் நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். எனவே காதல் என்ற பெயரில் நடந்து வரும் காமக் களியாட்டங்களுக்கு இஸ்லாத்தில் எள்ளளவும் அனுமதி இல்லை. ஒருவர் ஒரு பெண்ணை மணம் முடிக்க விரும்பினால் அந்தப் பெண்ணின் பொறுப்பாளர்களிடம் போய் பேசி, மணம் முடித்துக் கொள்ள வேண்டும்இது தான் இஸ்லாம் கூறும் வழிமுறை.
மேற்குரிய அறிவுரைகளை பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு சிறுவயது முதல் கூறி இந்த காதல் எனும் சீர்கேட்டில் பிள்ளைகள் விழுந்து விடாமல் பாதுகாக்க வேண்டும்.ஆனால் மாணவ, மாணவியர் எப்படிக் காதலிக்க வேண்டும் என்ற கேடு கெட்ட கலாச்சாரத்தை டி.வி.க்கள் கற்றுக் கொடுக்கின்ற போது. பெற்றோரும் சேர்ந்து கொண்டு தான் அதை பார்க்கின்றனர்.விளைவு, பிள்ளைகள் பரீட்சையில் பெயிலாகுவது ஒருபுறமிருக்க யாருடனேனும் ஓடிப்போகும் போது பெற்றோர்கள் அவமானப்பட்டு தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு சென்று விடுகின்றனர்.
பெற்றோர் செய்கின்ற மற்றொரு பெரிய தவறு, தங்கள் பிள்ளைகளுக்கு செல்போன்கள் வாங்கிக் கொடுப்பதாகும்.செல்போன் பிள்ளைகளின் ஒழுக்க வாழ்வையும் பாழாக்கிக் கொண்டிருக்கிறது. பல்வேறு முனைகளில் செல்போன்கள் நமது பிள்ளைகளை ஒழுக்கக் கேட்டிற்கும், சீரழிவிற்கும் இழுத்துச் செல்கின்றன.செல்போன்களில் நடமாடும் பாலியல் வக்கிர, ஆபாச செயல்கள் இளைஞர் மற்றும் இளைஞிகளிடையே இன்றைக்கு சர்வசாதாரணமாக நடைபெற்று கொண்டிருக்கின்றது.
தங்கு தடையற்ற காதல் பேச்சுக்கள் இந்த செல்போன்களில் தான் நடைபெறுகின்றது: எந்த ஓர் ஆணும், பெண்ணும் நேரில் சந்திக்கும் போது, அவர்களது வெட்க உணர்வுகள் அவர்களிடமிருந்து வார்த்தைகள் வெளிவருவதைத் தடுத்து விடும். அத்துடன் சமுதாயத்தின் கழுகுப் பார்வைகள், சமூகக் கட்டுப்பாடுகள் பெரிய திரைகளாக நின்று, பெரும் தீமைகள் நடைபெறாமல் காக்கின்றன. ஆனால் இந்த வெட்கத் தடைகளையும், சமூகத் தடைகளையும் செல்போன்கள் தகர்த்தெறிந்து, தங்கு தடையற்ற செக்ஸ் பேச்சுக்களைப் பரிமாற்றம் செய்வதற்குத் துணை புரிகின்றன. வாலிப வயது ஆண், பெண் இருபாலரும் செல்போன்களை செக்ஸ் போன்களாகத் தான் பயன்படுத்துகின்றனர்.
இந்த காதல் எனம் சீர்கேட்டால் சமூகத்தின் ஒழுக்கம் எனும் கட்டமைப்பே சீர் குழைந்து விட்டது. எந்த அளவுக்கென்றால் திருமணததிற்கு முன் இப்போழுதெல்லாம் பெண்களுக்கு கன்னி பரிசோதனை (virgin test) நடத்தபடுகின்றது. இந்த காதல் சமூகத்தில் அவ்வளவு ஒழுக்க சீர்கேட்டை கொண்டு வந்துள்ளது.
இந்த காதலினால் ஒழுக்க கேடான விஷயங்கள் ஒருபுறமிருக்க இதையெல்லம் மிஞ்சும் அளவிற்கு இந்த காதல் என்ற சீர் கேட்டால் எத்தனை உயிர்கள் பறிபொகின்றது.தன்னை பெற்றத் தாய் வளர்த்த தந்தை தன்னை நேசிக்கவில்லை என எந்த ஒரு இளைஞனும் தற்கொலை செய்து கொண்டுள்ளானா? ஆனால் காதலி நேசிக்காததால் காதலன் தற்கொலை என்ற செய்தியை நிறை கேள்விபட்டிருப்போம். மகள் அல்லது மகன் ஓடிப்போய்விட்டதால் பெற்றோர்கள் அவமானத்தில் தற்கொலை செய்கின்றனர்.
பிள்ளைகளை ஒழுக்கத்துடன் ஒழுங்காக வளர்த்திருந்தால் இந்த அவல நிலை பெற்றோர்களுக்கு ஏற்படுமா? விட்டில் காதலுக்கு சம்மதிக்காததால் காதல் ஜோடி தற்கொலை! இந்த செய்தியும் பத்திரிக்கைகளில் அதிகம் பார்த்திருப்பீர்கள். ஆரம்பத்திலேயே காதல் சீர்கேட்டை பிள்ளைகளுக்கு புரிய வைத்திருந்தால் பிள்ளைகளை பரிகொடுக்கும் அவள நிலை பெற்றோர்களுக்கு ஏற்படுமா? தன் காதலியை காதலித்தவனை ஆத்திரத்தில் கொலை செய்த காதலன். அல்லது இன்னொருத்தவனை காதலித்ததால் காதலியை கொன்ற காதலன். இந்த செய்தியை பத்திரிக்கைகளில் பார்த்திருப்பீர்கள்.
இதில் கள்ளக் காதல் வேறு! அதில் ”கள்ளக் காதலன் கொலை” அல்லது ”கள்ளக் காதலி கொலை” என்று உயிர் பலி இதை விட அதிகம் என்பது பத்திரிக்கைப்படிப்பவர்களுக்கு தெரியும்.
இப்படி உயிர் கொல்லியமாகவும், ஒழுக்கக் கேட்டை கட்டவிழுத்து விடும் செயலாகவும் இருக்கும் இந்த காதலுக்கு ஒரு தினம் வைத்து உலகம் முழுவதும் கொண்டாடப்படுகின்றது. இதற்கெல்லாம் காரணம் எவன் செத்தாலும் எங்களுக்கு கவலை இல்லை எங்களுக்கு பணம் தான் முக்கியம் என்று மீடியாக்கள் கொஞ்சம் கூட சமுதாய அக்கரை இல்லாமல் செயல்பட்டு இந்த காதலை ஊக்கப்படுத்திக் கொண்டிருப்பதினால் தான்.
இப்படி காதலை ஆதரிப்பவர்களிடம் போய் ‘சார் நான் உங்க பொன்ன லவ் பன்னிக்கவா?’ என்று கேட்டால் ”டேய்! உன்ன ஈவ்டிசிங்ல போலிஸ்ல புடுச்சுகொடுத்துடுவேன்” என்று தான் கூறுவார்கள். ஏன் காதலித்தவர்ளே திருமணத்திற்கு பிறகு நம்ம பிள்ளைகள் காதல் கத்தரிக்கான்னு போய்விடக்கூடாது என்று தான் நினைப்பார்கள். அவ்வளவு ஏன்?, ஒரு பென்ணை காதலிக்கும் இளைஞன் தான், தன் அக்காவையோ அல்லது தங்கையையோ யாரேனும் காதலித்தால் முதலில் சன்டைக்கு போவான்.
அடுத்தவன் பிள்ளை நாசமா போனா பறவாயில்லை உன் அக்கா தங்கை நாசமாகிவிடக்கூடாது என்று சுய நலத்தோடு யோசிக்கும் இளைஞர்களே சமுதாய அக்ரையோடு நடந்து கொள்ளுங்கள்!
டிசம்பர் 1 ஆம் தேதிக்கு காரணமே பிப்ரவரி 14 ஆம் தேதி தான்
எய்ட்ஸ் எனும் உயிர்க் கொல்லி நோயை ஒழிக்க டிசம்பர் 1 உலக எய்ட்ஸ் நாளாக அனுசரிக்கப்படுகின்றது. எயிட்ஸ் நோய் வர காரணமாய் இருக்கும் காமக் களியாட்டங்களை (காதலை) அங்கீகரிக்கும் இந்த காதலர் (கற்பு கொள்ளையர் ) தினமும் உலக எயிட்ஸ் தினமும் ஒன்றே. எயிட்ஸ் நோய் போன்ற கொடிய நோய்கள் பரவ இது போன்ற காம களியாட்டங்களை அறங்கேற்றும் விழாகள் முதல் நிலை காரணிகளாய் இருக்கின்றன. எயிட்ஸ் நோய் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் அரசு எயிட்ஸ் நோய் வர காரணமாய் இருக்கும் இந்த காதலுக்கு (காம களியாட்டத்திற்க்கு) எதிராகவும் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்ய வேண்டும்.
சமுதாய அக்கரையுள்ள இளைஞர்களும், பிள்ளைகள் ஒழுக்கத்துடன் இருக்க வேண்டும் என்று நினைக்கும் பெற்றோர்களும் இந்த பிப்ரவரி 14-ஐ புறக்கணித்தால் உயிர் பலிகளும் சமூக சீர்கேடுகளும் அசிங்கங்களும் மற்றும் திருணமத்திற்கு முன்பே கற்பு பறிபோகும் நிலையும் ஏற்படாமல் நமது சமுதாயத்தை காப்பாற்றலாம்!
கிறிஸ்துவ போதகர் வேலன்டைன் என்பரின் நினைவாக ரோம பாரம்பரியத்தின் வாயிலாக உருவானது தான் இந்த வேலன்டைன்ஸ் தினம் (Valentine day) பிப்ரவரி 14 ஆம் தேதி கொண்டாடப்படும் இந்த நாளை வணிகமயமாக்குவதற்காகவே மேற்கத்திய நாடுகள் இதை காதலர் தினமாக அறிவித்தது.
எதற்காக பிப்ரவரி 14 தேர்வு செய்யப்பட்டது என்பதற்கு எந்த சரியான வரலாறும் இல்லாத இந்த நாள், இன்றைக்கு பல பெண்களின் கற்பு பறிபோகும் நாளாக மாறிவிட்டது.
இன்றைக்கு உள்ள மீடியாக்கள் காதலை (காமக்களியாட்டத்தை) ஊக்கப் படுத்தும் வண்ணம் தனியாக பல்வேறு நிகழ்ச்சிகளை தயாரித்து வழங்கி சமுதாயத்தை சீரழித்து கொண்டு இருக்கின்றன. மீடியாக்கள் காதல் என்ற பெயரில் காமக் களியாட்டங்களில் ஈடுபடுவதை சாதாரணமான விஷயமாக்கிவிட்டது.
கேள் ஃபிரண்ட் இல்லாதவர்களை கோமாளிகள் போல் சித்தரித்து, கேள் ஃபிரண்ட் இல்லாத நல்ல ஒழுக்கம் உள்ள இளைஞர்களை ‘அடப்பாவி உனக்கு கேல் ஃபிரண்ட் இல்லையா? அப்ப நீ வேஸ்ட் என்று கூறும் அளவிற்கு காதலை கவுரமான விஷயமாக மாற்றி விட்டது.
உங்கள் காதலிக்கு, காதலனுக்கு SMS அனுப்புங்கள் அதை டிவியில் போடுகின்றோம் விலை வெறும் ரூ.3, ரூ.6 தான் என இளஞர்களின் உணர்வுகளை காசாக்கி கொண்டிருக்கின்றனர் மீடியாக்கள். இதை அறியாத அப்பாவி இளைஞர்களும் இளம் பெண்களும், இந்த காதல் எனும் சமூக சீர்கேட்டில் மூழ்கி வருகின்றனர்.
காதலிப்போர் கவனத்திற்க்கு :
காதல் என்பது ஒரு மாயை, இளம்வயதியில் வரும் உணர்வுகளின் வெளிப்பாடு, இதை நாம் கவனமாக கட்டுப்பாடுடன் வைத்து கற்பை காத்து கொள்ள வேண்டும். கட்டுப்பாட்டில் கொஞ்சம் கவனம் தவறினாலும் கற்பை இழந்து சமுதாயத்தில் இழிபிறவிகளாக நடமாட வேண்டியது தான்.
பெரும்பாலான காதல்கள் திருமணத்தில் முடிவதில்லை, திருமணத்தில் முடிந்த பெரும்பாலான காதல் பிரச்சனையில் தான் முடிந்துள்ளது. காதலிக்கும் போது நம்முடைய நற்குணங்கள், மட்டுமே வெளிப்படும், காதலுக்காக எதையும் செய்ய துணிவார்கள், ஆனால் திருமணத்திற்க்கு பிறகு நிஜவாழ்க்கைக்கு வந்த பிறகு குடும்பத் தின் கஷ்டம்தான் கண் முன்னே இருக்குமே தவிர கற்பனை காதல் அல்ல,
ஆசை வார்தைகளை மட்டுமே கண்ட காதல் வாழ்க்கை முடிந்து ஒருவரை ஒருவர் திட்டிக்கொள்ளும் வார்த்தை தான் மிஞ்சி இருக்கும். ஏன் இவளை திருமணம் செய்தோம் நம் தாய் தந்தையர் பார்த்த பெண்ணையே திருமணம் செய்து இருக்கலாம் என எண்ணம் வரும் பின்பு வாழ்க்கை கசந்துவிடும், பெற்றோர்களின் ஆதரவு இல்லாததால் , தன்னை காதலித்து திருமணம் செய்து கொண்டவன் என்ன தவறு செய்தாலும் பெரியவர்களிடம் முறையிட முடியாமல் போய்விடும், (காதலன் ) கணவன் செய்யும் எல்லா கொடுமைகளையும் சகித்துகொண்டும் வாழ வேண்டிய அவல நிலைக்கு நீங்கள் தள்ளப்படுவீர்கள். இன்று காதலுக்கு துணை நிற்க்கின்றேன் என்று சொல்லும் நண்பர்கள் எல்லாம் நாளை காணமல் போய்விடுவார்கள், வாழ்வில் கஷ்டம் மட்டுமே மிஞ்சி இருக்கும்.
சினிமாக்கள் தான் உங்களுக்கு தவறான வழிகாட்டுகின்றன, சினிமாவில் பார்ப்பது போல் இல்லை காதல், காதல் எங்கு போய் முடியும் என்றால், ஒன்று கற்பை இழந்து இழி பிறவிகளாக சமுதாயத்தில் நடமாடுவது, அல்லது காதலனை திருமணம் செய்தாலும் அவன் செய்யும் அனைத்து கொடுமைகளையும் சகித்து கொண்டு உதவ ஆளில்லா மல் கஷ்ட்டப்பட்டு கொண்டே வாழ்வது.
காதல் செய்வதால் ஏற்படும் இழப்புகள் :
இளம் பெண்களே! பெரும்பாலும் காதலிக்கும் இளைஞர்கள் தங்களுடைய உணர்வுகளுக்கு தீனிபோடவே பெண்களிடம் ஆசை வார்த்தை கூறி காதல் என்னும் மாய வலை யில் விழ வைத்து தங்கள் இச்சைகளை தீர்த்துகொள்கின்றனர். இது அறியாத அப்பாவி இளம் பெண்கள் ஆண்களின் ஆசை வார்த்தையில் மயங்கி தங்களுடைய கற்பை தொலைத்து மானம் இழந்து, மரியாதை இழந்து பெற்றோர்களுக்கு அவப்பெயரை ஏற்படுத்திகொடுத்து சமுதாயத்தின் இழி சொல்லுக்கும் பழி சொல்லுக்கும் ஆழாகின்றனர். நீங்கள் காதலிப்பதாலோ, காதல் என்ற போர்வையில் ஆண்களுடன் தவறான நடவடிக்கையில் ஈடுபடுவதினாலோ ஆண்களுக்கு எந்த நஷ்ட்டமும் இல்லை, அனைத்து நஷ்டமும், கஷ்டமும் பெண்களுக்குதான்.
காதல் காதல் என்று உங்களுடன் சேர்ந்து எல்லா தவறுகளும் செய்துவிட்டு அவனால் சமுதாயத்தில் நன்றாக வாழமுடிகின்றது, ஆனால் பெண்களாகிய உங்கள் நிலையை எண்ணி பாருங்கள், திருமணம் கடினமாகின்றது, பிறகு நமக்கு பிறக்கும் பிள்ளைகளுக்கு இந்த விஷயம் தெரிந்தால் நம்மை மதிப்பார்களா? சிந்தித்து பாருங்கள் இளம் பெண்களே! ஆண்கள் தன் இச்சையை தீர்த்துகொள்ள உங்களை ஏமாற்றுகின்றான், நம்பாதீர்கள், பெற்றோர் சொல்லும் அறிவுறையை கேட்டு நல்ல ஒழுக்கமுள்ள, ஆற்றல் உள்ள பெண்களாக சமுதாயத்தில் கண்ணியத்துடன் வலம் வாருங்கள், உங்களை பெற்று வளர்த்த பெற்றோர்களுக்கு நற்பெயரை வாங்கி கொடுங்கள், உங்கள் பிள்ளைகள் உங்களை மதித்து நடக்கும் படி சமுதாயத்தில் மதிப்புள்ள மங்கையாக வாழுங்கள். உணர்வுகளை கட்டுபடுத்தி கட்டுபாட்டுடன் இருந்தால் கண்ணியமாக வாழலாம்
படிக்கும் இளைஞர்களே!
காதலிக்காக ஒதுக்கும் நேரத்தை நம் படிப்பிற்க்காக ஒதுக்கினால் அரியர் இல்லாமல் (பெயில் ஆகாமல்) தெர்வில் தேர்ச்சி பெற்று நல்ல வேலையில் அமரலாம். நம்மை கஷ்ட்டப்பட்டு படிக்க வைக்கும் பெற்றோர்களை காப்பாற்றலாம், தன் பிள்ளை தன்னை வயதான காலத்தில் காப்பாற்றுவான் என கணவுகளுடன் உங்களை படிக்கவைக்கும் பெற்றோர்களுக்கு செய்யும் துரோகம் தான் காதல் என்ற பெயரில் உங்கள் நேரத்தையும் வாழ்கையையும் வீணடிப்பது.
இளைஞர்களே!
உங்களுடைய பொருளாதாரத்தை வீணாக்கும் கருவியாகத்தான் காதலிகள் இருக்கின்றனர். காதலியின் சின்ன சிரிப்பிற்க்காக உங்கள் பெற்றோர்கள் கஷ்ட்டப்பட்டு சம்பாதிக்கும் பணத்தை வீண்விரயம் செய்ய வேண்டுமா? சிந்தித்து பாருங்கள். சினிமாவை பார்த்து காதல் என்னும் மாய வலையில் விழுந்து தான் விரும்பும் பெண் தன்னை விரும்ப வில்லை என வாழ்க்கையை தொலைத்தவர்கள் எத்தனை பேர். நீங்கள் ஒரு பெண்ணை விரும்பி அந்த பெண் உங்களை புறக்கணித்தால் நீங்கள் மிகுந்த மன உலைச்சலுக்கு ஆளாவீர்கள் அது எப்போதும் உங்களை சோகத்திலேயே வைத்திருக்கும், வாழ்வில் சந்தோஷம் என்பதே பிறகு இருக்காது. உங்கள் ஆற்றல் அறிவு , கல்வி அனைத்தையும் இழந்து மன நோயாளியாக உலகத்தில் உலாவர வேண்டி இருக்கும். இளைஞர்களே! இது உங்களுக்கு தேவையா? எனவே காதலிக்க வேண்டும் என கனவில் கூட நினைக்காதீர்கள். வாழ்கை இழந்து மன நோயாளியாகிவிடுவோம்.
காதலும் (காம களிய்யாட்டங்களும்) விபச்சாரம்தான்
காதல் என்ற பெயரில் நடைபெறும் அநாச்சாரங்கங்கள் மற்றும் அசிங்கங்கள் அதிகரிக்க இஸ்லாம் எந்த அளவிற்கு இதை தடை செய்துள்ளது என்ற விழிப்புணர்வு இல்லாததே காரணம் . காதலும் ஒரு விபச்சாரம் தான் என்ற அறிவு நம் பெற்றோர்களிடத்திலும் பிள்ளைகளிடத்திலும் இருந்திருந்தால் இந்த தீமைகளில் இருந்து விலகி இருக்க முடியும்.
இறைவனின் தூதர் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்
“விபச்சாரத்தில் ஆதமுடைய மகனுக்குள்ள பங்கை இறைவன் எழுதியுள்ளான். அதை அவன் அடைந்தே தீருவான். கண் செய்யும் விபச்சாரம் பார்வையாகும். நாவு செய்யும் விபச்சாரம் பேச்சாகும். மனம் ஏங்குகின்றது. இச்சை கொள்கின்றது. பிறப்பு உறுப்பு இவை அனைத்தையும் உண்மையாக்குகின்றது; அல்லது பொய்யாக்குகின்றது”
(நூல்: புகாரி 6243)
தவறான பார்வையையும், சிந்தனையையும், பாலியல் தொடர்பான பேச்சுக்களையும் விபச்சாரத்தின் ஒரு பகுதி என்று இறைவனின் தூதர் நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். எனவே காதல் என்ற பெயரில் நடந்து வரும் காமக் களியாட்டங்களுக்கு இஸ்லாத்தில் எள்ளளவும் அனுமதி இல்லை. ஒருவர் ஒரு பெண்ணை மணம் முடிக்க விரும்பினால் அந்தப் பெண்ணின் பொறுப்பாளர்களிடம் போய் பேசி, மணம் முடித்துக் கொள்ள வேண்டும்இது தான் இஸ்லாம் கூறும் வழிமுறை.
மேற்குரிய அறிவுரைகளை பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு சிறுவயது முதல் கூறி இந்த காதல் எனும் சீர்கேட்டில் பிள்ளைகள் விழுந்து விடாமல் பாதுகாக்க வேண்டும்.ஆனால் மாணவ, மாணவியர் எப்படிக் காதலிக்க வேண்டும் என்ற கேடு கெட்ட கலாச்சாரத்தை டி.வி.க்கள் கற்றுக் கொடுக்கின்ற போது. பெற்றோரும் சேர்ந்து கொண்டு தான் அதை பார்க்கின்றனர்.விளைவு, பிள்ளைகள் பரீட்சையில் பெயிலாகுவது ஒருபுறமிருக்க யாருடனேனும் ஓடிப்போகும் போது பெற்றோர்கள் அவமானப்பட்டு தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு சென்று விடுகின்றனர்.
பெற்றோர் செய்கின்ற மற்றொரு பெரிய தவறு, தங்கள் பிள்ளைகளுக்கு செல்போன்கள் வாங்கிக் கொடுப்பதாகும்.செல்போன் பிள்ளைகளின் ஒழுக்க வாழ்வையும் பாழாக்கிக் கொண்டிருக்கிறது. பல்வேறு முனைகளில் செல்போன்கள் நமது பிள்ளைகளை ஒழுக்கக் கேட்டிற்கும், சீரழிவிற்கும் இழுத்துச் செல்கின்றன.செல்போன்களில் நடமாடும் பாலியல் வக்கிர, ஆபாச செயல்கள் இளைஞர் மற்றும் இளைஞிகளிடையே இன்றைக்கு சர்வசாதாரணமாக நடைபெற்று கொண்டிருக்கின்றது.
தங்கு தடையற்ற காதல் பேச்சுக்கள் இந்த செல்போன்களில் தான் நடைபெறுகின்றது: எந்த ஓர் ஆணும், பெண்ணும் நேரில் சந்திக்கும் போது, அவர்களது வெட்க உணர்வுகள் அவர்களிடமிருந்து வார்த்தைகள் வெளிவருவதைத் தடுத்து விடும். அத்துடன் சமுதாயத்தின் கழுகுப் பார்வைகள், சமூகக் கட்டுப்பாடுகள் பெரிய திரைகளாக நின்று, பெரும் தீமைகள் நடைபெறாமல் காக்கின்றன. ஆனால் இந்த வெட்கத் தடைகளையும், சமூகத் தடைகளையும் செல்போன்கள் தகர்த்தெறிந்து, தங்கு தடையற்ற செக்ஸ் பேச்சுக்களைப் பரிமாற்றம் செய்வதற்குத் துணை புரிகின்றன. வாலிப வயது ஆண், பெண் இருபாலரும் செல்போன்களை செக்ஸ் போன்களாகத் தான் பயன்படுத்துகின்றனர்.
இந்த காதல் எனம் சீர்கேட்டால் சமூகத்தின் ஒழுக்கம் எனும் கட்டமைப்பே சீர் குழைந்து விட்டது. எந்த அளவுக்கென்றால் திருமணததிற்கு முன் இப்போழுதெல்லாம் பெண்களுக்கு கன்னி பரிசோதனை (virgin test) நடத்தபடுகின்றது. இந்த காதல் சமூகத்தில் அவ்வளவு ஒழுக்க சீர்கேட்டை கொண்டு வந்துள்ளது.
இந்த காதலினால் ஒழுக்க கேடான விஷயங்கள் ஒருபுறமிருக்க இதையெல்லம் மிஞ்சும் அளவிற்கு இந்த காதல் என்ற சீர் கேட்டால் எத்தனை உயிர்கள் பறிபொகின்றது.தன்னை பெற்றத் தாய் வளர்த்த தந்தை தன்னை நேசிக்கவில்லை என எந்த ஒரு இளைஞனும் தற்கொலை செய்து கொண்டுள்ளானா? ஆனால் காதலி நேசிக்காததால் காதலன் தற்கொலை என்ற செய்தியை நிறை கேள்விபட்டிருப்போம். மகள் அல்லது மகன் ஓடிப்போய்விட்டதால் பெற்றோர்கள் அவமானத்தில் தற்கொலை செய்கின்றனர்.
பிள்ளைகளை ஒழுக்கத்துடன் ஒழுங்காக வளர்த்திருந்தால் இந்த அவல நிலை பெற்றோர்களுக்கு ஏற்படுமா? விட்டில் காதலுக்கு சம்மதிக்காததால் காதல் ஜோடி தற்கொலை! இந்த செய்தியும் பத்திரிக்கைகளில் அதிகம் பார்த்திருப்பீர்கள். ஆரம்பத்திலேயே காதல் சீர்கேட்டை பிள்ளைகளுக்கு புரிய வைத்திருந்தால் பிள்ளைகளை பரிகொடுக்கும் அவள நிலை பெற்றோர்களுக்கு ஏற்படுமா? தன் காதலியை காதலித்தவனை ஆத்திரத்தில் கொலை செய்த காதலன். அல்லது இன்னொருத்தவனை காதலித்ததால் காதலியை கொன்ற காதலன். இந்த செய்தியை பத்திரிக்கைகளில் பார்த்திருப்பீர்கள்.
இதில் கள்ளக் காதல் வேறு! அதில் ”கள்ளக் காதலன் கொலை” அல்லது ”கள்ளக் காதலி கொலை” என்று உயிர் பலி இதை விட அதிகம் என்பது பத்திரிக்கைப்படிப்பவர்களுக்கு தெரியும்.
இப்படி உயிர் கொல்லியமாகவும், ஒழுக்கக் கேட்டை கட்டவிழுத்து விடும் செயலாகவும் இருக்கும் இந்த காதலுக்கு ஒரு தினம் வைத்து உலகம் முழுவதும் கொண்டாடப்படுகின்றது. இதற்கெல்லாம் காரணம் எவன் செத்தாலும் எங்களுக்கு கவலை இல்லை எங்களுக்கு பணம் தான் முக்கியம் என்று மீடியாக்கள் கொஞ்சம் கூட சமுதாய அக்கரை இல்லாமல் செயல்பட்டு இந்த காதலை ஊக்கப்படுத்திக் கொண்டிருப்பதினால் தான்.
இப்படி காதலை ஆதரிப்பவர்களிடம் போய் ‘சார் நான் உங்க பொன்ன லவ் பன்னிக்கவா?’ என்று கேட்டால் ”டேய்! உன்ன ஈவ்டிசிங்ல போலிஸ்ல புடுச்சுகொடுத்துடுவேன்” என்று தான் கூறுவார்கள். ஏன் காதலித்தவர்ளே திருமணத்திற்கு பிறகு நம்ம பிள்ளைகள் காதல் கத்தரிக்கான்னு போய்விடக்கூடாது என்று தான் நினைப்பார்கள். அவ்வளவு ஏன்?, ஒரு பென்ணை காதலிக்கும் இளைஞன் தான், தன் அக்காவையோ அல்லது தங்கையையோ யாரேனும் காதலித்தால் முதலில் சன்டைக்கு போவான்.
அடுத்தவன் பிள்ளை நாசமா போனா பறவாயில்லை உன் அக்கா தங்கை நாசமாகிவிடக்கூடாது என்று சுய நலத்தோடு யோசிக்கும் இளைஞர்களே சமுதாய அக்ரையோடு நடந்து கொள்ளுங்கள்!
டிசம்பர் 1 ஆம் தேதிக்கு காரணமே பிப்ரவரி 14 ஆம் தேதி தான்
எய்ட்ஸ் எனும் உயிர்க் கொல்லி நோயை ஒழிக்க டிசம்பர் 1 உலக எய்ட்ஸ் நாளாக அனுசரிக்கப்படுகின்றது. எயிட்ஸ் நோய் வர காரணமாய் இருக்கும் காமக் களியாட்டங்களை (காதலை) அங்கீகரிக்கும் இந்த காதலர் (கற்பு கொள்ளையர் ) தினமும் உலக எயிட்ஸ் தினமும் ஒன்றே. எயிட்ஸ் நோய் போன்ற கொடிய நோய்கள் பரவ இது போன்ற காம களியாட்டங்களை அறங்கேற்றும் விழாகள் முதல் நிலை காரணிகளாய் இருக்கின்றன. எயிட்ஸ் நோய் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் அரசு எயிட்ஸ் நோய் வர காரணமாய் இருக்கும் இந்த காதலுக்கு (காம களியாட்டத்திற்க்கு) எதிராகவும் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்ய வேண்டும்.
சமுதாய அக்கரையுள்ள இளைஞர்களும், பிள்ளைகள் ஒழுக்கத்துடன் இருக்க வேண்டும் என்று நினைக்கும் பெற்றோர்களும் இந்த பிப்ரவரி 14-ஐ புறக்கணித்தால் உயிர் பலிகளும் சமூக சீர்கேடுகளும் அசிங்கங்களும் மற்றும் திருணமத்திற்கு முன்பே கற்பு பறிபோகும் நிலையும் ஏற்படாமல் நமது சமுதாயத்தை காப்பாற்றலாம்!
விஸ்வரூபம் பட தடையால் கமலுக்கு ரூ.30 கோடி இழப்பு: கர்நாடகாவிலும் தடை நீடிப்பு
சென்னை, ஜன.28-
கமலஹாசன் ரூ.95 கோடி செலவில் தயாரித்த விஸ்வரூபம் படம் இஸ்லாமிய அமைப்புகளின் எதிர்ப்பு காரணமாக கடந்த 25-ந்தேதி திட்டமிட்டப்படி திரைக்கு வரவில்லை.
தமிழ்நாட்டில் அந்த படத்தை வெளியிட 2 வாரம் தடை விதிக்கப்பட்ட நிலையில் வெளிநாடுகள் மற்றும் ஆந்திரா, கேரளா, கர்நாடகாவில் அந்த படம் வெளியானது. ஆனால் முஸ்லிம்களின் கடும் எதிர்ப்பு காரணமாக ஆந்திரா, கர்நாடகாவில் அந்த படம் திரையிடப்படுவது முடக்கப்பட்டது.
கர்நாடகா மாநிலத்தில் மொத்தம் 40 தியேட்டர்களில் விஸ்வரூபம் வெளியிட ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது. பெங்களூரில் மட்டும் 12 தியேட்டர்களில் விஸ்வரூபம் படத்துக்காக முன்பதிவுகள் செய்யப்பட்டிருந்தன. ஆனால் பெங்களூரில் படத்தை திரையிட போலீஸ் கமிஷனர் ஜோதிபிரகாஷ் தடைவிதித்தார்.
நேற்று மாலை அவர் விஸ்வரூபம் படத்தை பார்த்தார். அந்த படத்தை பெங்களூரில் திரையிட அனுமதிக்கலாமா, வேண்டாமா என்பது பற்றி அவர் இன்னும் எந்த முடிவையும் தெரிவிக்கவில்லை.
கர்நாடகா மாநிலம் பத்ராவதி நகரில் விஸ்வரூபம் படம் திரையிடப்பட்டுள்ள தியேட்டரில் 2 சமுதாயத்தினரிடையே நேற்று மோதல் ஏற்பட்டதால் பெங்களூர் கமிஷனர் ஜோதிபிரகாஷ் இன்னமும் தன் முடிவை கூறாமல் இருப்பதாக தெரிகிறது.
கேரளாவில் கடந்த 25-ந்தேதி 82 தியேட்டர் களில் விஸ்வரூபம் படம் திரையிடப்பட்டது. முதல் காட்சி முடிந்ததும் முஸ்லிம்கள் போராட்டம் நடத்தியதால் சில தியேட்டர்களில் அந்த படம் நிறுத்தப்பட்டது.
மறுநாள் சில இந்து அமைப்புகள் மற்றும் கம்யூனிஸ்டு கட்சியினர் கொடுத்த ஆதரவு காரணமாக பல இடங்களில் விஸ்வரூபம் படம் திரையிடப்பட்டது. என்றாலும் கேரளாவிலும் விஸ்வரூபம் முழுமையான அளவில் வெளியாகவில்லை.
கர்நாடகா, கேரளா போலவே ஆந்திராவிலும் கடந்த வெள்ளிக்கிழமை பல தியேட்டர்களில் விஸ்வரூபம் படம் திரையிடப்பட்டது. முதல் காட்சி முடிந்ததும் ஆந்திராவில் உள்ள இஸ்லாமிய அமைப்புகள் உள்துறை மந்திரி சபீதா இந்திரா ரெட்டியை சந்தித்து தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.
விஸ்வரூபம் படத்தை நிறுத்தாவிட்டால் பெரிய அளவில் போராட்டம் நடத்தப்போவதாக எச்சரித்தனர். இதனால் மந்திரி சபீதா விஸ்வரூபத்துக்கு தடைவிதிப்பதாக உத்தரவிட்டார். இதையடுத்து ஆந்திராவில் எந்த தியேட்டரிலும் விஸ்வ ரூபம் பட காட்சிகள் தொடரவில்லை.
விஸ்வரூபம் படத்துக்காக ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் கடந்த 22-ந் தேதியில் இருந்தே 100-க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் முன்பதிவுகள் செய்யப்பட்டிருந்தன. 25-ந்தேதி ஒருநாள் மட்டுமே அந்த தியேட்டர்களில் விஸ்வரூபம் காட்டப்பட்டது.
மறுநாள் முதல் விஸ்வரூபத்தை திரையிட முடியாததால் தற்காலிகமாக பழைய படங்களை வாங்கி திரையிட் டுள்ளனர். விஸ்வரூபத்துக்கு தடை நீங்குமா, நீங்காதா என்று தெரியாததால் அந்த தியேட்டர் உரிமையாளர்கள் கடும் தவிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.
தென் இந்தியாவில் கேரளாவில் உள்ள சில தியேட்டர்கள் வேறு எங்கும் விஸ்வரூபம் திரையிடப்படாமல் உள்ளது.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் தொடங்கி வைக்கப்பட்ட தடை நடவடிக்கை தற்போது வெளிநாடுகளுக்கும் பரவத் தொடங்கியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை மலேசியாவில் விஸ்வரூபம் படம் பார்த்துவிட்டு சிலர் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதைடுத்து மலேசிய நாட்டு அரசு விஸ்வரூபம் படத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்க உத்தரவிட்டது. இதை மலேசியா வினியோகஸ்தர் ஏ.ராமலிங்கம் உறுதி செய்தார். சனிக்கிழமை முதல் மலேசியாவில் எந்த தியேட்டரிலும் விஸ்வரூபம் படம் திரையிடப்படவில்லை.
விஸ்வரூபம் படம் திரையிடப்பட முடியாமல் போனதால் நடிகர் கமலஹாசன், வினியோகஸ்தர்கள் மற்றும் தியேட்டர் உரிமையாளர்களுக்கு கடும் இழப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 3 நாட்களில் இந்த படம் முடக்கம் காரணமாக அனைத்து தரப்பினருக்கும் ரூ.30 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த தடை நீடித்தால் இழப்பு தொகை மேலும் அதிகரிக்கும் என்று மும்பையைச் சேர்ந்த மல்டி மீடியா நிறுவன வினியோகஸ்தர் ராஜேஸ் தடானி கூறினார். விஸ்வரூபத்தால் இழப்பு அதிகரித்துள்ளதாக கர்நாடக வினியோகஸ்தர் சங்கராஜு மற்றும் ஆந்திரா மாநில வினியோகஸ்தர் பிரகாஷ்ரெட்டி தெரிவித்தனர்.
விஸ்வரூபம் படத்தை முதல் நாளே பார்த்து விட வேண்டும் என்ற ஆவலில் உலகம் முழுவதும் கமல் ரசிகர்கள் மட்டுமின்றி பொதுவான ரசிகர்களும் டிக்கெட் முன்பதிவு செய்திருந்தனர். தடை காரணமாக படம் பார்க்க முடியாமல் ரசிகர்கள் தவிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள்.
சில நகரங்களில் டிக்கெட் முன்பதிவு செய்த தொகையை விட குறைவான தொகையே திரும்ப கிடைத்தது. அந்த வகையில் ரசிகர்களுக்கும் பணஇழப்பு ஏற்பட்டுள்ளது.
நன்றி மாலைமலர்
கமலஹாசன் ரூ.95 கோடி செலவில் தயாரித்த விஸ்வரூபம் படம் இஸ்லாமிய அமைப்புகளின் எதிர்ப்பு காரணமாக கடந்த 25-ந்தேதி திட்டமிட்டப்படி திரைக்கு வரவில்லை.
தமிழ்நாட்டில் அந்த படத்தை வெளியிட 2 வாரம் தடை விதிக்கப்பட்ட நிலையில் வெளிநாடுகள் மற்றும் ஆந்திரா, கேரளா, கர்நாடகாவில் அந்த படம் வெளியானது. ஆனால் முஸ்லிம்களின் கடும் எதிர்ப்பு காரணமாக ஆந்திரா, கர்நாடகாவில் அந்த படம் திரையிடப்படுவது முடக்கப்பட்டது.
கர்நாடகா மாநிலத்தில் மொத்தம் 40 தியேட்டர்களில் விஸ்வரூபம் வெளியிட ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது. பெங்களூரில் மட்டும் 12 தியேட்டர்களில் விஸ்வரூபம் படத்துக்காக முன்பதிவுகள் செய்யப்பட்டிருந்தன. ஆனால் பெங்களூரில் படத்தை திரையிட போலீஸ் கமிஷனர் ஜோதிபிரகாஷ் தடைவிதித்தார்.
நேற்று மாலை அவர் விஸ்வரூபம் படத்தை பார்த்தார். அந்த படத்தை பெங்களூரில் திரையிட அனுமதிக்கலாமா, வேண்டாமா என்பது பற்றி அவர் இன்னும் எந்த முடிவையும் தெரிவிக்கவில்லை.
கர்நாடகா மாநிலம் பத்ராவதி நகரில் விஸ்வரூபம் படம் திரையிடப்பட்டுள்ள தியேட்டரில் 2 சமுதாயத்தினரிடையே நேற்று மோதல் ஏற்பட்டதால் பெங்களூர் கமிஷனர் ஜோதிபிரகாஷ் இன்னமும் தன் முடிவை கூறாமல் இருப்பதாக தெரிகிறது.
கேரளாவில் கடந்த 25-ந்தேதி 82 தியேட்டர் களில் விஸ்வரூபம் படம் திரையிடப்பட்டது. முதல் காட்சி முடிந்ததும் முஸ்லிம்கள் போராட்டம் நடத்தியதால் சில தியேட்டர்களில் அந்த படம் நிறுத்தப்பட்டது.
மறுநாள் சில இந்து அமைப்புகள் மற்றும் கம்யூனிஸ்டு கட்சியினர் கொடுத்த ஆதரவு காரணமாக பல இடங்களில் விஸ்வரூபம் படம் திரையிடப்பட்டது. என்றாலும் கேரளாவிலும் விஸ்வரூபம் முழுமையான அளவில் வெளியாகவில்லை.
கர்நாடகா, கேரளா போலவே ஆந்திராவிலும் கடந்த வெள்ளிக்கிழமை பல தியேட்டர்களில் விஸ்வரூபம் படம் திரையிடப்பட்டது. முதல் காட்சி முடிந்ததும் ஆந்திராவில் உள்ள இஸ்லாமிய அமைப்புகள் உள்துறை மந்திரி சபீதா இந்திரா ரெட்டியை சந்தித்து தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.
விஸ்வரூபம் படத்தை நிறுத்தாவிட்டால் பெரிய அளவில் போராட்டம் நடத்தப்போவதாக எச்சரித்தனர். இதனால் மந்திரி சபீதா விஸ்வரூபத்துக்கு தடைவிதிப்பதாக உத்தரவிட்டார். இதையடுத்து ஆந்திராவில் எந்த தியேட்டரிலும் விஸ்வ ரூபம் பட காட்சிகள் தொடரவில்லை.
விஸ்வரூபம் படத்துக்காக ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் கடந்த 22-ந் தேதியில் இருந்தே 100-க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் முன்பதிவுகள் செய்யப்பட்டிருந்தன. 25-ந்தேதி ஒருநாள் மட்டுமே அந்த தியேட்டர்களில் விஸ்வரூபம் காட்டப்பட்டது.
மறுநாள் முதல் விஸ்வரூபத்தை திரையிட முடியாததால் தற்காலிகமாக பழைய படங்களை வாங்கி திரையிட் டுள்ளனர். விஸ்வரூபத்துக்கு தடை நீங்குமா, நீங்காதா என்று தெரியாததால் அந்த தியேட்டர் உரிமையாளர்கள் கடும் தவிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.
தென் இந்தியாவில் கேரளாவில் உள்ள சில தியேட்டர்கள் வேறு எங்கும் விஸ்வரூபம் திரையிடப்படாமல் உள்ளது.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் தொடங்கி வைக்கப்பட்ட தடை நடவடிக்கை தற்போது வெளிநாடுகளுக்கும் பரவத் தொடங்கியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை மலேசியாவில் விஸ்வரூபம் படம் பார்த்துவிட்டு சிலர் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதைடுத்து மலேசிய நாட்டு அரசு விஸ்வரூபம் படத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்க உத்தரவிட்டது. இதை மலேசியா வினியோகஸ்தர் ஏ.ராமலிங்கம் உறுதி செய்தார். சனிக்கிழமை முதல் மலேசியாவில் எந்த தியேட்டரிலும் விஸ்வரூபம் படம் திரையிடப்படவில்லை.
விஸ்வரூபம் படம் திரையிடப்பட முடியாமல் போனதால் நடிகர் கமலஹாசன், வினியோகஸ்தர்கள் மற்றும் தியேட்டர் உரிமையாளர்களுக்கு கடும் இழப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 3 நாட்களில் இந்த படம் முடக்கம் காரணமாக அனைத்து தரப்பினருக்கும் ரூ.30 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த தடை நீடித்தால் இழப்பு தொகை மேலும் அதிகரிக்கும் என்று மும்பையைச் சேர்ந்த மல்டி மீடியா நிறுவன வினியோகஸ்தர் ராஜேஸ் தடானி கூறினார். விஸ்வரூபத்தால் இழப்பு அதிகரித்துள்ளதாக கர்நாடக வினியோகஸ்தர் சங்கராஜு மற்றும் ஆந்திரா மாநில வினியோகஸ்தர் பிரகாஷ்ரெட்டி தெரிவித்தனர்.
விஸ்வரூபம் படத்தை முதல் நாளே பார்த்து விட வேண்டும் என்ற ஆவலில் உலகம் முழுவதும் கமல் ரசிகர்கள் மட்டுமின்றி பொதுவான ரசிகர்களும் டிக்கெட் முன்பதிவு செய்திருந்தனர். தடை காரணமாக படம் பார்க்க முடியாமல் ரசிகர்கள் தவிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள்.
சில நகரங்களில் டிக்கெட் முன்பதிவு செய்த தொகையை விட குறைவான தொகையே திரும்ப கிடைத்தது. அந்த வகையில் ரசிகர்களுக்கும் பணஇழப்பு ஏற்பட்டுள்ளது.
நன்றி மாலைமலர்
மாமனிதர் நபிகள் நாயகம் புக் வழங்கி
தாவா செய்யப்பட்டது பொதக்குடி அருகாமையில் உள்ள ஆய்க்குடி மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியரை சந்தித்து .4-1-2013 மாமனிதர் நபிகள் நாயகம் புக் வழங்கி தாவா..செய்யப்பட்டது.
|
சாபத்தை பெற்றுத் தரும் சுப்ஹான மவ்லீது-நோட்டீஸ் விநியோகம்
சாபத்தை பெற்றுத் தரும் சுப்ஹான மவ்லீது நோட்டிஸ் 100 ,12-1-2013 சனிக்கிழமை அன்று விநியோகிக்கப்பட்டு தாவா செய்யப்பட்டது.
|
ஆயிஷா பள்ளிவாசலில் தற்போது நடைபெற்று வரும் பள்ளிவாசலின்
கட்டிடப் பணிகள்
முதல் மாடியில், பின் பகுதியில்..பள்ளிவாசலின் இமாமுக்கு வீடும், முன்பகுதியில்..மாடிப்படியை மூடும் பணியும் மினாரா வுக்கான கட்டிடப் பணியும் தற்போது துரிதமாக நடைபெற்று வருகிறது .
தாவா செய்யப்பட்டது பொதக்குடி அருகாமையில் உள்ள ஆய்க்குடி பஞ்சாயத்து தலைவர் பிச்சை அவர்களுக்கு 4-1-2013 அன்று இஸ்லாமிய புக் கள் கொடுத்து தாவா செய்யப்பட்டது.
|
தெருமுனைப் பிரச்சாரம் 11-1-2013
11-1-2013 வெள்ளிக்கிழமை மாலை 5 மணியளவில் பொதக்குடி, தெற்குத் தெரு சந்திப்பில், "மூடப்பழக்கங்களில் மூழ்கிய முஸ்லிம்கள் " என்ற தலைப்பில் சகோ அப்துல் ஹமீத் மஹ்ளரி அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்
|
தெருமுனைப் பிரச்சாரம்
28-12-2012 வெள்ளிக்கிழமை மாலை பொதக்குடி கீழத்தெருவில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது, சகோ அப்துல் ஹமீது மஹ்ளரி அவர்கள் "ஸஃபர் பீடை மாதமா..?" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்!
|
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பொதக்குடி கிளையின் சார்பில் 21-12-2012 வெள்ளிக்கிழமை மாலை பொதக்குடி சற்குரு தெருவில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது..இதில் அப்துல் ஹமீத் ,மஹ்ளரி அவர்கள் "இஸ்லாமும் முஸ்லிம்களும்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்!
|
4-1-2013 அன்று பொதக்குடி மேலத்தெரு,வடக்குத்தெரு சந்திப்பில் தெருமுனைப் பிரச்சாரம் நடந்தது..சகோ அப்துல் ஹமீத் மஹ்ளரி அவர்கள் "எகத்துவமும், இணைவைப்பும்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்
|
மாமனிதர் நபி (ஸல்) புக்
உலகத்தையே திரும்பிப் பார்க்க வைத்த மாமனிதர் நபிகள் நாயகம் (ஸல்்) அவர்கள் வாழ்க்கை வரலாறை .இரத்தினச் சுருக்கமாக தொகுக்கப்பட்ட . மாமனிதர் நபிகள் நாயகம் .(ஆசிரியர் பீ ஜைனுல் ஆபிதீன் ) என்ற புக்கை .மாற்றுக் கொள்கையுடைய அறிவு ஜீவிகளுக்கு வழங்கி அவர்களின் மூலம் பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு சென்றடைய தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் முடிவெடுத்தது
அந்த அடிப்படையில TNTJ பொதக்குடி கிளையின் சார்பில் ஊராடசி ஒன்றிய துவக்கப்பள்ளி.தலைமை ஆசிரியர் பைந்தமிழ் செல்வி (பொதக்குடி ).அவர்களுக்கு 17-12-2012 அன்று காலை புக் வழங்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்.
அந்த அடிப்படையில TNTJ பொதக்குடி கிளையின் சார்பில் ஊராடசி ஒன்றிய துவக்கப்பள்ளி.தலைமை ஆசிரியர் பைந்தமிழ் செல்வி (பொதக்குடி ).அவர்களுக்கு 17-12-2012 அன்று காலை புக் வழங்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்.
வாழ்வாதார உதவி
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பொதக்குடி கிளையின் சார்பில் பொதக்குடி சேகரை பகுதியைச் சேர்ந்த ஒரு ஏழை சகோதரிக்கு வாழ்வாதார உதவியாக ரூபாய் நான்காயிரம் (4000) 12-12-2012 புதன்கிழமை அன்று பொதக்குடி மர்கஸ் ல் வைத்து வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.
இறைமறுப்பாளர்கள் கடலில் மூழ்கடிக்கப்பட்டனர்.
ஏகஇறைவனின் திருப்பெயரால்...
فَالْيَوْمَ نُنَجِّيكَ بِبَدَنِكَ لِتَكُونَ لِمَنْ خَلْفَكَ آيَةً وَإِنَّ كَثِيرًا مِّنَ النَّاسِ عَنْ آيَاتِنَا لَغَافِلُونَ
உனக்குப் பின் வருவோருக்கு நீ சான்றாக இருப்பதற்காக உன் உடலை இன்று பாதுகாப்போம்.217 (என்று கூறினோம்.) மனிதர்களில் அதிகமானோர் நமது சான்றுகளை அலட்சியம் செய்வோராகவே உள்ளனர்.10:92.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
உலகின் அதிபதியாகிய அல்லாஹ் ரப்புல்ஆலமீன் குழந்தையின் தாயாருக்கு வாக்குறுதி அளித்தப் பிரகாரம்குழந்தையை ஒப்படைத்து விடுகிறான். அவரது தாயார் கவலைப்படாமல் மனம் குளிரவும், அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மை என்பதை அவர் அறிவதற்காகவும் அவரிடம் அவரைத் திரும்பச் சேர்த்தோம். எனினும் அவர்களில் அதிகமானோர் (இதை) அறிய மாட்டார்கள். திருக்குர்ஆன். 28:13.
குழந்தை தனது தாயிடம் பாலருந்தி ஃபிர்அவ்னின் மாளிகையில் வளர்ந்து வாலிபடைகிறது. அவர்களே மூஸா (அலைஹிஸ்ஸலாம்) எனும் இறைத் தூதராவ%
فَالْيَوْمَ نُنَجِّيكَ بِبَدَنِكَ لِتَكُونَ لِمَنْ خَلْفَكَ آيَةً وَإِنَّ كَثِيرًا مِّنَ النَّاسِ عَنْ آيَاتِنَا لَغَافِلُونَ
உனக்குப் பின் வருவோருக்கு நீ சான்றாக இருப்பதற்காக உன் உடலை இன்று பாதுகாப்போம்.217 (என்று கூறினோம்.) மனிதர்களில் அதிகமானோர் நமது சான்றுகளை அலட்சியம் செய்வோராகவே உள்ளனர்.10:92.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
உலகின் அதிபதியாகிய அல்லாஹ் ரப்புல்ஆலமீன் குழந்தையின் தாயாருக்கு வாக்குறுதி அளித்தப் பிரகாரம்குழந்தையை ஒப்படைத்து விடுகிறான். அவரது தாயார் கவலைப்படாமல் மனம் குளிரவும், அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மை என்பதை அவர் அறிவதற்காகவும் அவரிடம் அவரைத் திரும்பச் சேர்த்தோம். எனினும் அவர்களில் அதிகமானோர் (இதை) அறிய மாட்டார்கள். திருக்குர்ஆன். 28:13.
குழந்தை தனது தாயிடம் பாலருந்தி ஃபிர்அவ்னின் மாளிகையில் வளர்ந்து வாலிபடைகிறது. அவர்களே மூஸா (அலைஹிஸ்ஸலாம்) எனும் இறைத் தூதராவ%
கல்வி உதவி
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பொதக்குடி கிளையின் சார்பில் பொதக்குடி சேகரை பகுதியைச் சேர்ந்த ஒரு ஏழை சகோதரிக்கு , மேற்படிப்புத் தொடர 4-10-2012 அன்று,கிளையின் சார்பில் ரூபாய் 2500 (இரண்டாயிரத்து ஐநூறு) கல்வி உதவி வழங்கப்பட்டது
யூடூபிற்கு பதிலடி கொடுக்க உதவிகள்: பி.ஜே யின் முக்கிய அறிவிப்பு!
யூ டியூப் என்ற அயோக்கிய நிறுவனம் மதங்களை நிந்தனை செய்யக் கூடாது என்ற விதியின் கீழ் செயல்படுவதாக சொல்லிக் கொண்டு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறித்த கீழ்த்தரமான வீடியோவை நீக்க முடியாது. எங்கள் விதிமுறைக்கு உட்பட்டே அது உள்ளது என்று திமிராக பதில் சொல்கிறது. இதன் தயாரிப்பில் யூ டிய்ய்புக்கும் பங்கு உண்டு என்ற சந்தேகம் இதனால் வலுப்படுகிறது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை உயிரினும் மேலாக நேசிக்கும் ஒவ்வொருவரும் அடுத்தவரை எதிர்பார்த்து காத்துக் கொண்டிராமல் தன்னால் இயன்ற அளவுக்கு யூடியூபுக்கு நட்டத்தை ஏற்படுத்த வேண்டும். இது போன்ற விஷமத்தனமான ஒரு தளம் உலகில் இருப்பதே மிகவும் ஆபத்தானது என்ற அச்சம் இதனால் ஏற்படுகிறது. இன்னும் பல ஆபாசங்களையும் அவதூறுகளையும் அள்ளித் தெளிக்க யூ டியூப் தயாராக இருப்பதை நாம் உணர முடிகின்றது.
எனவே இதன் முதல் கட்டமாக அனைத்து கொள்கைச் சகோதர்ர்களுக்கும் முக்கிய வேண்டுகோளை முன்வைக்கிறேன்.
எனது உரைகள் கேள்வி பதில்கள் இஸ்லாம் இனிய மார்க்கம் போன்ற அனைத்தையும் பல்வேறு சகோதர்ர்கள் யூடியூபில் பதிந்துள்ளனர். யாரெல்லாம் எனது உரைகளை யு டியூபில் பதிந்துள்ளார்களோ அவர்கள் அனைவரும் பதிந்துள்ள எனது அனைத்து ஆக்கங்களையும் உடனே நீக்கி விடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
எனது உரையைத் தேடி இந்தக் கேடு கெட்ட தளத்துக்குச் செல்பவர்கள் நபிகள் நாயகத்துக்கு எதிரான் நச்சுக்கருத்துக்களையும் பார்க்க நான் காரணமாக ஆக விரும்பவில்லை. இதனால் மிகச் சில அளவுக்கு யூ டியூபின் பார்வையாளர்கள் குறைவார்கள். இதை மற்றவர்களும் கடைப்பிடித்து இது உலக முஸ்லிம்களை சென்றடையும் என்று நம்ப்வுகிறேன். அப்போது யூடியூபுக்கு தக்க பாடமாக அமையும் என்று நான் கருதுகிறேன்.
மீண்டும் சொல்கிறேன். எனது கேள்வி பதில்கள் எனது உரைகள் எனது எழுத்துக்கள் எனது தளத்துக்கான லிங்குகள் உள்ளிட்ட எதுவும் யூடியூபில் இருக்க வேண்டாம். பதிவு செய்துள்ள அனைவரும் தாமதமின்றி அவற்றை நீக்கி உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
கூகுளுக்கும் ஜி மெயிலுக்கும் எதிராக நாம் எத்தகைய பதிலடி கொடுக்கலாம் என்பதை ஆலோசித்து தலைமை மூலம் விரைவில் தக்க முடிவை அறிவுக்குமாறு மாநில நிர்வாகிகளுக்கு கோரிக்கை வைத்துளேன். இன்ஷா அல்லாஹ்
ஆர்ப்பாட்டங்களால் அளிக்கும் பதிலடியை விட பார்வையாளர்களைக் குறைத்து விளம்பர வருவாயைக் குறைப்பது இந்தக் கயவர்களுக்கு மிகப் பெரிய பதிலடியாக அமையும்.
பீஜே அல்லது ஜைனுல் ஆபிதீன் என்று தேடினால் யூடியூபில் எதுவும் இல்லாமல் இருக்க அனைவரும் உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
அன்புடன்
பீ.ஜைனுல் ஆபிதீன்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை உயிரினும் மேலாக நேசிக்கும் ஒவ்வொருவரும் அடுத்தவரை எதிர்பார்த்து காத்துக் கொண்டிராமல் தன்னால் இயன்ற அளவுக்கு யூடியூபுக்கு நட்டத்தை ஏற்படுத்த வேண்டும். இது போன்ற விஷமத்தனமான ஒரு தளம் உலகில் இருப்பதே மிகவும் ஆபத்தானது என்ற அச்சம் இதனால் ஏற்படுகிறது. இன்னும் பல ஆபாசங்களையும் அவதூறுகளையும் அள்ளித் தெளிக்க யூ டியூப் தயாராக இருப்பதை நாம் உணர முடிகின்றது.
எனவே இதன் முதல் கட்டமாக அனைத்து கொள்கைச் சகோதர்ர்களுக்கும் முக்கிய வேண்டுகோளை முன்வைக்கிறேன்.
எனது உரைகள் கேள்வி பதில்கள் இஸ்லாம் இனிய மார்க்கம் போன்ற அனைத்தையும் பல்வேறு சகோதர்ர்கள் யூடியூபில் பதிந்துள்ளனர். யாரெல்லாம் எனது உரைகளை யு டியூபில் பதிந்துள்ளார்களோ அவர்கள் அனைவரும் பதிந்துள்ள எனது அனைத்து ஆக்கங்களையும் உடனே நீக்கி விடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
எனது உரையைத் தேடி இந்தக் கேடு கெட்ட தளத்துக்குச் செல்பவர்கள் நபிகள் நாயகத்துக்கு எதிரான் நச்சுக்கருத்துக்களையும் பார்க்க நான் காரணமாக ஆக விரும்பவில்லை. இதனால் மிகச் சில அளவுக்கு யூ டியூபின் பார்வையாளர்கள் குறைவார்கள். இதை மற்றவர்களும் கடைப்பிடித்து இது உலக முஸ்லிம்களை சென்றடையும் என்று நம்ப்வுகிறேன். அப்போது யூடியூபுக்கு தக்க பாடமாக அமையும் என்று நான் கருதுகிறேன்.
மீண்டும் சொல்கிறேன். எனது கேள்வி பதில்கள் எனது உரைகள் எனது எழுத்துக்கள் எனது தளத்துக்கான லிங்குகள் உள்ளிட்ட எதுவும் யூடியூபில் இருக்க வேண்டாம். பதிவு செய்துள்ள அனைவரும் தாமதமின்றி அவற்றை நீக்கி உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
கூகுளுக்கும் ஜி மெயிலுக்கும் எதிராக நாம் எத்தகைய பதிலடி கொடுக்கலாம் என்பதை ஆலோசித்து தலைமை மூலம் விரைவில் தக்க முடிவை அறிவுக்குமாறு மாநில நிர்வாகிகளுக்கு கோரிக்கை வைத்துளேன். இன்ஷா அல்லாஹ்
ஆர்ப்பாட்டங்களால் அளிக்கும் பதிலடியை விட பார்வையாளர்களைக் குறைத்து விளம்பர வருவாயைக் குறைப்பது இந்தக் கயவர்களுக்கு மிகப் பெரிய பதிலடியாக அமையும்.
பீஜே அல்லது ஜைனுல் ஆபிதீன் என்று தேடினால் யூடியூபில் எதுவும் இல்லாமல் இருக்க அனைவரும் உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
அன்புடன்
பீ.ஜைனுல் ஆபிதீன்
இஸ்லாமியப் பார்வையில் பெண் சிசுக் கொலைகள்!
பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் என்பது காலங்காலமாக இருந்து வருகின்றது என்பதை நாம் வரலாறுகளின் மூலம் அறிகிறோம். அந்தக் கொடுமைகளின் உச்சக்கட்டமாக பெண் குழந்தைகளைப் பெற்றெடுப்பதையே கேவலமாகக் கருதி பிறந்த குழந்தைப் பெண்ணாகயிருப்பின் அதற்கு உயிருடனே சமாதிகட்டும் கொடுமைகள் நடந்திருக்கின்றது; ஏன் இன்றும் நடந்துக் கொண்டு தான் இருக்கின்றன. அதனால் தான் இன்றளவும் தொட்டில் குழந்தைகள் போன்ற திட்டம் போன்றவற்றை செயல்படுத்தி பெண் குழந்தைகள் காப்பகங்களை அரசாங்கமே நடத்த வேண்டிய இழி நிலைக்கு நாம் ஆளாகியிருக்கிறோம்.
அரசாங்கம் மற்றும் சமூக சேவகர்களால் நடத்தப்படும் குழந்தைகள் காப்பகம் பல இருந்தாலும் அவ்வப்போது ‘பச்சிளம் பெண் குழந்தை கிணற்றில் மிதந்தது’, ‘குப்பைத் தொட்டியில் கிடந்த பெண் சிசுவின் உடலை தெரு நாய்கள் குதறி தின்றன’ போன்ற செய்திகளை அன்றாடம் நாம் நாள் இதழ்களில் கான்கிறோம்.
இவைகள் அனைத்துதும், உலகம் எவ்வளவு தான் விஞ்ஞானத்தில் முன்னேறியிருந்தாலும் பெண்களுக்கான வன்கொடுமைகள் முற்றுப் பெறவில்லையென்பதையும் இன்னும் தொடர்ந்துக் கொண்டுதான் இருக்கின்றன என்பதையும் நமக்கு தெளிவாக உணர்த்துகிறது.
கல்வியறிவில்லாத கிரமத்திலிலுள்ள மூடர்கள் தான் பெண் குழந்தைகளைப் பளுவாகக் கருதி அவர்களை பிறந்த உடனேயே கொன்று விடுகின்றார்கள் எனில் பட்டணத்திலுள்ள படித்த மேதைகளோ அந்தப் பெண் சிசுக்கள் இந்த உலகைப் பார்ப்பதற்கு முன்னரே பெண் குழந்தை என்பதையறிந்து கருவிலேயே அதை கொலை செய்து விடுவதைப் பார்க்கிறோம். கருவிலேயே செய்யப்படும் கொலைக்கு புதிய பெயர் சூட்டி ‘கருக் கலைப்பு’ என்று என்று வேறு அழைக்கின்றனர்.
பெண் குழந்தைகளை அற்பமாகக் கருதி அதைக் கொலை செய்பவர்களை இஸ்லாம் மிக வன்மையாகக் கண்டிக்கின்றது. அறியாமைக் காலத்தில் வாழ்ந்த மக்கள் பெண் குழந்தைகள் பிறந்ததும் அதைக் கேவலமாகக் கருதி முகம் சுளித்தவர்களாக மக்களின் முகத்தில் கூடி விழிக்க திராணியற்றவர்களாக இருந்தனர்.மேலும் அந்தக் குழந்தைகளை கொன்றுவிடலாமா அல்லது இழிவுடன் இந்தக் குழந்தையை வளர்க்கலாமா என்றும் குழம்பி வந்தனர்.இதைக் கண்டிக்கும் விதமாக அகில உலக மனிதர்களுக்கும் சத்திய நேர்வழி காட்ட தன் இறுதி தீர்க்கதரிசி மூலம் இறைவன் அனுப்பிய திருவேதத்தில் கூறுகிறான்: -
“அவர்களில் ஒருவனுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது என்று நன்மாராயங் கூறப்பட்டால் அவன் முகம் கறுத்து விடுகிறது – அவன் கோபமுடையவனாகிறான். எதைக் கொண்டு நன்மாராயங் கூறப்பட்டானோ, (அதைத் தீயதாகக் கருதி) அந்தக் கெடுதிக்காக(த் தம்) சமூகத்தாரை விட்டும் ஒளிந்து கொள்கிறான் – அதை இழிவோடு வைத்துக் கொள்வதா? அல்லது அதை (உயிரோடு) மண்ணில் புதைத்து விடுவதா? (என்று குழம்புகிறான்); அவர்கள் (இவ்வாறெல்லாம்) தீர்மானிப்பது மிகவும் கெட்டதல்லவா?” (அல்-குர்ஆன் 16:58-59)
வேறு சில மூடர்களோ ஈவு இரக்கம் என்பது சிறிதுமின்றி பெண்ணாகப் பிறந்த ஒரே காரணத்துக்காக அந்தப் பச்சிளம் குழந்தையை துடிதுடிக்க உயிரோடு புதைத்து வந்தனர். நமதூர்களில் கள்ளிப்பால், அரளிவிதை, நெல் மணிகள் கொடுத்து பெண் குழந்தைகளைக் கொல்வது போல! இஸ்லாம் இவற்றை வன்மையாக கண்டிப்பதுடன், இவ்வாறு கொலை செய்யப்பட்ட அந்த பெண் சிசுக்கள், நியாயத் தீர்ப்பு நாளில் அவைகள் எதற்காக கொலை செய்யப்பட்டது என்று விசாரணை செய்யப்பட்டு கொலை செய்தவர்களுக்கு கடுமையான தண்டணையளிக்கப்படும் என்று கூறுகிறது.
நியாயத் தீர்ப்பு நாளின் ஒரே அதிபதியாகிய ஏக இறைவன் கூறுகிறான்: -
‘உயிருடன் புதைக்கப்பட்ட பெண் (குழந்தை) வினவப்படும் போது- எந்தக் குற்றத்திற்காக அது கொல்லப்பட்டது?’ என்று- (அல்-குர்ஆன் 81:8-9)
இன்னும் சிலர் எங்கே நிறைய குழந்தைகள் பெற்றால் அவர்களை வளர்த்து ஆளாக்குவதற்கு நிறைய செல்வம் தேவைப்படுமே! அதனால் நம் செல்வம் எல்லாம் தீர்ந்து நாம் ஏழையாகி விடுவோமே என்று வறுமைக்கு பயந்து ஓரிரு குழந்தைகளுக்கு மேல் கருவுற்றால் அதைக் கருகலைப்பு என்ற பெயரில் கருவில் வைத்தே கொலை செய்கின்றனர். ஆனால் இஸ்லாமோ இதையும் கண்டிப்பதுடன் உங்களுக்கும் உங்கள் குழந்தைகளுக்கும் இறைவனே உணவளிக்கிறான்! அதனால் வறுமைக்கு பயந்து உங்கள் குழந்தைகளை கொலை செய்யாதீர்கள் என்று ஆணையிடுகிறது.
‘நீங்கள் வறுமைக்குப் பயந்து உங்களுடைய குழந்தைகளைக் கொலை செய்யாதீர்கள்; அவர்களுக்கும் உங்களுக்கும் நாமே உணவை (வாழ்க்கை வசதிகளையும்) அளிக்கின்றோம் – அவர்களைக் கொல்லுதல் நிச்சயமாகப் பெரும் பிழையாகும்’ (அல்-குர்ஆன் 17:31)
‘வாருங்கள்! உங்கள் இறைவன் உங்கள் மீது விலக்கியிருப்பவற்றையும் (ஏவியிருப்பவற்றையும்) நான் ஓதிக் காண்பிக்கிறேன்; எப்பொருளையும் அவனுக்கு இணையாக வைக்காதீர்கள்; பெற்றோர்களுக்கு நன்மை செய்யுங்கள்; வறுமைக்குப் பயந்து ;உங்கள் குழந்தைகளைக் கொல்லாதீர்கள் – ஏனெனில் உங்களுக்கும், அவர்களுக்கும் நாமே உணவளிக்கின்றோம்; வெளிப்படையான இரகசியமான மானக்கேடான காரியங்களை நீங்கள் நெருங்காதீர்கள்; அல்லாஹ் தடுத்துள்ள எந்த ஓர் ஆத்மாவையும் நியாயமானதற்கு அல்லாமல் – கொலை செய்யாதீர்கள் – இவற்றை நீங்கள் உணர்ந்து கொள்வதற்காக (இறைவன்) உங்களுக்கு (இவ்வாறு) போதிக்கின்றான்’ (அல்-குர்ஆன் 6:151)
இஸ்லாம் ஒரு மதமல்ல! மாறாக அகில உலக மாந்தர்களுக்கும் ஏற்ற இறைவனால் அங்கீகரிக்கப்பட்ட ஓர் உன்னத வாழ்வியல் நெறிமுறையாகும். இது ஒரு மனிதன் பிறந்தது முதல் இறக்கும் வரையிலான அவனது அனைத்து வாழ்வியல் அம்சங்கங்களையும் உள்ளடக்கிய வாழ்க்கைத் தத்துவமாகும். இதை முறையாகப் பின்பற்றுபவர்கள் இத்தகைய சிசுக்கொலைகளை ஒருபோதும் செய்யமாட்டார்கள். இதைச் செய்பவர்கள் எல்லாம் இஸ்லாம் என்னும் அழகிய வாழ்க்கை முறையை விட்டுவிட்டு ஒரே இறைவனல்லாத பிற இணை தெய்வங்களை வணங்குபவர்களும் இஸ்லாம் என்னும் நேரிய வழிமுறையை விட்டும் தவறியவர்களும் தான் என்று இஸ்லாம் கூறுகிறது.
இறைவன் கூறுகிறான்: -
‘இவ்வாறே இணை வைப்போரில் பெரும்பாலோருக்கு, அவர்களுடைய குழந்தைகளையே கொலை செய்வதை அவர்களுடைய தெய்வங்கள் அழகாக்கி வைத்துள்ளன; அவர்களை நாசப்படுத்தி, அவர்களுடைய மார்க்கத்தையும் குழப்பத்திலாக்கிவிட்டன’ (அல்-குர்ஆன் 6:137)
‘எவர்கள் அறிவில்லாமல் மூடத்தனமாக தம் குழந்தைகளைக் கொலை செய்தார்களோ; இன்னும் தங்களுக்கு அல்லாஹ் உண்ண அனுமதித்திருந்ததை அல்லாஹ்வின் மீது பொய் கூறி (ஆகாதென்று) தடுத்துக் கொண்டார்களோ, அவர்கள் வழிகெட்டு விட்டனர், நேர்வழி பெற்றவர்களாக இல்லை’ (அல்-குர்ஆன் 6:140)
எனவே, என தருமை சகோதர, சகோதரிகளே! நாம் சிந்தித்து செயலபட்டு சிசுக்கொலைகள் எந்த வகையில் நடைபெற்றாலும் அவற்றைத் தடுத்து நிறுத்தப் பாடுபடுவோமாக! இறைவன் காட்டும் நேர்வழியில் நடந்திட முயற்சிப்போமாக!
பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் என்பது காலங்காலமாக இருந்து வருகின்றது என்பதை நாம் வரலாறுகளின் மூலம் அறிகிறோம். அந்தக் கொடுமைகளின் உச்சக்கட்டமாக பெண் குழந்தைகளைப் பெற்றெடுப்பதையே கேவலமாகக் கருதி பிறந்த குழந்தைப் பெண்ணாகயிருப்பின் அதற்கு உயிருடனே சமாதிகட்டும் கொடுமைகள் நடந்திருக்கின்றது; ஏன் இன்றும் நடந்துக் கொண்டு தான் இருக்கின்றன. அதனால் தான் இன்றளவும் தொட்டில் குழந்தைகள் போன்ற திட்டம் போன்றவற்றை செயல்படுத்தி பெண் குழந்தைகள் காப்பகங்களை அரசாங்கமே நடத்த வேண்டிய இழி நிலைக்கு நாம் ஆளாகியிருக்கிறோம்.
அரசாங்கம் மற்றும் சமூக சேவகர்களால் நடத்தப்படும் குழந்தைகள் காப்பகம் பல இருந்தாலும் அவ்வப்போது ‘பச்சிளம் பெண் குழந்தை கிணற்றில் மிதந்தது’, ‘குப்பைத் தொட்டியில் கிடந்த பெண் சிசுவின் உடலை தெரு நாய்கள் குதறி தின்றன’ போன்ற செய்திகளை அன்றாடம் நாம் நாள் இதழ்களில் கான்கிறோம்.
இவைகள் அனைத்துதும், உலகம் எவ்வளவு தான் விஞ்ஞானத்தில் முன்னேறியிருந்தாலும் பெண்களுக்கான வன்கொடுமைகள் முற்றுப் பெறவில்லையென்பதையும் இன்னும் தொடர்ந்துக் கொண்டுதான் இருக்கின்றன என்பதையும் நமக்கு தெளிவாக உணர்த்துகிறது.
கல்வியறிவில்லாத கிரமத்திலிலுள்ள மூடர்கள் தான் பெண் குழந்தைகளைப் பளுவாகக் கருதி அவர்களை பிறந்த உடனேயே கொன்று விடுகின்றார்கள் எனில் பட்டணத்திலுள்ள படித்த மேதைகளோ அந்தப் பெண் சிசுக்கள் இந்த உலகைப் பார்ப்பதற்கு முன்னரே பெண் குழந்தை என்பதையறிந்து கருவிலேயே அதை கொலை செய்து விடுவதைப் பார்க்கிறோம். கருவிலேயே செய்யப்படும் கொலைக்கு புதிய பெயர் சூட்டி ‘கருக் கலைப்பு’ என்று என்று வேறு அழைக்கின்றனர்.
பெண் குழந்தைகளை அற்பமாகக் கருதி அதைக் கொலை செய்பவர்களை இஸ்லாம் மிக வன்மையாகக் கண்டிக்கின்றது. அறியாமைக் காலத்தில் வாழ்ந்த மக்கள் பெண் குழந்தைகள் பிறந்ததும் அதைக் கேவலமாகக் கருதி முகம் சுளித்தவர்களாக மக்களின் முகத்தில் கூடி விழிக்க திராணியற்றவர்களாக இருந்தனர்.மேலும் அந்தக் குழந்தைகளை கொன்றுவிடலாமா அல்லது இழிவுடன் இந்தக் குழந்தையை வளர்க்கலாமா என்றும் குழம்பி வந்தனர்.இதைக் கண்டிக்கும் விதமாக அகில உலக மனிதர்களுக்கும் சத்திய நேர்வழி காட்ட தன் இறுதி தீர்க்கதரிசி மூலம் இறைவன் அனுப்பிய திருவேதத்தில் கூறுகிறான்: -
“அவர்களில் ஒருவனுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது என்று நன்மாராயங் கூறப்பட்டால் அவன் முகம் கறுத்து விடுகிறது – அவன் கோபமுடையவனாகிறான். எதைக் கொண்டு நன்மாராயங் கூறப்பட்டானோ, (அதைத் தீயதாகக் கருதி) அந்தக் கெடுதிக்காக(த் தம்) சமூகத்தாரை விட்டும் ஒளிந்து கொள்கிறான் – அதை இழிவோடு வைத்துக் கொள்வதா? அல்லது அதை (உயிரோடு) மண்ணில் புதைத்து விடுவதா? (என்று குழம்புகிறான்); அவர்கள் (இவ்வாறெல்லாம்) தீர்மானிப்பது மிகவும் கெட்டதல்லவா?” (அல்-குர்ஆன் 16:58-59)
வேறு சில மூடர்களோ ஈவு இரக்கம் என்பது சிறிதுமின்றி பெண்ணாகப் பிறந்த ஒரே காரணத்துக்காக அந்தப் பச்சிளம் குழந்தையை துடிதுடிக்க உயிரோடு புதைத்து வந்தனர். நமதூர்களில் கள்ளிப்பால், அரளிவிதை, நெல் மணிகள் கொடுத்து பெண் குழந்தைகளைக் கொல்வது போல! இஸ்லாம் இவற்றை வன்மையாக கண்டிப்பதுடன், இவ்வாறு கொலை செய்யப்பட்ட அந்த பெண் சிசுக்கள், நியாயத் தீர்ப்பு நாளில் அவைகள் எதற்காக கொலை செய்யப்பட்டது என்று விசாரணை செய்யப்பட்டு கொலை செய்தவர்களுக்கு கடுமையான தண்டணையளிக்கப்படும் என்று கூறுகிறது.
நியாயத் தீர்ப்பு நாளின் ஒரே அதிபதியாகிய ஏக இறைவன் கூறுகிறான்: -
‘உயிருடன் புதைக்கப்பட்ட பெண் (குழந்தை) வினவப்படும் போது- எந்தக் குற்றத்திற்காக அது கொல்லப்பட்டது?’ என்று- (அல்-குர்ஆன் 81:8-9)
இன்னும் சிலர் எங்கே நிறைய குழந்தைகள் பெற்றால் அவர்களை வளர்த்து ஆளாக்குவதற்கு நிறைய செல்வம் தேவைப்படுமே! அதனால் நம் செல்வம் எல்லாம் தீர்ந்து நாம் ஏழையாகி விடுவோமே என்று வறுமைக்கு பயந்து ஓரிரு குழந்தைகளுக்கு மேல் கருவுற்றால் அதைக் கருகலைப்பு என்ற பெயரில் கருவில் வைத்தே கொலை செய்கின்றனர். ஆனால் இஸ்லாமோ இதையும் கண்டிப்பதுடன் உங்களுக்கும் உங்கள் குழந்தைகளுக்கும் இறைவனே உணவளிக்கிறான்! அதனால் வறுமைக்கு பயந்து உங்கள் குழந்தைகளை கொலை செய்யாதீர்கள் என்று ஆணையிடுகிறது.
‘நீங்கள் வறுமைக்குப் பயந்து உங்களுடைய குழந்தைகளைக் கொலை செய்யாதீர்கள்; அவர்களுக்கும் உங்களுக்கும் நாமே உணவை (வாழ்க்கை வசதிகளையும்) அளிக்கின்றோம் – அவர்களைக் கொல்லுதல் நிச்சயமாகப் பெரும் பிழையாகும்’ (அல்-குர்ஆன் 17:31)
‘வாருங்கள்! உங்கள் இறைவன் உங்கள் மீது விலக்கியிருப்பவற்றையும் (ஏவியிருப்பவற்றையும்) நான் ஓதிக் காண்பிக்கிறேன்; எப்பொருளையும் அவனுக்கு இணையாக வைக்காதீர்கள்; பெற்றோர்களுக்கு நன்மை செய்யுங்கள்; வறுமைக்குப் பயந்து ;உங்கள் குழந்தைகளைக் கொல்லாதீர்கள் – ஏனெனில் உங்களுக்கும், அவர்களுக்கும் நாமே உணவளிக்கின்றோம்; வெளிப்படையான இரகசியமான மானக்கேடான காரியங்களை நீங்கள் நெருங்காதீர்கள்; அல்லாஹ் தடுத்துள்ள எந்த ஓர் ஆத்மாவையும் நியாயமானதற்கு அல்லாமல் – கொலை செய்யாதீர்கள் – இவற்றை நீங்கள் உணர்ந்து கொள்வதற்காக (இறைவன்) உங்களுக்கு (இவ்வாறு) போதிக்கின்றான்’ (அல்-குர்ஆன் 6:151)
இஸ்லாம் ஒரு மதமல்ல! மாறாக அகில உலக மாந்தர்களுக்கும் ஏற்ற இறைவனால் அங்கீகரிக்கப்பட்ட ஓர் உன்னத வாழ்வியல் நெறிமுறையாகும். இது ஒரு மனிதன் பிறந்தது முதல் இறக்கும் வரையிலான அவனது அனைத்து வாழ்வியல் அம்சங்கங்களையும் உள்ளடக்கிய வாழ்க்கைத் தத்துவமாகும். இதை முறையாகப் பின்பற்றுபவர்கள் இத்தகைய சிசுக்கொலைகளை ஒருபோதும் செய்யமாட்டார்கள். இதைச் செய்பவர்கள் எல்லாம் இஸ்லாம் என்னும் அழகிய வாழ்க்கை முறையை விட்டுவிட்டு ஒரே இறைவனல்லாத பிற இணை தெய்வங்களை வணங்குபவர்களும் இஸ்லாம் என்னும் நேரிய வழிமுறையை விட்டும் தவறியவர்களும் தான் என்று இஸ்லாம் கூறுகிறது.
இறைவன் கூறுகிறான்: -
‘இவ்வாறே இணை வைப்போரில் பெரும்பாலோருக்கு, அவர்களுடைய குழந்தைகளையே கொலை செய்வதை அவர்களுடைய தெய்வங்கள் அழகாக்கி வைத்துள்ளன; அவர்களை நாசப்படுத்தி, அவர்களுடைய மார்க்கத்தையும் குழப்பத்திலாக்கிவிட்டன’ (அல்-குர்ஆன் 6:137)
‘எவர்கள் அறிவில்லாமல் மூடத்தனமாக தம் குழந்தைகளைக் கொலை செய்தார்களோ; இன்னும் தங்களுக்கு அல்லாஹ் உண்ண அனுமதித்திருந்ததை அல்லாஹ்வின் மீது பொய் கூறி (ஆகாதென்று) தடுத்துக் கொண்டார்களோ, அவர்கள் வழிகெட்டு விட்டனர், நேர்வழி பெற்றவர்களாக இல்லை’ (அல்-குர்ஆன் 6:140)
எனவே, என தருமை சகோதர, சகோதரிகளே! நாம் சிந்தித்து செயலபட்டு சிசுக்கொலைகள் எந்த வகையில் நடைபெற்றாலும் அவற்றைத் தடுத்து நிறுத்தப் பாடுபடுவோமாக! இறைவன் காட்டும் நேர்வழியில் நடந்திட முயற்சிப்போமாக!
நோன்பு பெருநாள் திடல் தொழுகை
இந்த வருட நோன்பு பெருநாள் திடல் தொழுகை நம் ஜமாத்தின் சார்பாக இறைவன் உதவியால் நல்லவிதமாக நடந்து முடிந்தது அல்ஹம்துலில்லாஹ், ஏராளமானோர் கலந்து கொண்டு பெருநாள் தொழுகையை சிறப்பித்தனர்.
ஃபித்ரா விநியோகம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பொதக்குடி கிளையின் சார்பில்...மாநில தலைமையின் சார்பில் மாவட்டத் தலைமை கொடுத்த 13,000 ரூபாயும்,கிளையின் மூலம் வசூலான 17,000 ஆக மொத்தம் (30,000) முப்பது ஆயிரத்திற்கு, பெருநாள் உணவிற்குத் தேவையான அனைத்துப் பொருட்களும் (ஒரு பொட்டலம் 250 ரூபாய் )120 ஏழைக குடும்பங்களுக்கு பெருநாள் முதல் நாள் ஃபித்ரா விநியோகம் செய்யப்பட்டது !
நமது கிளையில் நடைப்பெற்ற ரமலான் நிகழ்வுகள்
சென்ற வருஷங்களைப் போல நோன்புக் கஞ்சி காய்ச்சி,அதை நோன்பாளிகளுக்கு வழங்குதல்,பள்ளியில் பெண்களுக்கும், ஆண்களுக்கும் இரவுத் தொழுகை ஏற்பாடு செய்தல்,நோன்பாளிகளுக்கு "இஃப்தார்" உணவு ஏற்பாடு செய்தல்,போன்றவை அல்லாஹ்வின் அருளால் இந்த வருஷமும் மிகச் சிறப்பாக செயல் படுத்தப்பட்டு வருகிறது!
தவ்ஹீத் பள்ளி தற்போதைய நிலவரம்
குர்ஆன் வசனம்
தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் பொதக்குடி கிளையின் சார்பில் பொதக்குடி பதுரியா தெரு முனையில்..பஸ் ஸ்டாப் யில் குர்ஆன் வசனம் சுவர் விளம்பரம்! 7-07-2012 அன்று செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்!
தஃவா
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பொதக்குடி கிளையில் 9-07-2012 அன்று பொதக்குடி அருகாமையில் உள்ள பாலாக்குடி என்ற ஊரைச் சேர்ந்த சகோ...துரைராஜ் என்பவருக்கு திருக்குர்ஆன் வழங்கி தஃவா செய்யப்பட்டது! அல்ஹம்துலில்லாஹ்!
மாணவரணி தேர்வு
பொதக்குடி கிளையில் 3-07-2012 ஞாயிற்றுக் கிழமை அன்று கிளை தலைவர் முஹம்மது இஸ்மாயில் அவர்களின் தலைமையில் காலை 10:00 மணியளவில் மாணவரணி தேர்வு நடைபெற்றது
மாணவரணி செயலாளர்புர்ஹான் 9788035367.
துணை செயலாளர்கள் : ரஸூல் முஹம்மது 9865540796.
முஹம்மது ஆஷிக் 9788771599
ஹாமித் 8973152212
ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு, மாணவர்களை எவ்வாறெல்லாம் பண்படுத்த முயற்சி செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
மாணவரணி செயலாளர்புர்ஹான் 9788035367.
துணை செயலாளர்கள் : ரஸூல் முஹம்மது 9865540796.
முஹம்மது ஆஷிக் 9788771599
ஹாமித் 8973152212
ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு, மாணவர்களை எவ்வாறெல்லாம் பண்படுத்த முயற்சி செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இரு இடங்களில் தெருமுனை பிரச்சாரம்
14-06-2012 அன்று மக்ரிப் தொழுகைக்குப் பின்பு பொதக்குடி கிளையின் சார்பில் "மைதீன் தெருவில் தெருமுனைப் பிரச்சாரம் நடைப்பெற்றது "மறுமைக்காக வாழ்வோம்!" என்ற தலைப்பில் சகோ..அப்துல் ஹமீது அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.
13-06-2012 அன்று மக்ரிப் தொழுகைக்குப் பின்பு பொதக்குடி கிளையின் சார்பில் "ஜலால் தெருவில் தெருமுனைப் பிரச்சாரம் நடைப்பெற்றது "வீட்டைச் சீர் திருத்துவோம்!" என்ற தலைப்பில் சகோ..அப்துல் ஹமீது அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.
கோடைக்கால பயிற்சி முகாம் முடிவுக்குப்பின்
பர்சளிப்பு மற்றும் சான்றிதழ் வழங்கிய நிகழ்வு
மே 10-05-2012 முதல் மே 24-05-2012 வரை மாணவ,மாணவிகளுக்காக கோடைகால பயிற்சி முகாம் நடைபெற்றது பயிற்சியின் நிறைவு நாள் அன்று மாணவ,மாணவிகளுக்கு பரிசும்,சான்றிதழும் வழங்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ் !!
தெரு முனை பிரச்சாரம்
26-05-2012 அன்று பொதக்குடி நாடார் தெரிவில் தெருமுனைப் பிரச்சாரம் மக்ரிபிற்குப் பின்பு நடைபெற்றது... சகோ அப்துல் ஹமீத் அவர்கள் வீட்டை சீர் படுத்துவோம்! என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்! அல்ஹம்துலில்லாஹ்.
20-05-2012 கூத்தாநல்லூரில் வரதட்சனை ஒழிப்பு மாநாட்டிற்கு சகோ பீஜே அவர்கள் சிறப்புரையாற்ற வருகை தந்தார் அவரிடம் பொதக்குடியில் புதிதாக கட்டப்பட்டு வரும் தவ்ஹீத் பள்ளியை பார்வையிட வருகை தரும்படி நமது நிர்வாகம் அவரிடம் கோரிக்கை வைத்தது,அந்தக் கோரிக்கையை சகோ பீஜே அவர்கள் ஏற்று 21-05-2012 அன்று காலை 8:00 மணியளவில் வருகை தந்தார் புதிய பள்ளியை பார்வையிட்டதுடன் தஃவா இன்னும் வீரியப்படுத்த சில ஆலோசனைகளையும் வழங்கினார்! அல்ஹம்துலில்லாஹ்!!
|
22-05-2012 அன்று மக்ரிப் தொழுகைக்குப் பின்பு பொதக்குடி 'A' பஜாரில் தெருமுனைப் பிரச்சாரம் நடைப்பெற்றது "உண்மையான தவ்ஹீத் எது..? என்ற தலைப்பில் சகோ..அப்துல் ஹமீது அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.
|
கூத்தாநல்லூரில் த த ஜ வின் புரட்சி (எதிரிகளின் சூழ்ச்சி படு வீழ்ச்சி)
கூத்தாநல்லூரில் நடந்து முடிந்த " வரதச்சனை மற்றும் மார்க்க விளக்க பொது கூட்டம் " எதிரிகளின் சூழ்ச்சியையும் மீறி மக்கள் ஆர்ப்பரித்த மாபெரும் மக்கள் கடல், தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத்திற்கு எதிராக அதன் எதிரிகள் என்னதான் காழ்ப்புணர்ச்சி என்னும் ஏவுகணையை ஏவினாலும் அதன் வளர்ச்சி ஒருபோதும் வீழ்ச்சி அடைந்தது இல்லை.....என்பதை காழ்புணர்ச்சி கயவர்கள் உணர்ந்து கொண்டால் போதும்.
பொதக்குடியில் பல்வேறு பகுதிகளில் சுவர் விளம்பரம்
இன்ஷா அல்லாஹ் கூத்தாநல்லூரில் நடைபெற இருக்கும் மார்க்க விளக்கப் பொதுக்கூட்டத்திற்கு பொதக்குடியில் பல்வேறு பகுதிகளில் 5-05-2012 அன்று சுவர் விளம்பரம் செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்.
கோடை கால பயிற்சி முகாம் ஆரம்பம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பொதக்குடி கிளையின் சார்பில்..மாணவ,மாணவியருக்கான கோடை காலப் பயிற்சி முகாம் 10-05-2012 to 19-05-2012 tntj மர்கசில் நடைபெற்று வருகிறது... ஆண்கள் 33 நபர்களும் , பெண்கள் 40 நபர்களும் இப்பயிற்சி முகாமில் கலந்து கொண்டு பயன் பெற்று வருகின்றனர் அல்ஹம்துலில்லாஹ்!
ஏகத்துவ இறை இல்லத்தின் தொடர் பணிகள்
பொதக்குடியில் ஏகத்துவப் பள்ளியின் கட்டுமானப் பணிகள் அல்லாஹ்வின் அருளால் மிகச்சிறப்பாக நடைபெற்று வருகிறது.
இஸ்லாத்தை அறிய முயலும் பொதக்குடி இல் ஒரு மருத்துவர்
(தாவா செய்து வைக்கும் பொதக்குடி TNTJ உறுப்பினர்கள்)
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பொதக்குடி கிளையில் சார்பில்...29-04-2012அன்று பொதக்குடி சற்குரு தெருவில் கிளினிக் நடத்தி வரும் முத்துச் சிதம்பரம் என்ற மருத்துவருக்கு tntj மாநில தலைமையின் மூலம் அனுப்பி வைக்கப்பட்ட புக்,குர்ஆன், cd ஆகியவைகள் வழங்கி தஃவா செய்யப்பட்டது...(இவர் ஏற்கனவே...இமயம்tv யில் ஒளிபரப்பட்ட tntj நிகழ்ச்சிகளை தொடர்ந்து பார்த்து வருபவர் ,இவராகவே மாநில தலைமைக்கு லட்டர் அனுப்பி "நான் இஸ்லாத்தைப் பற்றி அறிந்து கொள்ள ஆவலாக உள்ளேன் என்று லட்டர் அனுப்பியதால்..மாநில தலைமை இவரிடம் புக் கொடுத்து தஃவா செய்யுங்கள் என்று கேட்டுக் கொண்டதற்கு இணங்க இந்த தஃவா நடைபெற்றது இன்ஷா அல்லாஹ் வெகு விரைவில் இஸ்லாத்தை என் வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொள்வேன்...என்ரு வாக்குறுதி அளித்துள்ளார் அல்ஹம்துலில்லாஹ் !
பொதக்குடியில் நடைபெற்ற கந்தூரி விழாவைக் கண்டித்து
ஃபிளக்ஸ் போர்டு
பொதக்குடியில் நடைப்பெற்ற கந்தூரி விழாவைக் கண்டித்து பொதக்குடி த.த.ஜ. கிளையின் சார்பில் 7-04-2012 ஊரின் முக்கியப் பகுதிலும், கந்தூரி விழா நடைபெறும் தர்காவிற்கு நேரேதிரிலும் ஃபிளக்ஸ் போர்ட் வைக்கப்பட்டது, அத்துடன் தர்கா வழிபாடு வின் தீமையை விளக்கி ஒரு வீடு தவறாமல் நூடீஸ் விநியோகம் செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்.
சமாதி வழிபாடு எதிர்ப்பு தொடர் பயான் 25-03-2012
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பொதக்குடி கிளையின் சார்பில்..25-03-2012 முதல் மக்ரிப் தொழுகைக்குப் பின்பு tntj மர்கசில் பொதக்குடியில்..இன்னும் ஒரு சில நாட்களில் நடைபெற இருக்கும் கந்தூரி விழாவைக் கண்டித்து..தொடர் பயான் நடைபெற்று வருகிறது..பள்ளியின் இமாம் அப்துல் ஹமீது மஹ்ளரி அவர்கள்..."இணைவைத்தல் என்றால்.என்ன..?"என்ற தலைப்பில் உரை நிகழ்த்தி வருகிறார்! அல்ஹம்துலில்லாஹ்!
நிர்வாகிகள் மற்றும் மாணவரணி செயல்வீரர்கள் கூட்டம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் ம்வட்டம் பொதக்குடி கிளையில்...25-03-2012 ஞாயிற்றுக் கிழமை அன்று காலையில்..நிர்வாகிகள் மற்றும் மாணவரணி செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது, இதில் அழைப்புப் பணியை வீரியப்பைடுத்தும் விதமாகஆலோசிக்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்!!
வாழ்வாதார உதவி.....17-03-2012
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் பொதக்குடி கிளையின் சார்பில்...பொதக்குடியைச் சேர்ந்த ஒரு ஏழை சகோதரருக்கு வாழ்வாதார உதவியாக ...ரூபாய் 1,500 (ஆயிரத்து ஐநூறு ) 17-03-2012 அன்று வழங்கப்பட்டது ,. அல்ஹம்துலில்லாஹ் !!!
பொதக்குடியில் இஸ்லாத்தை தன் வாழ்வியலாக ஏற்றுக் கொண்ட
ராஜ முத்தையா....16-03-2012
பொதக்குடியைச் சேர்ந்த ராஜ முத்தையா என்ற சகோதரர் பொதக்குடி TNTJ மர்கசில் 16-03-2012 (வெள்ளிக்கிழமை ) ஜுமுஆ தொழுகைக்குப் பின்பு...இஸ்லாத்தை தன் வாழ்வியலாக tntj நிர்வாகிகள் முன்னிலையில் ஏற்றுக் கொண்டார், அவர் தனது பெயரை ராஜா முஹம்மது என மாற்றிக் கொண்டார், அவருக்கு இஸ்லாத்தைப் பற்றி அடிப்படை விஷயங்கள் சொல்லிக் கொடுக்கப்பட்டது, மேலும்..திருக்குர்ஆன் மொழிபெயர்ப்பும் அவருக்கு வழங்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்!!!
ஏகத்துவப் பள்ளியின் கட்டுமானப் பணி
அல்லாஹ்வின் அருளால் பொதக்குடியில் உதயமாகி வரும் ஏகத்துவப் பள்ளியின் கட்டுமானப் பணிகளில்...இன்று வரை முடிந்துள்ள பணிகள், பின்பகுதியில்..பெண்களுக்காக பாத்ரூம்,மற்றும் ஒளு செய்யும் பகுதி முழுமையடைந்து விட்டது, முன் பகுதியில்..ஆபிஸ் ரூம், மற்றும் ஆண்களுக்கான பாத்ரூம் முடிவடையும் தருவாயில் உள்ளது
மருத்துவ உதவி
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் பொதக்குடி கிளையின் சார்பில்...05-02-2012 அன்று பொதக்குடியைச் சேர்ந்த ஒரு ஏழை சகோதரிக்கு ,மருத்துவ உதவியாக ரூபாய் 2000 ( இரண்டாயிரம்) கிளை மர்கசில் வைத்து வழங்கப்பட்டது
கல்வி உதவி
TNTJ திருவாரூர் மாவட்டம் பொதக்குடி கிளையின் சார்பில்... பொதக்குடியைச் சேர்ந்த ஒரு ஏழை மாணவனின் மேற்படிப்பு கல்வியைத் தொடர ,ரூபாய் 7000 (ஏழாயிரம்) (22-11-2011,செவ்வாய் கிழமை) அன்று வழங்கப்பட்டது!
குறிப்பு: தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக இதே மாணவனுக்கு கல்வி உதவியை TNTJ பொதக்குடி கிளை வழங்கி வருகிறது! அல்ஹம்துலில்லாஹ்!
எல்லா புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே !
குறிப்பு: தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக இதே மாணவனுக்கு கல்வி உதவியை TNTJ பொதக்குடி கிளை வழங்கி வருகிறது! அல்ஹம்துலில்லாஹ்!
எல்லா புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே !
தினசரி,மற்றும் மாதாந்திர காலண்டர் ஒன்றின்
விலை: ரூபாய் 40
மாதந்திர காலண்டர்
வாழ்வாதார, உதவி
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருவாரூர் மாவட்டம் பொதக்குடி கிளையின் சார்பில், பொதக்குடி ஜலால் தெருவைச் சேர்ந்த ஒரு ஏழைச் சகோதரிக்கு வாழ்வாதார உதவியாக 26-12-2012 அன்று ரூபாய் 4000 (நான்காயிரம்) வழங்கப்பட்டது !
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருவாரூர் மாவட்டம் பொதக்குடி கிளையின் சார்பில், பொதக்குடி ஜலால் தெருவைச் சேர்ந்த ஒரு ஏழைச் சகோதரிக்கு வாழ்வாதார உதவியாக 26-12-2012 அன்று ரூபாய் 4000 (நான்காயிரம்) வழங்கப்பட்டது !
பொதக்குடி கிளையில்..பல்வேறு இடங்களில்
சுவர் விளம்பரம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் பொதக்குடி கிளையின் சார்பில் ... முஸ்லிம்களுக்கு தமிழக அரசு வழங்கியுள்ள இடஒதுக்கீட்டை அதிகரிக்க வலியுறுத்தியும்,, மத்திய அரசு முஸ்லிம்களுக்கு இந்திய அளவில் 10% இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்தியும் "தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் பிப்ரவரி '14' அன்று நடைபெறும் போராட்டத்தை வலியுறுத்தி பொதக்குடி கிளையில் பல்வேறு இடங்களில் சுவர் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது!
சுவர் விளம்பரம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் பொதக்குடி கிளையின் சார்பில் ... முஸ்லிம்களுக்கு தமிழக அரசு வழங்கியுள்ள இடஒதுக்கீட்டை அதிகரிக்க வலியுறுத்தியும்,, மத்திய அரசு முஸ்லிம்களுக்கு இந்திய அளவில் 10% இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்தியும் "தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் பிப்ரவரி '14' அன்று நடைபெறும் போராட்டத்தை வலியுறுத்தி பொதக்குடி கிளையில் பல்வேறு இடங்களில் சுவர் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது!
இறை இல்ல கட்டுமான தொடர்ச்சி
அல்லாவின் பேரருளால் பொதக்குடியில் உதயமாகும் ஏகத்துவப் பள்ளியின் கட்டுமானப் பணிகள்......அல்லாஹ்வின் உதவியால்.. நாளுக்கு நாள் கட்டிடம் வளர்ந்து வருகிறது!இன்றைய தேதிவரை நடந்துள்ள பணிகளை தற்போது பார்க்கிறீர்கள்!
மாற்று மத சகோதரருக்கு தாவா
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பொதக்குடி கிளையில்... கொரடாச்சேரியைச் சேர்ந்த செல்வம் என்பவருக்கு இஸ்லாம் சம்பந்தப்பட்ட அடிப்படை கொள்கை எடுத்துரைக்கப்பட்டது, அவர் அனைத்து விஷயங்களையும் முழுமையாக கேட்டறிந்து விட்டு "இப்படிப்பட்ட சிறப்பான கொள்கையை எடுத்துரைக்கும் "குர்ஆனை எனக்குத் தாருங்கள் என உரிமையுடன் கேட்டார். அத்துடன் ''''இந்தக் குர்ஆனை என் குடும்பத்துடன் சேர்ந்து படிக்கிறேன்.எனக்கும் என் குடும்பத்தினருக்கும் தெளிவு கிடைக்க இறைவனிடம் பிரார்த்தியுங்கள்" எனவும் கேட்டுக்கொண்டார்! அவரை நமது மர்கஸ்வுக்கு அழைத்து 16-12-2011 அன்று அவருக்கு குர்ஆனும்,இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம் புத்தகம் மற்றும் CD யும் வழங்கப்பட்டது அவரின் நேர்வழிக்காக இறைவனிடம் பிரார்த்திப்போம்!